ஐயா நான் கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் வேண்டும்....வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம்..வரும் என்பது ஒரு அனுபவம் என்று நீங்கள் கூறுகிறிர்கள்..ஆனால் இன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் மனித பிறப்பு உண்டு...அவர்களுக்கு மட்டுமே எதற்கு இந்த மனித பிறப்பு..கடவுள் ஏன் பிரித்துப்பாற்கிறார்..பாவத்தை மட்டுமே செய்து இன்பத்தை அடையும் மனித பிறப்பு உண்டு...ஏன்?
மனிதர்களை இறைவன் படைப்பதில்லை. இறைவனின் படைப்பாக இருந்தால் அது அழியாது. மனிதர்கள் தங்களின் கர்மாவுக்கு ஏற்ப பிறப்பெடுக்கிரார்கள். இன்பமோ துன்பமோ எதை ஒருவன் அனுபவிக்க வேண்டுமோ அதுவே அவனை வந்து அடைகிறது. அதனையே அவன் அனுபவம் செய்கிறான். அத்தனை மனிதர்களின் கர்மாவும் வெவ்வேறாக இருப்பதனால் அவர்களின் வாழ்க்கையும் வெவ்வேறாக உள்ளன.
ஐயா நான் என்ன பாவம் செய்தேனோ தெரியல 15 வயது மகனை பரிகொடுத்து பாவியாக நிற்கிறேன் ஐயா. 37 வயதோடு என் நிம்மதி என்னை விட்டு போய் விட்டது ஐயா. தினம் தினம் நெருப்பில் விழுந்த புழுவாய் துடிக்கிறேன் ஐயா. எப்போது எனக்கு சாவு வரும் என்று. ஆசையாய் இருக்கிறேன் ஐயா
வணக்கம் ஐயா, பொதுவாக ஆறுதல் கூறும் பழக்கம் எனக்கு கிடையாது இப்போது உங்களுக்கும் நான் ஆறுதல் சொல்லவில்லை. உங்களுக்கு புரிதல் உண்டாவதற்காக சில விளக்கங்கள் சொல்கிறேன். ஒரே காட்டுக்குள் ஆயிரம் மரங்கள் இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனி மரம் தான். ஒரே குடும்பத்தில் உறவோடு வாழ்ந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தனி மனிதன் தான். இந்த உலகத்திற்கு வருகின்ற ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு நோக்கத்துடன் கடமையை நிறைவேற்றுவதற்காக பிறப்பெடுத்துகின்றன. பிறப்பின் நோக்கத்திற்கு ஏற்ப உடலையும் குடும்பத்தையும் உறவுகளையும் நட்புகளையும் பெறுகின்றன. மற்றபடி எந்த ஆன்மாவுக்கும் மற்றொரு ஆன்மாவுடன் தொடர்பு கிடையாது.
உங்களுக்கு மகனாக பிறந்த ஒரு ஆன்மா தனது பிறப்பின் நோக்கம் முடிந்தவுடன் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப சென்று விட்டது. உங்களுக்கு இந்த உலகில் இன்னும் செய்ய வேண்டிய வேலை மீதம் இருப்பதினால் நீங்கள் இன்னும் இங்கே இருக்கிறீர்கள். மனித வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் தவிர்க்க முடியாத ஒரு விஷயம் யாருக்கு எப்போது மரணம் வரும் என்பது யாருக்கும் தெரியாது. "உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி, விழிப்பது போலும் பிறப்பு." இன்று திருவள்ளுவர் கூறுவதைப் போன்று மரணம் என்பது சாதாரண உறக்கத்தை போன்றது தான். இங்கே உறங்கிய இந்த ஆன்மா வேறொரு இடத்தில் பிறப்பெடுக்கிறது. உடலை விட்டு விலகிய ஆன்மாவுடன் நமக்கு தொடர்பு இல்லை மேலும் அதன் நிலையை நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை. அதன் காரணமாக மேலும் பற்றின் காரணமாக நாம் வேதனையை அனுபவிக்கிறோம். புத்திர சோகம் என்பது மிகப்பெரிய வேதனை தான் ஆனாலும் இதுவும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து செல்ல வேண்டிய ஒரு அனுபவம் தானே ஒழிய இது உங்கள் வாழ்க்கையின் முடிவு கிடையாது. மனித வாழ்க்கை என்பது பள்ளிக்கூட பாடத்தை போன்றது பல்வேறு பரீட்சைகளும் சோதனைகளும் வந்து கொண்டு தான் இருக்கும் அனைத்தையும் தாண்டி செல்பவர்கள் மட்டுமே இந்த வாழ்க்கையில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப், பற்றுக பற்று விடற்கு." பற்று இல்லாத இறைவனின் பாதங்களை பற்றிக் கொள்ளுங்கள் பற்றினால் உண்டான அத்தனை வேதனைகளும் உங்களை விட்டு நீங்கிவிடும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் வாட்ஸ்அப் மூலம் பேசலாம். வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள் 60103343350
ரொம்ப நன்றி ஆனா எனக்கு எதுக்கு தண்டனை கொடுக்கணும் அது உங்களை கேட்டு பிரயோஜனமில்லை சரி நீங்க என்ன பாவம் பண்ணீங்க இந்த பூமியில் பிறக்க அதையாவது கொஞ்சம் சொல்லுங்க