எண்ணம்-இயக்கம்: அழகிய சிற்றம்பலமுடையான்
இசை: சங்கீத ரத்னா M. பிரவிஷ் ஆனந்த்
பாடியவர்கள்: அன்பகம் மாணவர்கள்
G.சாதனா
B. நீரஜ்
K. சிருஷ்டிகா
J. சஹானா
L. K. சவிதா ஸ்ரீ
S. V. கணேஷ் அர்ஜுன்
A. தேஜஸ்வி
G. சுபாஷ் கௌதம்
S. பாரதி
P. G. இந்துமதி
கீ-போர்டு: R. ரமணா கணேஷ்
ஒலிப்பதிவு & வீடியோ எடிட்டிங் : N. சபரி வாசன்
ஒளிப்பதிவு: S. V. பாலாஜி
ஒலிப்பதிவு கூடம்: ADS Studios
திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகம்
அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோகைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்
காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்பூவினைக்கொய்து மலரடி போற்றுதும்நாம் அடியோம்தீவினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்
முலைத்தட மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்டவிரிசடையீர்இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
விண்ணுலகாள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரேகண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
மற்றுஇணை இல்லா மலை திரண்டன்ன திண் தோளுடையீர்கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மைகொல்லோசொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்செற்றெமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்
மறக்கு மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கேஉருகிமலர் கொடுவந்துமை யேத்துதும் நாம் அடியோம்செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரேதிருவிலித் தீயினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்துதோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம்சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்பாக்கியமின்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
பிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான்இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே.
27 авг 2024