sampath kumar speech on tamilpoet kannadassan. கண்ணதாசன் பற்றி சொல்லின் செல்வர் சம்பத் குமார் பேச்சு.இது போன்ற தமிழ் உரைகளுக்கு தமிழ் பேச்சு சேனலை subscribe செய்யுங்கள்.
திரு.சம்பத் குமார் அவர்களது பேச்சு அருமை அருமை. எந்த விதமான தொடர்பும் இல்லாமல் (கண்ணதாசனைப் பார்த்ததில்லை அவரிடம் பேசியதில்லை இப்படி எந்த விதமான தொடர்பும் இல்லாமல்) அவரது ஒரு பாடலை எடுத்துகொண்டு செய்யுள் நலம் பாராட்டுவது போல் சிறந்த முறையில் கண்ணதாசனை வியந்து பாராட்டியது மிக மிக சிறப்பாக இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் பல பாடல்களையும் பல நடிகைகளையும் அவர்களின் கண்களையும் நம் முன் நிறுத்தி நல்ல விளக்கம் அளித்தது மிக அற்புதம் அற்புதம். பாராட்டி வணங்கி மகிழ்வோம். வாழ்க வளத்துடன்.
16 வயதினை தாண்டாமல் 600 ஆண்டுகள் வாழும் மாமல்லபுரத்து சிலையினை மிஞ்சி 6 கோடி ஆண்டுகள்ஸஆனாலும் இளமையோடு திகழும் நமது கவிஞரின் கலையினை போற்றுவோம் (கவிதை,காவியம்,சிறுகதை,பாடல், திரைப்படம்)
எவ்வளவு அருமையான விளக்கம் .எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .தமிழ் ஒருபோதும் சாகாது .உலகின் மிக வளமான மொழி .இவர் போன்று கற்றவர்கள் ஒரு பாடல் ஊடாக தமிழின் சுவையை அறிய தந்ததற்கு மீண்டும் பாராட்டுக்கள் . -சுவிட்சர்லாந்தில் இருந்து முரளி .
Poetic words mean different from its word. Similarly hinduism too is is also as such. Example an idol is what it mean is not what one sees therefore wgat one prays is not the idol.
30 நிமிடங்கள் கடந்ததே தெரியவில்லை அருமை. .. அருமை... இன்னும் விளக்கம் கிடைக்காத பாடல்கள் எத்தனையோ... வள்ளுவன் சொன்னது போல் "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" - உண்மையே