ஒன்றை ஒன்று போட்டிபோஉம் இரண்டு பாடல்கள் பட்டு வண்ண ரோசாவாம்.. உச்சி வகுந்தெடுத்து பாடல்கள் #ilayarsja_vs_shankarGanesh #uchivaguntheduthu #pattuvannaRosavaam #vilari #alangudyvellaichamy #pulamaipithan
நானும் மகிழ்கிறேன் எனக்கு ம் பிடித்த பாடல் கள். ரோஜா பூ ரவிக்கை காரியில் எல்லா பாடல் களும் நன்றாக இருக்கும். அதிலும் மிக அருமை யான பாடல் உள்ளது. என்னுள் ளில் எங்கோ என்று தேவதை வாணி அம்மா பாடியது. நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
இதுல சங்கர் கணேஃச் ல கணேஃச் அப்பவே சொன்னார் இளையராசா பாடல் சாயல்ல பலபாடல் போட்டிருக்கோம் அதில அன்னகிளி உன்ன தேடுது இதன் சாயல்ல ஆலமரத்துகிளி ஆளபாத்து பேசும் கிளி பாடல் அதைபோல உச்சிவகுந்தெடுத்து பாடல் சாயலில் போட்ட பாடல் பட்டுவண்ணரோசாவாம் என்று இப்படி பல பாடல்கள் போட்டிருப்பதாக கணேஃசே சொல்லிருக்கிறார்....
சங்க்கர்-கணேஷ் இரட்டையரின் "பாலாபிஷேகம்" படப்பாடலான "ஆலமரத்துக்கிளி....ஆளப்பாத்து பேசுங் கிளி" என்ற அதிஅற்புதமான பாடலின், 3-barஆரம்பஇசையே இதயம்சிலிர்க்கவைக்கும். அதைத்தொடர்ந்து 'தொகையறா' போல வரிகள் ஒன்றன் பின் ஒன்றாக ஆரம்பித்து 'மனம் வெளுத்த பச்சைக் கிளி ' என்று முடிந்து, அதேவரிகள் பல்லவியாகவும் ஆரம்பமாகும்! தேவாமிர்தம் வார்த்தைகளிலும் இசையிலும் குரலிலும் சொட்டு சொட்டாக வடிந்த வண்ணம் இருக்கும், பாடல் முழுவதும்! பாடலைப்பாடும் ஸ்ரீப்ரியா அவர்களின் பாத்திர வெளிப்பாடான "நாட்டுக்கட்டை" கவர்ச்சியும் வாளிப்பும் வனப்பும் களங்கமற்ற Innocenceம் கலந்து கட்டி 'கொப்பும் கொளையுமாக ' Visual ஆக மட்டுமில்லாமல் Vocal ஆகவும், படம் பார்த்தவர்களை உன்மத்தம் பிடிக்க வைக்கும்படிக்கு இசைவாணியின் குரலை, இரட்டையர்கள் அபாரமாக வடிவமைத்திருப்பார்கள்! (வாணி ஜெயராம் கிராமியபாணியில் பாடிய முதல் பாடல் 1974ல் வெளியான 'திக்கற்ற பார்வதி'யில் தான். அதற்குப்பின், "ஆலமரத்துக்கிளி"யில் தான் அவரது குரல் இயல்பான ரூரல்-குரலாக முழு உருவம் எடுத்தது!) ஒவ்வொரு சரணமும் முடியும்போது மட்டும் 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' TMS versionன் அந்த ஆரம்பவரிகளிடையே வரும் ஒரு Hookஐ நினைவுபடுத்தும்! கணேஷ் அவர்களின் தாளக்கட்டும் தாளலயமும் மாயாஜாலம் நிகழ்த்தும்! இயக்குனர் திலகம் K.S. கோபாலக்ருஷ்ணன் கோனார் அவர்கள் பாடலைப் படமாக்க வைத்தவிதம் அதை வேறு உயரத்துக்குக் கொண்டு சென்றது! அனைத்து தரப்பினரும் மெய்மறந்து ரசித்தனர், வாயால் தாளம் போட்டனர், " ஆலமரத்துக்கிளி " ரேடியோவிலும் குழாய்ஸ்பீக்கர்களிலும் சக்கைப்போடு போட்டபோது! இசைவாணியின் குரலுக்கு ஜென்ம ஸாபல்யம் தந்தது இந்தப் பாடல் தான். அதேபோல், SPBக்கு ஜென்ம ஸாபல்யம் தந்த பாடல்கள்: * MahaaMaestro T.R.பாப்பா பிள்ளை அவர்களின் இசையிலான "சொந்தம் இனி உன் மடியில்"(மறுபிறவி) & " வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே"(ஏன்) & " இரு மாங்கனி மாஇதழோரம், ஏங்குது மோகம்"(வைரம்) AND * சங்க்கர்-கணேஷ் இரட்டையரின் இணையற்ற "எந்தன் தேவனின் பாடல் என்ன அது ஏங்கும் ஏக்கம் என்ன"(பொன்மகள் வந்தாள்) & " அழகே உன் பெயர் தானோ, அமுதே உன் மொழி தானோ" (இறைவன் இருக்கின்றான்) & "சேலே கொடபிடிக்க காத்து ஜில்லுன்னு வீசுதடி, கொஞ்சந் திரும்பு இந்த ஒடம்பு, கண்ணு பாத்தாக்க கூசுதடி "(ஆயிரம் முத்தங்கள்)
சார்... இசைக் கடவுள் வாழும் காலத்தி லேயே அவரின் இசை சேர்ப்பை பற்றி ஆய்வு உரை நிகழ்த்தி வருகிறீர்கள்... இது எங்களுக்கு இசையின் மீது ஆச்சரியமா இருக்கிறது... இன்னும் இசை தாளங்களை பற்றி தொடர்ந்து பேசுங்கள்..... சார்... நன்றி
இன்னிசை வேந்தர்கள் என்றென்றும் ஜாம்பவான்கள் சங்கர் கணேஷ் அவர்கள் மட்டுமே,இவர்களுக்கு ஈடு இணை வேறு யாருமே இல்லை,எனக்கு மிகவும் பிடித்த இசை சங்கர் கணேஷ் அவர்கள் இசை மட்டுமே.இளையராஜா வருவதற்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு முன்னரே இசை அமைப்பாளர்கள் ஆனவர்கள் இசை ஜாம்பவான் சங்கர் கணேஷ் அவர்கள்.
