Please try to make your own edible oils by giving it to a Chekku Owner. Or Make Your Own Oils : Home Machine for Extracting Oils Buy Link : amzn.to/3ghmKbN amzn.to/3g2Noql amzn.to/3z6xMtg amzn.to/3v2Jt0B amzn.to/2TIbxtj
வணக்கம் சகோ.. தரமான பதிவு.. நான் ஒரு தென்னை விவசாயி எனக்கு தெரிந்ததை பதிவு செய்கிறேன்.. கொப்பரை நல்ல வெயில் இருக்கும் போது 4நாளில் இயற்கையாகவே காய்ந்து விடும் பொதுவாக டன் கணக்கில் கொப்பரை உற்பத்தி செய்யும் வியாபாரிகள் sulfer உபயோகிக்கிறார்கள் எங்களிடம் தேங்காய் வாங்கும் வியாபாரிகள் சொல்வதுண்டு அவர்கள் பெரிய oil கம்பெனிகளுக்கு கொப்பரை supply செய்கிறார்கள்.. வியாபாரிகளை மட்டும் தவறு சொல்வதில் பயன் இல்லை நமது மக்களும் நமது வட்டாரத்தில் இருக்கும் நேர்மையான விவசாயிகளிடம் பொருட்களை வாங்க முன்வர வேண்டும் அவர்களுக்கு நல்ல வருமானமும் மக்களுக்கு தரமான பொருட்களும் கிடைக்கும்.. நன்றி சகோ
நாங்கள் மினரல் ஆயில் என்றால் பெட்ரோலிய பொருட்களில் இருந்து வருபவை என்று தான் அறிந்து இருந்தோம். அதை இவ்வளவு விளக்கமாக எடுத்துச் சொன்னீர். பாராட்டுக்கள். சாலையோர போண்டா வடை முதல் பிரைடு ரைஸ் கபாப் பெரிய பெரிய உணவகங்களும் இதே தான் நடக்கிறது.
நான் என்னுடைய தோட்டத்து தேங்காய்களை 15 நாள் நன்றாக காயவைத்து எண்ணை மரச்செக்கில் கொடுத்தால் 8 kg மிஷினில் போட முடியாது குறைந்தது 16 kg சேர்ந்தால் தான் ஆட்டித்தருவோம் என்று வைத்து விட்டு போங்க ரெடி ஆனதும் கூப்பிடுகிறோம் என்று வாங்கி வைத்து விட்டார்கள், அன்று மாலையே எதார்த்தமான அங்கு போன போது என்னுடைய பாத்திரத்தில் தேங்காய் இல்லை அங்கு வேலை செய்பவனிடம் கேட்டால் உங்களுடைய தேங்காய் ஆட்டிக் கொன்டிருக்கிறது என்றான் நானும் வாங்கிச் செல்லலாம் என்று காத்திருந்த போது என் முன்பே நீங்கள் கூறிய அந்த ஆயிலை ஆட்டும் போதே ஊற்றி விட்டார்கள் நான் அதைப்பற்றி கேட்டதற்க்கு அது தண்ணீர் இது ஒரு மெத்தேடு என்று மலுப்பி விட்டு 8kg தேங்காய்க்கு பாதி 4லிட்டர் ஆயிலை அளந்து தந்து விட்டார்கள், எல்லா விசயத்திலும் கவனமாக இருந்தும் கடைசியில் மரச்செக்கில் நமக்கு அவர்களின் வேலையை கான்பித்து விட்டார்கள். நாளை நீங்களும் இதுபோன்ற விசயத்தில் கவனமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே நீண்ட விளக்கம்.
'எங்கோ பெய்யும் மழை யாவர்க்கும் ஆக' என்ற சொல் உங்கள் இந்த காணொளிக்கு பொருத்தமான ஒன்றாகும் என்றெண்ணி வாழ்த்துகிறேன், தம்பியின் பெயர் தெரியவில்லை, தெள்ளத்தெளிவாக யார்க்கும் புரியும்படி உங்கள் விரிவுரை விளக்கவுரை மற்றும் பரப்புரை அமைந்துள்ளது, எதுவொன்றையும் எளிதான முறையில் சிறுவர்கள் கூட புரிந்துகொள்ளும் வகையில் வழங்கும் உங்கள் சேவைக்கும் மீண்டும் ஒரு முறை பாராட்டி வாழ்த்தும் அசோக் சாம்ராட் எனும் மா. ராஜசேகரன். 🌾வரப்புயர🌾
உங்கள் நல்ல மனதுக்கு நன்றி. மக்கள் குடும்பம் எக்கேடு ஆனாலும் பரவாயில்லை ஆணால் என் குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் இந்த நரி வியாாரிகளுக்கு ஐயோ
வணக்கம் தோழர் அருமையான பதிவு கடலை எள்ளு இவைகளை என் வீட்டு உபயோகத்திற்கு தேவை விலையை கூருங்கல் என்று விவசாயிகளிடம் வாங்கி கொண்டால் விவசாயிக்கும் மகிழ்ச்சி வாங்கி கொண்டவருக்கும் நன்மை நன்றி
வெட் கிரைண்டர் போல இப்போது எண்ணெய் பிழியும் எந்திரமும் விற்பனைக்கு வந்துவிட்டது.எனவே அதை வாங்கி அதில் நல்ல தரமான விளை பொருட்களை அதில் அரைத்து சுத்தமான எண்ணையை நாமே வீட்டில் தயாரிக்க முடியும்.இது ஒன்றுதான் கலப்படம் தவிர்க்க ஒரே வழி.
