திரு பவா செல்லதுரை ஐயா அவர்களின் கதைசொல்லி வாயிலாக முதன்முதலில் தங்களது அறம் கதையை கேட்டறிந்தேன். அதில் கெத்தேல் சாயபு பாத்திரத்தை பவா சார் அவ்வளவு அற்புதமாக விளக்கி இருப்பார். கெத்தேல் சாயபு அவர்களை மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி. வறியவர்களிடேயும், எளியவர்களிடேயும் மட்டுமே அறத்தின் விழுமியங்கள் யாரும் சொல்லி கொடுக்காமலேயே இயற்கையாகவே பூத்து குளுங்குகிறது. நன்றி.
என்ன சொல்றதுன்னே தெரியல எனக்கு இந்த கோட்பாடு என்னை உண்மையில் நெகிழ வைத்தது. ஏற்கனவே பாரதி பாஸ்கர் அவர்கள் வாயிலாக இந்த கதையை கேட்டிருந்தாலும் அதை எழுத்தாளரே சொல்லிக் கேட்கும்போது இன்னும் நெகிழ்ந்து போனேன். தேடுகிறேன் வெகு விரைவில் அந்த புத்தகத்தை அந்த அற அமுதத்தை பருக வேண்டும் என்று... குழந்தைகளுக்கு இந்த அறம் வீடுகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் பள்ளி பாடப் புத்தகங்களில் கட்டாயம் இவை இடம்பெற வேண்டும். ஒட்டுமொத்த சமுதாயமும் நாடும் அறத்தை நோக்கி பயணிக்கும் போது தான் அந்த தேசம் மிகச் சிறப்பானதாக இருக்க முடியும். எழுத்தாளருக்கு நன்றி.❤