❤மாஷா அல்லாஹ்❤நம் கல்புத்துடிப்பிற்கும் மேலான கண்ணியமான காதல்❤நம் உயிர்த்துடிப்பிற்கும் மேலான உயிரோட்டமான காதல்❤நம் உணர்வுத்துடிப்பிற்கும் மேலான உண்ணதமான காதல்❤நம் இதயத்தை இன்பத்தில் ஆழ்த்தும் இன்றியமையாத காதல்❤நம் இரண்டுலகையும் ஈடேற்றத்தில் ஆழ்த்தும் இனிமையான காதல்❤நம் அகத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தும் ஆரோக்கியமான காதல்❤நம் மனதை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் மகத்துவமான காதல்❤இம்மண்ணுலகில் நம்மை மேன்மையிலாக்கி இன் ஷா அல்லாஹ் நாளை விண்ணுலகில் நம்மை வியப்பிலாக்கும் விஷேஷமான காதல்❤அளவுக்குள் அடங்காத காதல்❤வார்த்தைகளால் வரையறுக்க முடியாத காதல்❤எண்ணிலடங்காத காதல்❤சொல்லிலடங்காத காதல்❤படைத்தவன் பல மடங்கு விரும்பும் பாக்கியமான காதல்❤ ஒட்டுமொத்த படைப்பும் விரும்பும் ஓங்கி உயர்ந்த காதல்❤அதுவே❤எம் உயிரினும் மேலான உத்தம நபி உண்ணத நபி உண்மை நபி உயர்வு நபி அழகு நபி ஆத்மார்த்த நபி காருண்ய நபி கருணை நபி காமில் நபி முத்து நபி ❤ முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது நாம் கொண்ட காதல்❤🌹💚லவ் யூ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 💚🌹❤இறுதி மூச்சு உள்ளவரை நம் இதயத்தூதரின் மேலுள்ள காதலை இதயத்துடிப்போடு ஒவ்வொரு உணர்வுத்துடிப்போடு அவர்களின் ஒட்டுமொத்த சுன்னத்துகளையும் நம் வாழ்க்கைநெறியாக வாழ்ந்து காட்டி வெளிப்படுத்துவோம்❤இன் ஷா அல்லாஹ் ❤
Pbuh...❤..நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் இந்த நபியின் மீது ஸலவாத் சொல்லுகின்றனர். ஈமான் கொண்ட மூஃமீன்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுங்கள். இன்னும் அழகிய முறையில் ஸலாமும் சொல்லுங்கள்." (அல்குர்ஆன் - 33:56) ♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: "யாரேனும் என் மீது ஒரு முறை ஸலவாத்துச் சொன்னால், அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்துச் சொல்வான்" (நூல்: முஸ்லிம்) ♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: "ஒருவர் என் மீது ஒரு முறை ஸலவாத்து சொல்வாரேயாயின், அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத்துச் சொல்கிறான். அவர் பத்து முறை ஸலவாத்துச் சொன்னால் அவர் மீது அல்லாஹ் நூறுமுறை ஸலவாத்துச் சொல்கிறான். அவர் என் மீது நூறு முறை ஸலவாத்துச் சொன்னால், அவர் மீது அல்லாஹ் ஆயிரம் தடவை ஸலவாத்துச் சொல்கிறான். அதன்றி அவரது இரு புருவங்களுக்கு மத்தியிலும் இவர் 'நிஃபாக்' என்னும் கபட விசுவாசத்தை விட்டும் விடுதலை பெற்றவரென்றும் அல்லாஹ் பதிவு செய்து விடுகிறான்" (நூல்: தப்ரானி) ♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அதிகாலையில் மலர்ந்த முகத்துடனும், குளிர்ந்த இதயத்துடனும் வந்தார்கள். ஸஹாபாக்கள் கேட்டார்கள்: "யா ரசூலுல்லாஹ்! அதிகாலையிலேயே தங்களை சிரித்த முகத்துடனும் மலர்ந்த இதயத்துடனும் காண்கிறோமே! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பதிலளித்தார்கள்: ஆம்! எனது ரப்பிடமிருந்து எனக்கு (சுபச்) செய்தி வந்தது. உங்கள் உம்மத்துக்களில் ஒருவர் உங்கள் மீது ஒரு ஸலவாத் ஓதினால், அவருக்கு பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன. பத்து தீமைகள் அழிக்கப்படுகின்றன. பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றன. அவர் மீது அதே ஸலவாத்தும் அருளப்படுகிறது (என்பதாக) (நூல் - அஹ்மத், நஸயீ, தர்கீப் லில் முன்திரி