அருமை ஐயா.வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத அளவிற்கு மனதில் பதிந்து விட்டது . உங்களுக்கு தமிழ் மீது இப்படி ஒரு ஆர்வம் வர காரணம் யார்? உங்கள் ஆசிரியராக அல்லது உங்கள் தமிழ் மொழி மீது நீங்கள் கொண்ட பற்ற தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
ஐயா-அய்யா இந்த வேறுபாடு எனக்கு தெரியவில்லை என்ற காரணத்தால் தனிப்பட்ட முறையில் உங்களிடம் கேட்டேன், இதற்க்காக ஒரு காணொளி பதிவிட்டதற்க்கு மிக்க மகிழ்ச்சி நீண்டநாள் சந்தேகம் முடிவுற்றது.🙏🙏🙏🙏🙏
மிகச் சிறந்த தமிழ் ஆசிரியர்.... தமிழ் இலக்கணம் -கணிதம் நிறைந்தது.. வியப்புக்குரியது... சமுத்திரத்தின் ஆழத்தை அளந்து விடலாம்.... ஆனால் தமிழின் ஆழத்தை யாராலும் அளவிடமுடியாது.
தங்களுடய விளக்கம் தமிழை வளர்த்தார் எனக்கூறிக்கொள்ளும் கட்டுமர குடும்பத்திற்கு புரியுமா? நீண்ட நாள் விளக்கம் தெரியாமல் இருந்தேன் இப்போதுதான் புரிந்து கொண்டேன். தங்களுடைய தமிழின் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள் ஐயா.
நீண்ட நாள் சந்தேகம் தெளிந்தது ஐயா, அய்யா என்பது உறவு முறையில் பெரியவர்களை அழைக்க வேண்டும் என்ற செய்தி புதிதாக கற்றுக் கொண்டேன். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏
நான் 8 படிக்கும்போது ஒரு கட்டுரையில் ஐயா என்று எழுதினேன். அதற்கு என்னுடைய தமிழ் ஆசிரியர் என்ன சொன்னார் தெரியுமா?. இந்த ஐயா எல்லாம் எப்பவோ போய்விட்டார். இந்த ( அய்யா ) தான் சரி என்று கூறினார்.. அவர் கூறியது தவறு என்று எனக்கு இப்போது புரிகிறது.. தங்களுடைய தெளிவுரை க்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
ஆசிரியருக்கு வணக்கம். ஐ தனித்து ஒலித்தாலோ அல்லது ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் இடத்தில் வந்தாலோ அதற்கு இரண்டு மாத்திரை. சொல்லுக்கு முதலில் வந்தால் ஒன்னரை மாத்திரை. இடையிலும் கடையிலும் வந்தால் ஒரு மாத்திரைதான். ஆகவே ஐயா எனச் சொல்லும் போது இங்கு ஐ ஒன்னரை மாத்திரை அளவுதான் ஒலிக்கும். அய்யா எனும் போது முதலிரண்டு எழுத்துகள் சேர்ந்து அதே ஒன்னரை மாத்திரை ஒலிக்கும். ஆனால் அய் என்பதற்கு பொருளில்லை. ஐகாரக்குறுக்கம். தங்களின் அனைத்து கணொலிகளையும் காண்கிறேன். மிகச்சிறப்பு. உங்களிடம் பேச விருப்பம் உண்டு.
தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு கூட நிறைய பிழை ஏற்படுகிறது. (என்னையும் சேர்த்தே சொல்கிறேன்)காலத்தின் கட்டாயத்தில் எல்லா இடங்களிலும் தமிங்கிலிஷ் தான். (தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதுவது).யாரிடமும் சரியாக எழுத வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. இந்த ஆண்டு தமிழ் பரீட்சை எழுத 50000மாணவர்கள் வரவில்லை என்பது மிக வருந்த வேண்டிய செய்தி. என்ன செய்வது என புரியவில்லை.நிறைய இது போன்ற காணொளி போடவும். ஒற்றெழுத்து மிகும் இடங்கள்,மிகா இடங்கள் பற்றி போடவும்
ஐயா; மொழிக்கு முதலில் வரும் எழுத்து தனக்கு உரிய மாத்திரை யிலிருந்து குறைந்து தானே ஒலிக்கும் .... அப்படி என்றால் 'ஐ ' என்ற எழுத்து 1அரை மாத்திரை தானே பெற்று வரும்..
பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்! ஐயா, அய்யா வேறுபாடு மற்றும் திருத்தம் அறிந்துகொண்டேன். பொருளியல் - பொருள்இயல் ன்பதை எழுதும் முறை குறித்து சரியான விளக்கம் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
ஐயா என்ற சொல்லை ஏன் பயன்படுத்தவேண்டும் என்று அழகாக விளக்கினீர்கள். நன்றி. ஆனால் உறவுமுறையில் உள்ள பெரியவர்களை ஏன் அய்யா என்று கூறவேண்டும் என்று சொல்லவில்லையே? அவர்கள் பெருமை, தலைமைத் தகுதி, மரியாதைக்கு உரியவர்கள் இல்லையா? ஐயா என்பதே அர்த்தம் நிறைந்த சுத்தமான தமிழ்ச்சொல். அதையே அனைவருக்கும் பயன்படுத்தவேண்டும்.
சிலர் என்பதைவிட அரசியல் தலைவர்களை சின்ன அய்யா மருத்துவர் அய்யா என தவறாக எழுதிவருகின்றார் சுட்டிக்காட்டி விளக்கம் நான் கேட்டிருந்தேன்.தங்களின் சுட்டிக்காட்டுங்கள் மிக்க நன்றி ஐயா.தென்தமிழகத்தில் அப்பாக்களை ஐயா என்று அழைக்கும் கடைசி தலைமுறை நாங்கள்தான்.
நம்ம ஐயா கமலஹாசன் அவர் பங்குக்கு 'மையம்' என்பதை "மய்யம்" ஆக்கி வைச்சிருக்காரு. இனிமேல் நானும் 'ஆலயம்' என்பதை 'அாலயம்' என்று எழுதலாமான்னு கேட்டா உடனே கோவிச்சுகுறாருங்க. இதில் மையம் என்பது சரியா அல்லது மய்யம் என்பது சரியா என்று நீங்கள் கூறுங்கள் ஐயா. அவருக்குப் புரியாவிட்டாலும் நாங்கள் தெரிந்துகொள்கிறோம்.
ஒற்றை எழுத்து எங்கே வரும்? Pls make one video it will help us to create right sentences without any mistake. I couldn't place consonant in right place. I feel ashame when I struggle in this place. Pls save me from the mistake without doing again.
ஐயா-அய்யா இந்த வேறுபாடு எனக்கு தெரியவில்லை என்ற காரணத்தால் தனிப்பட்ட முறையில் உங்களிடம் கேட்டேன், இதற்க்காக ஒரு காணொளி பதிவிட்டதற்க்கு மிக்க மகிழ்ச்சி நீண்டநாள் சந்தேகம் முடிவுற்றது.🙏🙏🙏🙏🙏