சங்கீதம் 104:33
நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
வாருமையா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம்
ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா
களித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய்
நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய்
உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்கியம் அளித் தாண்டருள்வாய்
Music Credits: Servants of God
Edits: Trumpet Studios
11 окт 2024