காண் = காட்சி = ஒளி ஒலி = சத்தம் எனவே, ஒளியொலி என்பதும் காணொலி என்பதும் ஒன்றுதானே. ஒளியும் ஒலியும் என்பதைத்தான் இப்போது கலைச்சொல்லாக்கி காணொலி என்று கூறுகிறார்கள் என்பது எனது கருத்து.
வணக்கம் அம்மா. தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி. இருப்பினும் பொதுவில் இவை இரண்டும் பயன்பாட்டில் உள்ளதை நாமறிவோம். முன்பொருமுறை, வேர்ச் சொல்லாய்வறிஞர் இச்சொல்லுக்கு மாற்றுப் பொருள் வழங்கியதை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்குமாயின் மேலும் நாம் துளாவலாம். நன்றி.
Vision + Audio = Video காட்சி + ஒலி = காட்சியொலி காட்சியொலி என்பது உம்மைத்தொகை காட்சியும் ஒலியும் என்று விாியும் . காட்சி என்ற சொல்லின் பகுதி ' காண் ' காட்சியொலி என்ற சொல்லின் சுருக்கமே காணொலி . ஒலியைக் காண முடியுமா ? என்ற கேள்விக்குப் பாரதியின் ' இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே...' மற்றும் கம்பனின் ' செவிநுகா் கனிகள் ...' ஆகிய தொடா்களையே பதிலாகக் கொள்ளலாம் . செவியால் தேனையும் , கனிகளையும் சுவைக்கும்போது , ஒலியைக் காண முடியாதா ? ஓா் உறுப்பின் செயலை மற்றோா் உறுப்பின் மீது ஏற்றிக் கூறுவது இலக்கணத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றே. காணொலி , காணொளி வினைத்தொகை ஆகா . ' காண் ' வினைமுற்று . ' காண் அதை ' என்பதை அதைக் காண் . என்று எழுதலாம் .
வணக்கம்.. Video என்பதற்கு ஒளியும் ஒலியும் என்ற தமிழாக்கம் முன்பு பயன்படுத்தப்பட்டது. கணிப்பொறி என்ற சொல் கணினி என்று கலைச்சொல்லாக மாறியது போல ஒளியும் ஒலியும் என்ற சொல் காணொலி என்று கலைச்சொல்லாக்கம் செய்யப்பட்டுள்ளது. காண் = காட்சி அதாவது ஒளி ஒலி = சத்தம் எனவே ஒளியும் ஒலியும் இணைந்தது காணொலி என்பது எனது கருத்து.. காணொலி என்பது வினைத்தொகை அல்ல.. ஒளிஒலி என்பதன் கலைச்சொல்லாக்கம். ஒளிஒலி என்பது உம்மைத்தொகை.. நன்றி..
வணக்கம் விஷ்ணு பிரியா அக்கா அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி நன்றி அனேக நன்றிகள் அனைவருக்கும் உங்கள் முயற்சி சிறக்கட்டும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் தங்களின் கற்பித்தலுக்கு நன்றி நன்றி அனேக நன்றி
வணக்கம் அம்மா சிறப்பாக கூறி இருக்கிறீர்கள். சில காணொளிகளில் விழியம் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த சொல் எப்படி உருவாக்கப் பட்டது என்று பதிவிடுங்கள். நன்றி
அருமை மிக்க நன்றி Radio வை நாம் வானொலி என்று சொல்கின்றோம் அது ஒலியாககொடுக்கப்பட்டு மின்காந்த அலையாக மாறி காற்றில் மிதந்து மீண்டும் மின்காந்த அலையாகமாறி ஒலியாக நம் காதுகளை வந்தடைகிறது இந்த வானொலி என்ற சொல்லை விண்ணொலி என்று சொல்லமுடியுமா? அல்லது அந்த சொல்லை கேளொலி கேட்கும் ஒலி என்று சொல்லமுடியுமா? விளக்கம் தருக
ஒளி என்பதே காணக்கூடியது தானே. பின்னர் ஏன் காண் என்ற வினைத்தொகை தேவைப்படுகிறது. என்னைப்பொருத்த வரை ஒளியும் ஒலியும் என்பதை காண்(ஒளி) + ஒலி = காணொலி என்று குறிக்கலாம். வினைத்தொகையாக கருதாமல் இரு பெயர்ச்சொற்களாக கருதினால் காணொலி பொருத்தமாக இருக்கும்.
சில + அரை = சில அரைகள் உள்ளது சில்லரை. சில+அறை = சில அறைகள் உள்ளது சில்லறை. நாம் பணத்தை அரை அரையாக மட்டும் பிரிப்பதில்லை கால் முக்காலாகவும் வேறு விதங்களிலும் பிரிக்கலாம். அதனால் சில அறைகளாகப்(பகுதிகளாக) பகுக்கப்பட்ட பணம் - சில்லறையே சரியானது.