மிக அருமையான விளக்கங்கள், மிக எளிமையாகத் தெளிவாக விளக்குகிறீர்கள் ஐயா! முற்றிலும் உண்மை இன்றைக்கு வாழும் சாமியார்கள் உண்மையான துறவிகள் இல்லை, அவர்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள். மனதையும் புலனையும் அடக்கினால் மிகுந்த வலிமையை பெறலாம். மிக்க நன்றி! வாழ்த்துகள் ஐயா!
கணவனையே நினைத்துக்கொண்டு உடலுறவு கொண்டவளுக்கு குருட்டுக் குழந்தை எப்படி பிறக்கும் ❓ முனிவரின் விகார ரூபத்தைக் கண்டு மிரண்டு கண்களை மூடிக்கொண்டவளின் துகிலை யார் விலக்கியது ❓ இந்தக் கதை அறிவுக்குப் பொருந்தி வரவில்லை. கலவி சுகத்தில் உச்சம் அடையும் போது ஒரு சில பெண்கள் கண்களை மூடிக் கொள்வது இயல்பு ஆக வியாச முனிவரோடு இணங்கியே இது நடந்திருக்க வேண்டும் இப்படி இருக்காது என்றால் அது நிச்சயமாக கற்பழிப்பு என்றே ஆகிறது. தாசிப் பெண்ணோடு கூடி விதுரன் என்ற எவ்வித ஊனமும் இல்லாத குழந்தையைப் பெற்ற கதையை ஏற்றுக்கொள்ள முடிகிறது
கரு உருவானவுடன் அந்தக் குழந்தை எப்படிப் பிறக்கும் என்று சொல்லதெரிந்தவன் முனிவன்...ரிஷி ஞானி..........அதனால்தான் ரிஷிகள் மூலமாக சந்ததி வ்ருத்தி அனுமதிக்கப் பட்டது......மேலும்...விவாஹம் அந்தணர் வேதம் ஓத ...அக்னி சாட்சியாக நடப்பது ஆனால் நியோகம் என்று ஒன்று சமூகத்தின் அங்கீகாரத்துடன் நடப்பது.நியோகத்தின் முக்கிய அம்சம் சந்ததி வ்ருத்திக்காக நடப்பது....இதில் அந்த சந்ததி தன்னை உருவாக்கியவனை தந்தையாகவோ அல்லது தாயாகவோ கருதாது.......மேலும் விவரம் தெரிந்துகொள்ள ஆர்ய ப்ரஹ்ம சமாஜம் என்ற அமைப்பை நிறுவிய ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் புஸ்தகங்களை படிக்கலாம்.
தொல்காப்பியம் ஸ்ரீ ஸ ஷ இந்த எழுத்து ஸப்தமிகுதி உள்ள இடத்தில் பயன்படுத்த கூறும் போது திருதராஷ்டிரன் என பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் தொல்காப்பியத்திற்கு என்றால் தமிழுக்கு எதிர்த்தாரன் இந்தச் செயல் தமிழ் மொழியை அழிவுப்பாதைக்கு எடுத்துச் செல்ல வாய்ப்புகள் உண்டு ஆறுமுகநாவலர் பைபிளை தமிழ் மொழிபெயர்ப்பு போது கூட சமஸ்கிருத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் நாம் நமது இலக்கியத்தை வெளிநாட்டினர் சதியில் உருவான சமஸ்கிருதம் மறுப்பு என்ற கொள்கைக்கு பலி ஆகிவிட்டோம்
காந்தாரியின் வயிற்றிலிருந்து உதிர்ந்த பிண்டங்களை நூறு குழந்தைகள் ஆக்க முடிந்த வியாச பகவானுக்கு படகில் மச்ச கந்தியுடன் கூடித்தான் ஒரு குழந்தையை உருவாக்க வேண்டுமா ❓ ஏன் தன்னுடைய இரத்தத்துளியை வெளிப் படுத்தி ஒரு குழந்தையையாவது உருவாக்கி இருக்கலாமே ❓ மகிக்ஷாசூரன் உடலிலிருந்து கொட்டிய இரத்தத்தில் ஒவ்வொரு துளியிலும் ஒவ்வொரு மகிக்ஷாசூரன் உருவாகும் போது வியாசரின் ஒரு துளி இரத்தத்தில் ஒரு குழந்தையாவது உருவாகாதா ❓
ஏன் பராசர முனிவருக்கு ஆற்றின் சுழலை கட்டுப் படுத்த சக்தி இல்லை ஆனால் உடலுறவு கொண்ட உடனேயே பிள்ளை பிறக்க வைக்க மாத்திரம் சக்தி உண்டோ ❓மறு கரைக்குப் போன பின் அவர் எப்படி குழந்தையை உற்பத்தி செய்ய முடியும் அங்கே மனைவி என்ற உறவோ இல்லை மற்ற யாராவது ஒரு பெண்ணோ இவருடன் உடலுறவு கொள்ளக் காத்திருந்தார்களோ ❓ நான் படித்த வரையில் அப்படி ஏதும் புத்தகத்தில் பதிவாகவில்லையே. சுழல் வந்ததாகவும் தெரியவில்லை. பிறகு இவர்தானே மச்சகந்தியோட கூட ஆசைப் பட்டு பகல் பொழுதை சிறிது நேரத்துக்கு இரவாக்கி சாதாரண படகை மலர்ப் படகாக்கி அவளோடு கூடிக் களித்தார்