எனக்கு வயது 51 ஆயிரம் அல்ல லட்சக்கணக்கான வீடியோக்கள் கேட்டுமிருக்கிறேன் எந்த சந்தேகத்துக்கு இடமில்லாமல் அருமையான விளக்கம் யாரும் சந்தேகமே கேட்க முடியாத அளவுக்கு அருமையான பதிவு
முதல் முதலாக ஒரு வீடியோ, சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறியது மட்டுமல்ல, subscribe பண்ணுங்க, பெல் பட்டன click பண்ணுங்க, அடுத்தவங்களுக்கு forward பண்ணுங்கன்னு கெஞ்சாமல் வீடியோ போட்டது மிகவும் பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துகள் !
இன்று சுக பேதி செய்து பார்த்தேன். இவர் சொன்ன முறை படி. காலை 7.15 மணிக்கு ஆரம்பித்து கிட்டத்தட்ட 10.30 மணிக்கு முடிந்து. முதல் ஒரு மணி நேரத்தில் 3 டம்ளர் குடித்தும் 2 முறை மட்டுமே பேதி ஆகியது. குமட்டல் இருந்தது. ஆனால் வாந்தி வரவில்லை. எது கழித்து சிறிது உப்பு நீர் மட்டும் வெளியேறியது. அதன் பிறகு சீரான இடைவெளியில் கரைசலை பருகினேன் . 12 முறை பேதி ஆகியது. எந்தவொரு அசதியையும் உணரவில்லை. கடைசியில் எல்லா கரைசலை குடித்த பிறகும் வெளிறிய மஞ்சள் நீருடன் பேதி நின்றது.இடையிடையே தாகம் அதிகமாக இருந்த காரணத்தால் தண்ணீர் குடித்தேன். இரண்டாம் முறை செய்யும்போது கண்டிப்பாக முழுவதும் குடல் சுத்தம் ஆகிவிடும் என நம்புகிறேன். பயிற்சியாளருக்கு எனது மனமார்ந்த நன்றி....
இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான சமாச்சாரம் யாதெனில் குடலுறிஞ்சிகளின் work improve ஆவதா கச்சொல்லியுள்ளார்கள். அதுவே முக்கியமாக நமக்குத் தேவை. சூப்பர் வைத்தியம். வாழ்க வளமுடன் bro / sis
வணக்கம். இவர் சொன்னபடி இன்று நானும் (63 வயது) என் மனைவியும் (56 வயது) செய்து முடித்தோம். மிக எளிதான செய்முறையாகவே இருந்தது. உண்மையிலேயே இது சுகபேதி தான். என் மனைவிக்கு Citrus பழங்கள் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சலும் வலியும் வரும். எனவே அவள் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழ வகைகளை உட்கொள்ள மாட்டாள். இதில் எலுமிச்சை இருப்பதால் மிகுந்த தயக்கத்துடனேயே ஆரம்பித்தாள். முதலில் வாந்தி எடுத்துவிட்டாள். ஆனால். நான் சாதாரணமாகவே இருப்பதைக் கண்டு திரும்ப ஆரம்பித்தாள். இடை இடையே தண்ணீர் குடித்து முயன்றதில் பின்னர் சாதாரணமாக எடுத்துக்கொண்டாள். எனவே, Citrus பழவகைகளால் தொந்தரவு இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. மேடம் சொல்லிக்கொடுத்தது போலவே கடைபிடித்தேன். மிக அருமையாக வேலை செய்தது. நானும் இடை இடையே தண்ணீர் குடித்தேன். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கச் சொல்லி இந்த வீடியோவிலேயே சொல்லி இருக்கிறார்கள். எனவே அப்படி தண்ணீர் குடிப்பது மேலும் எளிமையாக்கியது. கடைசியாக சோர்வு ஏற்பட்டது. அதற்கு காரணம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்தது மட்டுமே. எனக்கு நான்காவது முறை போகும்போதே தெளிவான போக்கு ஏற்பட்டது. மொத்தம் முடிக்கும்போது 9 முறை சென்று வந்தேன். சிறுவயதில் எனக்கு பேதிக்கு கொடுக்க என் அம்மா நிறைய அவதிப்பட்டிருக்கிறார். வாந்திமட்டுமே எடுப்பேன். கடைசியில் மிகுந்த சோர்வடைந்து எதுவும் தக்காமல் துவண்டுவிடுவேன். இந்த காரணத்தினாலேயே விளக்கெண்ணெய், மாத்திரை இப்படி எந்த வகையிலும் பேதிக்கு குடிப்பதை தவிர்த்துவிட்டேன். ஆனால், இவர்கள் சொல்லிக்கொடுத்த விதம் மிக மிக அருமை. எந்தவித பக்கவிளைவும் இல்லாமல் உண்மையிலேயே சுகமான முறையில் வயிறு சுத்தமானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தருகிறது. என் மனைவியும் மிகவும் சௌகரியமாகவே உணர்கிறாள். இவ்வளவு எளிதான இயற்கை முறையை பயன்படுத்தாமல் வேறு கடினமான முறைகளை ஏன் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஆச்சரியமாகவே இருக்கிறது. எங்களுக்கு இந்த சுகபேதி முறை முழுவதும் பயனளித்தது. எங்கள் அனுபவத்தையே இங்கே தங்கள் நல் எண்ணத்திற்காகவும் முயர்ச்சிக்காகவும் நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்டிருக்கிறேன். எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றி தங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
மக்களின் நலனில் ஆர்வம் கொண்டு நேரம் வீணாவதை நினைக்காமல் நீங்கள் பேசிடும் விதம் எங்கள் மனதை சிலிர்க்கச் செய்கிறது மேலும் நீங்கள் விவரித்த ரெமிடியை நாங்கள் மதிக்கிறோம் உடல் ஆரோக்கியத்தை விவரித்த நீங்கள். மனதில் ஆரோக்கியத்தை ஏற்படுத்த உள்ளத்தின் அழுக்குகளைப் போக்க என்னென்ன வழிகள் உண்டு என்பதை நீங்கள் தெளிவாக விளக்க வேண்டும் பிறர் நல்லவர் போல் நலம் விசாரித்து விட்டு அவர் நம் முதுகுக்குப் பின் சென்று சதி வலை பின்னிக் கொண்டிருப்பது இந்த சமுதாயத்தின் அவலம் தானே?.... எனவேதான் அவர்களது உள்ளத்தின் அழுக்குகளைப் போக்க என்ன வழி என வினா எழுப்பி யுள்ளேன்!!....
இவர் கூறிய வைத்திய முறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது, அருமையான விளக்கம் கொடுத்தார், கேட்பதற்கு இனிமையாக இருந்தது, இதில் 15,40,70வது வயதுதினற்க்கு கூறினார்,15வயதுக்கு குறைவாக உள்ள 6,9,12 வயது குழந்தைகளுக்கு எவ்வளவு அளவில் கொடுக்களாம், என்று கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்,தினந்தோறும்,2வேளை மலம் கழிக்கும் குழைந்தைகளுக்கும் ,காற்று வெளியேறினாள், ஒரு கெட்ட வாடை வருகிறது அவர்களுக்கு எப்படி பட்ட வைத்தியம் செய்யளாம் என்று கூறுங்கள் மேடம்.
நேற்று இரவு வீடியோ பார்த்தேன் இன்று காலை 6:00 மணியிலிருந்து செய்து முடித்த பின்னர் தற்போது வயிறு சுத்தமாக உள்ளது உடம்பே மிக லேசானதாக உணர்கிறேன் நன்றி மேடம்
அருமையான விளக்கம். நேரத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் சொன்ன வார்த்தைகளையே சொல்லிச் சொல்லி சாகடிக்கும் கிறுக்குகளுக்கு மத்தியில் தெளிவான சமூக அக்கறையில் டாக்டர் அவர்களின் பேச்சு இருந்தது. தங்களின் தொண்டு தொடர நல்வாழ்த்துக்கள் டாக்டர்.