அருமை.அருமை. சாதாரண மனிதக்கும் நன்றாக புரியும்படி உங்கள் வீடியோ அமைந்திருந்தது. நீங்கள் ஒரு மாபெரும் மக்கள் பணி ஆற்றியிருக்கிறீர்கள். பாராட்டுக்குரியது. அன்பு வாழ்த்துக்கள். உங்கள் மக்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும். நீங்கள் நீடூடி வாழ்க.
Dear brother இவர் சொல்லும் பரப்பின் ஆயில் மார்கட்ல என்ன விலை என்று விசாரித்து பாருங்கள் கண்டிப்பாக ரூ100 மேல் தான் இருக்கும் அப்படி அதிக விலைக்கு வாங்கி லாபம் இல்லாமல் எவனும் இந்த ஆயோக்கியவேலை செய்ய மாட்டான் . எதையும் ஆழமாக சிந்தித்து பாருங்கள் . ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆத்துக்குள்ள இறங்க மாட்டார்
உங்களது முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள் மீண்டும் நிறைய வீடியோக்கள் தொடர்ந்து நம் நாட்டு மக்களுக்கு கூறவேண்டும். இதில் இருக்கும் உன்மையான தகவல்கள் தெரியப்படுத்தியதர்க்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நண்பரே 💐💐💐💐💐💐💐 வணக்கம். நாம் தினமும் அருந்தும் பால் பற்றி உண்மைகள் தெரிய படுத்துங்கள் இப்படிக்கு CGL SR.SURESH 🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் சிறந்த விழிப்புணர்வு காணொளி.... சாதாரண தொழில் கூடங்களில் நேர்மையான வணிகங்கள் இருக்கும். ஆனால் அதுவே சர்வதேச அளவில் நடக்கும் எண்ணெய் வணிகங்களில் தான் மிக பெரிய மோசடி நடக்கிறது. எங்கேயோ குப்பையில் கொட்ட வேண்டிய எண்ணெயை மறுசுழற்சி செய்து, மக்களிடம் இது சூரியகாந்தி எண்ணெய் என்று பல விதமான பெயர்களில் விற்பனை செய்து மக்களை நோயாளி ஆக்குகிறார்கள் . ஆங்கில மருத்துவ மாஃபியாக்களின் சதி வேலை தான் இது. மக்களாகிய நாம் தான் உண்மை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும். உலகில் உள்ள எந்த அரசாங்கமும் மக்களுக்கானது அல்ல. மக்களுக்ககாக நல்லது செய்வதை போல் நடிப்பது தான் அரசாங்கத்தின் வேலை... உங்களின் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நன்றி
வீட்டில் மரம் உள்ளவர்கள் தேங்காயை நன்றாக கலர் மாறும்வரை காயவைத்து செக்கில் ஆடி ஒரு வருடம் கூட வைத்திருக்கிறோம் எந்தவித அழுகல் வாடையும் வருவதில்லை.முக்கியமாக தேங்காய் காய வைக்கும்போது வெள்ளை நிறமாக இருந்தால் 3 மாதத்திற்குள் கண்டிப்பாக ஊளை வாடை வரும். வீட்டில் கடலை,எள் வாங்கி காய வைத்து அரைக்கும் எண்ணையில் அந்த எண்ணைக்கான வாசனை அதிகம் வருவதில்லை என்பதுதான் உண்மை.மக்கள்தான் உஷாராகனும்.