உடன்பிறந்த தம்பியின் வளர்ச்சியை கண்டு பொறாமை படுபவர் ஒருவர், தன்னுடைய நண்பன் இறந்தாலும் அவர் பெயரை இன்றுவரை தன் பெயருடன் இணைத்து தன் மரணத்துக்கு பின்னும் நிலைக்கும் வண்ணம் (சங்கர்) கணேஷ் என்று இருக்க வேண்டுமென்று எண்ணும் அவருக்கு நான் என் மரியாதை கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
இதேபோல நீங்கள் கேட்டவை படத்தில் வரும் கனவு காணும் வாழ்க்கையாவும் பாடலை பற்றியும் அதே ராகத்தில் வரும் ஹிந்தி பாடலான கஸ்மே வாதே பாடல்கள் தொடர்பு பற்றியும் சொல்லவும்....
மெட்டு, தாளம் மட்டும் எடுத்து இசைக்கருவிகள் அவர்கள் சொந்தமாக அமைத்தார்கள். ஒப்பாரி, வயல் பாடல்கள், சிந்து பாடல்கள், மீனவர் பாடல்கள் ஒரே மெட்டில்தான் அமையும்.. அது ஏதாவது வேலை செய்துகொண்டு பாடுவது..அவர்கள் format மட்டும் உள்வாங்கி இசையால் மெருகு ஏற்றினார்கள்.. anirudh அப்படி அல்ல.. copyright வாங்கி அனைத்து டிராக்கும் உபயோகிக்கிறார்.
இரண்டும் hit தான். ஆனால் Helen poornima அவர்கள் சொல்வது போல் பழைய tms பாடல் பட்டு வண்ணச் சிட்டு முன்னோடி. நன்றாக research செய்து பாடல்களைப் பற்றிப் பேசவும். முன்னோடிகளின் தரம் அளப்பரியது. Shankar Ganesh மிக நன்றாக copy அடிப்பார்கள். ராஜாவும் விதி வில்க்கல்ல. சிலபல copy tunes போடுவார். வெளிப்படையாகக் copy என்று சொல்லுங்கள்.
பழைய காலத்தில் கிராமங்களில் அப்படித்தான் பேசுவார்கள் இதிலெல்லாம் ஆராய்ச்சி செய்யக்கூடாது ( உதாரணமாக பொய்க்கால் குதிரை என்பது சரி ஆனால் பொய்காலு குருதையில ஊர்கோலம் என்று SPB பாடுவார்)
S, G,, இசை, அப்போ ரெகாட் பிளேயர் ல மோனோ,,தான் ,, மற்றும்,,, தெளிவு ,,, ஸ்டேரியோ இல்ல,,, அதும் ஒரு காரணம்,,, SG,, ராமநாதன், சவுண்ட் என்ஜினீயர் ராஜா க்கு கிடைத்தது,,, ஒரு PLUS பாயிண்ட்,,,,
எத்தோனயோ இசை அமைப்பாளர்கள் இளையராஜா விற்கு முன்பு வந்து இருக்கலாம் ஆனால் இளையராஜா இசை கடவுள் அவருது இசையை நுட்பமா கவனித்து பாருங்கள் ஒரே பாடலில் வரும் இரண்டு சரணங்களில் வெவ்வேறு இசையை அமைத்து இருப்பார் அவர் இசை அமைத்த எல்லா பாடல்களும் அப்படித்தான். மற்ற இசை அமைப்பாளர்கள் யாரும் இப்படி இசை அமைச்சது இன்று வரை கிடையாது எல்லாருமே முதல் சரணத்தில் என்ன இசையோ அதைத்தான் இரண்டாவது சரணத்திலிம் வரும் எடுத்து காட்டு பெண்மானே சங்கீதம் பாடி வா என்ற பாடலை கேட்டு ப்பாருங்கள்
@manivannan-bbjf நமது பொன் பொருள் வளங்கள் இல்லை என்றால் மேலை நாடுகள் ஒன்றுமில்லை.... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போர் தொடுத்து நமது வளங்களை கொண்டு போய் அவர்கள் செழித்து விட்டனர்... அப்படி போனதிலே நமது இசையும் ஒன்று.... இன்றும் கல்லிலே நாதசுவரம், தவில் செய்து வாசிக்கும் ஆட்கள் உண்டு... வரலாறு தெரியாது பேசுவது நலம்....
