Business Email: mytravelpokkisham@gmail.com
Thanks for your support
மிக பழமையான கோயில் , இக்கோயிலின் பழமையின் குறிக்கும் விதமாக ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது ‘ என்ற பழமொழி இப்பகுதியில் சொல்லப்படுகிறது .
உத்தரம் - உபதேசம் ,கோசம் -ரகசியம் ,மங்கை -பார்வதி . பார்வதிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்ததால் உத்தரகோசமங்கை என்ற பெயர் பெற்றது .
இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இக்கோயில் இராவணன் காலத்து கோயில் என்பதை குறிக்கின்றன ,இராவணன் மற்றும் மண்டோதிரிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த தலம் இது .
மாணிக்கவாசகருக்கு இறைவன் உருவ காட்சி கொடுத்த தலம் ,திருவாசகத்தில் அதிகமாக இக்கோயிலின் இறைவனை பற்றி பாடியுள்ளார் . திருவாசகத்தில் 38 இடங்களில் இவ் கோயிலை பற்றி புகழ்ந்து பாடியுள்ளார் .
அருணகிரி நாதர் இக்கோயிலை பற்றி பாடியுள்ளார்
இக்கோயிலில் உள்ள நடராஜர் மூர்த்திக்கு ஆதி சிதம்பரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் .
9 сен 2024