நண்பா நான் சேலம் பக்கம் நாங்க செக்கு எண்ணெய் ஆட்டி பயன்படுத்துகிறோம் தேங்காய் இல் சல்பர் ஐ பயன்படுத்துகிறார்கள் இது பயர் ஒர்க்ஸ் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் ஒரு மூலப்பொருள் இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது இது மிகப்பெரிய விஷத்தன்மை வீரியம் மிக்கது
மிக நல்ல முயற்சி. அதோடு ஆயில் மெஷின் வாங்குவதற்கான link மையும் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மிக மிக நன்றி. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்
எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்ததால் இப்படி விளக்கம் தந்திருக்கிறீர்கள்.நன்றி ஆனால் இப்போது இருக்கும் எந்த ஒரு வியாபாரியும் மக்கள் நலனை பார்பதில்லை எதையாவது சொல்லி விற்பனை செய்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள் அவர்கள் தரமான பொருட்களை விற்பனை செய்தால் போதும். அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
மிகவும் தெளிவான, உண்மையான, மக்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய பதிவு/Post. அநேக மக்களின் உயிர்களை, உயிர்கொல்லும் நோய்களிலிருந்து பாதுகாக்க, தகுந்த ஆதாரங்களுடன் இப்படிபட்ட, தைரியமான பதிவை, முன்வைத்தற்கு மனமார்ந்த பாராட்டையும் ஆதரவையும் தெரிவிக்கிறேன். இதுபோன்ற இன்னும் அநேக உண்மைகளைப் பகிர த் தயங்காதீர்கள்.
மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு நண்பரே. மக்களுக்கு உண்மையில் பயன்தரக்கூடிய பதிவு இது. ஆனால் நம் மக்களுக்கு நல்லது எதுவுமே ஆகாதே!?உங்களது முயற்சியும் அக்கறையும் பதிவில் தெரிகிறது. Subscribe செய்துவிட்டேன்... இந்த பதிவு போட்ட நண்பர் இளையராஜா இன்னமும் வேறெந்த பதிவும் இந்த பக்கத்தில் போடவில்லையா? அவருக்கு கலப்படக்காரர்களால் ஏதும் தீங்கு நேரிட்டதா? விவரம் அறிந்தவர்கள் அல்லது இந்த பக்கத்தின் அட்மின் தவறாமல் சொல்லவும்.
பொதுமக்களுக்கு உண்மையில் ஒரு அருமையான பாடம். இந்தக்காலத்தில் எந்தப் பொருளையும் நம்பி வாங்கமுடியவில்லை. ஆனால் அந்த லிக்விட் பாரஃபின் கதை ரொம்ப ரொம்ப மோசம். கலிகாலம்.
அருமையான விழிப்புணர்வு பதிவு நம்மை ஆளும் அரசுதான் மக்கள் நலன் கருதி கலப்படம் செய்பவனை மரணதண்டனை கொடுக்க வேண்டும். சவுதி அரேபியாவில் உள்ள இறைவனின் சட்டம் தேவை
மிகத் தெளிவாக அருமையாக நல்ல நல்ல விளக்கங்கள் கொடுத்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி உங்கள் பணி சிறப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக எங்களது வாழ்த்துக்கள்
மிகவும் அதிர்ச்சி அளித்த ஆனால் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு. வானிபர்களுக்கு மனிதர்களின் ஆரோக்கியம் முக்கியமல்ல.லாபம்தான் முக்கியம்.இதுபோல படிவுகள் தொடரவேண்டும்.
மிக்க நன்றி மிகச்சிறப்பாக மிகத்தெளிவான பதிவு நீங்க நல்லா இருக்கனும் சிறந்த விழிப்புணா்வு பதிவு சுத்தமான கடுை தேங்காய் ௭ண்ணை தருவீா்களா கடலை ப்பருப்பிலும் சல்பா் சோ்க்கிறாா்களா
இந்த நிகழ்வு பார்ப்பதற்கு முன் கலப்படம் கம்மியா இருந்திருக்கும் இது பார்த்தபின் கலப்படம் அதிகமா செய்வார்கள் நீங்கள் பொது மக்களுக்காக வெளியிட்டீர்கள் அவர்கள் வியாபாரம் செய்ய பார்க்கிறார்கள்
சகோதரர் கேடெடதாள் ஒய்ட்ஆயில் கலப்படத்தை கன்டுபிடிக்கலாம். என்ன்யை வானலில் தனியாகவோ இல்லை அப்ளம் மாதிரி பொருள்களை பொரிக்கும் போது என்னை பகையை சுவாசித்தாள் (முகர்ந்தாள்) அந்த என்னைகுறிய மனம் ஙரும் இல்லையென்றால் கரப்பட ஒயிட் ஆயிலின் கெட்டவஅடை மேலோங்கியிருக்கும் .உங்பளுக்கு சரியாக கன்டுபிடிக்க ம்டியவுல்லை என்றில் தனியாக ஒயிட் ஆயில் அரைலிட்டர் வாங்கி அதை புகைவரும் அளவு சூடேற்றி மனத்தை நினைவில்ஙைத்து பிரகு அதை சுலபமாக கன்டுபிடிக்ஙலாம்.