இரண்டு முறை செய்து விட்டேன்... இரத்த அழுத்தம் அதிமாகவில்லை.... சின்னதாக ஒரு தலைவலி வரும்... அதிகபட்சம் 90 நிமிடங்களில் வயிறு சுத்தம் ஆயிரும்... பேதி தானாக நின்று விடும்.. 2 மணி நேரம் கொஞ்சம் சோர்வாக இருக்கும்... வேலைக்கு போகும் நாள்களில் செய்ய வேண்டாம்... லீவு நாட்களில் முயற்சிக்கவும்...
@@shenaveen8144 குழந்தை வேறு உணவுகளை எடுத்துக்கொள்ளும் என்றால் பண்ணலாம்.... குறைந்தது 6மாதம் முடிந்த பிறகு முயற்சிக்கவும்... ஒரு நான்கு மணிநேரம் பால் கொடுக்க இயலாது... சோர்வாக இருக்கும்
இன்று தான் எனக்கு விடுமுறை நாள் என்பதால் காலையில் ஆரம்பித்து அந்த பிராசஸ் இப்பதான் முடிச்சிட்டு வரேன் சத்தியமா இந்த அளவுக்கு எனக்கு வயிறு சுத்தமாக வெளியேறி விவரம் தெரிந்ததிலிருந்து நான் பார்த்ததே இல்லை, வெடவெடத்து போயி மயக்கம் வரும் நிலை என்று எதையுமே நான் உணரவில்லை முழு வயிறு சுத்தமாகி கடைசியாக கொடுத்த நீர் அதே நிலைக்கு வெளியேறும் பொழுது ஒரு இலை வாடை போல அடித்தது அதுவும் முழுமையாக வெளியேற வேண்டும் என்று கூடுதலாக ஒரு சொம்பு நார்மல் தண்ணி அருந்தி விட்டு சிறிது நேரம் படுத்து இருந்தேன் அடுத்த வெளியேற்றத்தின் பொழுது அந்த வாடை வீசுவதும் போய்விட்டது சத்தியமாக இது பெயருக்கு ஏற்றால் போல சுகபேதி தான் அவ்வளவு ரிலாக்ஸாக நான் உணருகிறேன் 😊 🙏
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது நான் இன்று செய்து பார்த்தேன் முதல் 4 டம்ப்ளர் நீர் பருகி எந்த ஒரு மாற்றமும் இல்லை அப்பறம் வாந்தி எடுத்தேன் 5 வது டம்ப்ளர் குடித்த பின் பேதி ஆரம்பித்தது ஒவ்வொரு முறை பேதி ஆன பின்பும் நீர் உட்கொண்டேன் முதலில் இறுகி போயிருந்த மலம் பின்பு நீர்த்த மலம் அதன் பிறகு நீர் மட்டுமே வெளிஏறியது ஆனால் அந்த நீர் எனக்கு நல்ல மஞ்சள் நிறத்தில் உள்ளது இவர் கூறியது போல் இன்னொரு முறை அடுத்த வாரம் செய்ய வேண்டும் செய்த பின்பு எப்படி உள்ளது என்று பதிவிடுகிறேன் நிறைய வாய்வு ஏப்பம் ஆக வெளியேருகிறது அப்பப்பா வயிறு பாதி இடை குறைந்தது போல் இருக்குது
அருமை அருமை.எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல் நேரில் தங்களிடம் பேசுவது போல இருந்தது. எளிமையான பேச்சு. தீர்க்கதரசி என்று தான் சொல்ல வேண்டும். வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
She is a born Teacher and a born communicator in Tamil. Her Tamil too is a chaste language, crystal clear like her Final Cleansing with the solution of Salt & Lemon 😅
அம்மா முதல்ல உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், இந்த பேதி சம்பந்தமான விஷயம் என்னுடைய சின்ன வயசுல எங்க கிராமத்துல ஒரு பாட்டில் லேகியம் மாதிரி கொண்டு வருவாங்க அத நாங்க வருஷத்துக்கு ஒரு தடவை பயன்படுத்தி இருக்கோம் ரொம்ப பிரயோஜனமாக இருந்தது ஒரு காலகட்டத்தில் அந்த பாட்டி தவறிட்டாங்க அதுக்கப்புறம் என்ன பண்ணனும் எப்படி பண்ணனும் தெரியாம இருந்த நேரத்துல இப்பதான் உங்களுடைய இந்த ஒரு காணொளியை பார்த்தேன் எந்த ஒரு சந்தேகமும் இல்லாம தெளிவா எங்களுக்கு புரிய வச்சிருக்கீங்க என்னுடைய மனமார்ந்த நன்றிங்கம்மா.
