இந்தப் பாடல் இடம்பெற்ற இசைத்தட்டில் உமாரமணனுடன் விஜய் பாடிய பாடல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பல பிரபல அறிவிப்பாளர்களும் இப்பாடலை அறிவிப்பு செய்யும் போது விஜய் உமாரமணன் பாடியது என்று கூறினார்கள். ஏன் நான் கூட 90களில் விஜய் என்றே அறிவிப்பு செய்தேன். பின்பு எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் ஹமீது தமிழ்நாடு சென்றிருந்த வேளை இந்தப் பாடலைப் பாடிய ஆண் குரலுக்கு சொந்தக்காரர் உன்னிமேனன் என்று ஊர்ஜிதப்படுத்தி இசைத்தட்டில் விஜய் என்ற பெயருக்கு பதிலாக உன்னிமேனன் என பேனாவில் எழுதியது இன்னும் என் ஞாபகம் வந்தது. இந்தப் பாடல் சிறிய இசைத்தட்டு வடிவத்தில் உள்ளது. அத்துடன் இலங்கை வானொலி இசைத்தட்டுக் களஞ்சியத்தில் அடிக்கடி சுழலவிட்டு ரசித்த ஞாபகம் இந்த நாளிலே எம்மைவிட்டுப்பிரிந்த பாடகி உமாரமணனனுக்காக வருகிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
இந்தப் பாடல் இடம்பெற்ற இசைத்தட்டில் உமாரமணனுடன் விஜய் பாடிய பாடல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பல பிரபல அறிவிப்பாளர்களும் இப்பாடலை அறிவிப்பு செய்யும் போது விஜய் உமாரமணன் பாடியது என்று கூறினார்கள். ஏன் நான் கூட 90களில் விஜய் என்றே அறிவிப்பு செய்தேன். பின்பு எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் ஹமீது தமிழ்நாடு சென்றிருந்த வேளை இந்தப் பாடலைப் பாடிய ஆண் குரலுக்கு சொந்தக்காரர் உன்னிமேனன் என்று ஊர்ஜிதப்படுத்தி இசைத்தட்டில் விஜய் என்ற பெயருக்கு பதிலாக உன்னிமேனன் என பேனாவில் எழுதியது இன்னும் என் ஞாபகம் வந்தது. இந்தப் பாடல் சிறிய இசைத்தட்டு வடிவத்தில் உள்ளது. அத்துடன் இலங்கை வானொலி இசைத்தட்டுக் களஞ்சியத்தில் அடிக்கடி சுழலவிட்டு ரசித்த ஞாபகம் இந்த நாளிலே எம்மைவிட்டுப்பிரிந்த பாடகி உமாரமணனனுக்காக வருகிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.