.ரெண்டுமே அருமையான பாட்டுக்கள் தான் சரி சரி வுடு😂😂😂( don't mistake me . I like that சரிவுடு comment very much.).அடி சத்தியமா நானிருப்பது உன்னாலே கண்ணீர் வரவச்சிட்டது😢👌✌️👍🙏
ஐயா இன்று தங்கள் காணொளியை பார்த்த போது, எனக்கு கடந்த வெள்ளிக்கிழமை உச்சி வகுந்து எடுத்து பிச்சி பூ வெச்ச கிளி, பாடலை பற்றி நான் என்னவெல்லாம் உணர்ந்தேனோ அவைகள் எல்லாவற்றையும் நீங்கள் விவரித்ததும் எனக்கு complete goosebumps, அந்த மோர்சிங், புல்லாங்குழல், உடுக்கை, கொட்டாங்குச்சி voilin போன்றவை குறித்து மிகவும் சிந்தித்து மெய் சிலிர்த்தேன். அதையே இன்று நீங்கள் பேசியதும் ஒரு ஸ்பெஷல் connect. தங்கள் முன்னர் காணொளியிலும் இதே போல் நிகழ்ந்தது
கன்னி பருவத்திலே படத்தை மறைந்த B V பாலகுரு இயக்கி இருப்பார். இவரும் பாக்கியராஜும் பாரதிராஜாவிடம் 16 வயதினிலே படத்தில் இருந்தே உதவியாளர்களாக வேலை பார்த்தவர்கள். நட்புக்காக இந்த படத்தில் பாக்யராஜ் நடித்திருப்பார்.
இன்று மாபெரும் இசை கோர்வையாளர் #சலீல்_சவுத்ரி பிறந்தநாள் அசாம் தேயிலைத் தோட்டத்தில் தன் தந்தையோடு இடதுசாரி சிந்தனையோடு பயணப் பட்டவர் ஆங்கிலேயர் அடக்குமுறை எல்லாவற்றையும் உள் வாங்கி திரை இசையில் வங்காளி, இந்தி, மலையாளம் ,தமிழ், கன்னடம், என இவர் இசையமைத்த படங்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள் இவரிடம் உதவியாளராக சேர்ந்து பெரும் இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவும் இதே போன்ற தோட்டத்து தொழிலாளியின் மகன்தான் சலீம் சவுத்ரி கன்னடத்தில் கோகிலா என்ற படம் கருப்பு வெள்ளை படம் அதில் கமலஹாசன் மோகன் நடித்திருப்பார்கள் பின்னணி இசை உணர்வுகளை அப்படி வெளிப்படுத்தி இருப்பார் அதுபோல ராஜா ரோஜாப்பூ ரவிக்கை காரி படத்தில் ஒரு ராஜாங்கமே நடத்தி இருப்பார் இதன் மூலம் ஸ்ரீகிருஷ்ணா ஆலனஹள்ளி” எழுதிய குறுநாவலைத் தழுவி எடுக்கப்பட்ட “பரசங்கட கெண்டெத்திம்மா” (1978) என்ற கன்னடப் படத்தின் ரீமேக் அதிலும் ராஜாவை விடவும் நேர்த்தியாக இசை மற்றும் கதை அங்கியேல சுரண்டலோடு பார்ப்பன சுரண்டலையும் கன்னட கதையும் அதை படமாக்கியர்களும் காட்சிகளை அமைத்தார்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YGH13xAck2o.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MsgYKRBXd2w.html
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வெளிச்சமாகும் வீடு பெண் விளக்கேற்றினால்.... வெற்றி யாகும் வாழ்வு பெண் வழிகாட்டினால்... விலகி போகும் மோகம் ...... பெண் விரல் தீண்டினால்..... தெய்வம் கூட இளகும்.... பெண் வரம் வேண்டினால் ..... இங்கு ஆணின் பின்பலம் என்றும் ஆகும் பெண் பலம் ...... இங்கு நீ ஏது நான் ஏது இங்கே....... நம்மை எல்லாம் சஉமந்தவள் யாரடா? இந்த பாடல் வரிகள் இடம்பெற்ற படம் மற்றும் பாடியவர் பெயர் அறிந்து கொள்ள ஆவல்