மிக அழகாகவும் எளிமையாகவும் யாதொரு சந்தேகத்துக்கும் விளக்கமாக வார்த்தைகள் நறுக்கு தெரித்தார்போல் இருந்தது குறிப்பிட்ட கால அளவுக்குள் சொல்லவரும் செய்திகள் ஒன்றுகூட விட்டுப்போகாமல் செல்லவேண்டிய நிர்பந்தம் உள்ளதால் தாங்கள் சற்று வேகமாக பேசுவது போல் தெரிகிறது. எது எப்படியோ ?இந்த ஸ்கிரிப்ட் தயாரிப்பு மிக மிக அருமை. தெளிவான திருத்தமான உச்சரிப்பு பொருள் செறிவு மற்றும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள். ஆசிகள்
இன்றைக்கு என் கணவர்க்கு இதை முயற்சி செய்தேன்.அவர் திருமணம் ஆகி 11 வருடத்தில் பேதி ஆனது என்று சொன்னதே இல்ல.இன்று 13 முறை பேதி ஆச்சு. அவர் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார். மிக்க நன்றி.
என்ன ஒரு சுகம்.உங்களின் ஆலோசனைகள் மற்றும் உச்சரிப்பு தமிழ் மொழியில் பிரமாதம் சகோதரி அருமையான விளக்கம்... படிக்காத பாமரன் கூட எளிதாக புரியும் படி தங்களின் பேச்சு உள்ளது
சகோதரி சுகபேதி. எடுப்பதை விளக்கமாக கூறினார்கள் ஆனால் இந்த உடலை. மிகவும் சுத்த தேகமாக வைத்துகொள்ள நமது மகாசித்தர் அருள்ஜோதி வள்ளலாn கூறியதை வெட்டவெளிச்சமாக தெரிவிக்கின்றேன் நம் உடல் மனம் இறைவனிடம் ஒன்றி வாழ் திட எப்போதும் மாமிச உணவுகளைத் தவிர்த்து விடுவது. நல்லது. சமரச சுத்தசன்மார்கத்தின் படி வாழ பழகிட வேண்டுகின்றேன் மரணமில்லா பெருவாழ்வை. இராமலிங்கசுவாமி வளியுறுத்தி கூறியுள்ளார். அவற்றைப் பின்பற்றி. வாழ்க வளமுடன்
The entire perception on Siddha is changed now. - Unbelievable process.Worked well as detailed . This is my first social media comment - proud to write on a valuable post. Thank you so much Doctor.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி தேவைப்படுவதைப் போல குடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள இம்மாதிரியான ஆலோசனை அவசியம் தேவைப்படுகிறது மிக்க நன்றி ❤❤😂 தொடர்ந்து தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளத்துடன்.
மிகவும் அருமையான விளக்கம். நான் இன்று 6:50 am குடிக்க ஆரம்பித்தன். 8am 1st toilet போக தொடங்கி Dr சொன்ன மாதிரி நடக்குது. 8:50 am 6 தரம் போய்விட்டன். எனக்கு உடல் சோர்வாக இல்லை. நான் குடிக்கும் போது வெதுவெதுப்பான சூடாக்கி குடித்தன் இல்லாட்டி குடிக்க கஸ்டமாக இருந்தது . Thank you so much Dr
மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் சுகபேதி செய்யும் முறையை விளக்கத்துடன் எடுத்துக் கூறிய சுகந்தி ஜெயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு மலச்சிக்கல் உள்ளது முயற்சி செய்து பார்க்கிறேன்
வணக்கம் அம்மா, உங்க விளக்கம் மிகமிக சிறப்பு.நீங்க சொன்ன படி தயாரித்து, முதல்ல 1டம்ளர் குடிச்ச பின் 15 நிமிடத்திற்கு பின்னும் தோன்றாததால்2,3,4,5. வது முறை (15 நிமிட இடைவெளியில்)குடித்தபின் VOMITதான் வந்தது.பின் சற்றுநேரத்தில் Normal மலம் எளிதாக வந்தது.பின் தங்களின் குறிப்பின்படி செய்தேன்.கடைசியாக வெளிர்மஞ்சள் நிறத்தில் தண்ணீராய் பீச்சி அடித்தது. 5தவணை வரை மலம் வராமல், வாந்தி ஏன் வந்தது. நான் செய்ததில் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும். அடுத்தமுறையில் சரி செய்துகொள்கிறேன். நன்றி அம்மா.
