அம்மாவின் அன்பு பாறைகளுக்கிடையே பாய்ந்து வரும் அருவி. மற்றதெல்லாம் நீர்க்குமிழி. அம்மாவின் நினைவு களில் உயிரில் கலந்து கடந்த காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தெய்வ வேறுபாடின்றி எல்லாரும் வணங்கும் அம்மா. உறவுகளை எட்டுவதற்கும் , அன்பை சொரிவதற்கும் அம்மா. ஆத்மாவின் தாகம் ராகம் அம்மா. அம்மாவின் கல்லறை நோக்கி நடைபோடும் கவிஞன், காலந்தோறும் பாடும் பாடல் அம்மா. இசைவாணன்....தனக்கே உள்ளபடி பாடி பரவசப்படுத்துகிறார் அம்மா....வாழ்த்துங்கள்!.
அம்மா என்று சொல்ல கிடைக்கும் ஆனந்தம் வேறு எந்த சொல்லிலும் கிடையாது.... அந்த தேவதைக்கு இந்த பாடலே சமர்ப்பணம்... தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை தன் தாயின் அன்பை அறியாது, இதனால் தாய் அன்பு இல்லை என்று ஆகாது... அவளுக்கு ஈடு எவளும் இல்லை... தாய்க்கு பின் தாரம் என்று சொல்லி கேட்டேன், அதில் எனக்கு உடன்பாடு இல்லை... அன்னை அன்பு எதற்கும் சமம் ஆகும்? வானளவு மதிப்பு கொடுத்தாலும் அன்னை கால் தூசிக்கு சமம்.... வரிகளும் அருமை வரிகளின் கருத்தும் அருமை... நல்ல பாடலுக்கு நன்றி அப்பா ❤️❤️
எனது அன்பான வேண்டுகோளுக்கு தங்களின் இதய செவியை கொடுத்தும் அதைஏற்றும் புதியதாக SUSCRIBERS-ஆக isaivanan official -ல் இணைத்துக்கொண்ட என் அன்பான தமிழ்நெஞ்சங்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்-வாழ்க வளமுடன்-என்றென்றும்-உங்கள் இசைவாணன். Reply