அருமையான விளக்கம் யாரும் சந்தேகமே கேட்க முடியாத அளவுக்கு அருமையான பதிவு மிகவும் பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துகள். பொறுமையாக நிதானமாக தெளிவாக எளிமையாக பேசும் சகோதரிக்கு மிக்க நன்றி.
நன்றி .அழகான தமிழில் தங்கள் செயல் முறை விளக்கம்.. மிக சிறப்பு அனைவரும் புரியும் வகையில் இந்த காணொளி. தங்கள் இனிமையான உரை க்காக நான் இதை எடுத்துக் கொள்கிறேன் மகிழ்வுடன்..
En kalikambal um kamatchi ambal um enkaga unga roobathula vanthu sonnathu pola iruku. In 4 to 5 my stomach waste does not come out.depressed and very hard stomach due to stomach bloating.i taken some medicines but no use. i do this process after seen this video. I drinked this water,after half an hour all stomach wastage came out step by step clearly.i feel to very freely. Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் மேடம் இந்த சுகபதி நல்ல ரிசல்ட் கொடுக்கிறது மேடம் நன்றி மேடம் நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயமும் இதை ஃபாலோ பண்ணி எனக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது மேடம் ரொம்ப நன்றி மனமார்ந்த நன்றி
இன்று நான் செய்தேன் உண்மையிலேயே மிக சரியாக அவர் சொன்னதை போலவே நடந்தது என்னால் ஒரு லிட்டர் கரைசல் மட்டுமே குடிக்க முடிந்தது ஆனால் முழு பயனும் பெற்றேன் காலை நாலு மணி துவங்கி காலை 9 30 நிறைவேறியது நன்றி
Mam idhu varaikum na endha vdo vayum ivlo serious ahh kettadhe illa neenga pesura ovvoru words rmb rmb true rmb naal thedittu irundhen ipdi oru solution ahh unga moolama kedacha rmb happy kandippa try pannuven mam en frnds relatives ellarukkum vdo share pannitten thank u so much mam😍
எனக்கு 73 வயது. நான் இருக்கும் இடத்தில் கல்லு உப்பு ( crystals) கிடைக்கவில்லை. course தான் பாவித்தேன் . அதனால் அளவு சரியோ தெரியவில்லை. காலையில் 5.45 போல் குடித்தேன் . 6.15 போல் கடினமான மலம் கழித்தேன் . பின்னர் இரண்டு கிளாஸ் குடித்தேன். சிறிது நிமிடத்தில் 2 தடவை அதை வாந்தி எடுத்தேன் .200ml வெளியேற்றியிருப்பேன். . திடீரென தலையிடியும் தலை பாரமாக கழுத்தும் வலித்தது. படுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாயும் வறண்டு போனதால் நீர் அருந்தினேன். ஆனால் 8.30 மணியளவில் தண்ணீர் போல் மலம் மண் நிறத்தில் சென்றது. அதன் பின்னர் மயக்கமாக வந்ததால் உப்பு நீர் குடிப்பதை நிறுத்திவிட்டேன். 5௦௦mi போல் குடிக்கவில்லை . தெம்பு வர , 8.30 மணியளவில் சீனி போட்டு 500-ml to 400ml கோப்பி அருந்தினேன் . 11 மணியளவில் Blood Pressure ஐ சோதனை செய்தேன் . இயல்பாக இருந்தது . இன்னும் முற்றாக சுத்தம் அடைந்தது போல் தெரியவில்லை . மேலும் என்ன செய்ய வேண்டும் .