Govt Doctor ALA.Meeantci sundaram speech on poet kannadasan. கவிஞர் கண்ணதாசன் குறித்த அரசு மருத்துவர் அழ,மீனாட்சிசுந்தரம் அவர்களின் அற்புதமான பேச்சு. இது போன்ற நல்ல தமிழ் உரைகளுக்கு subscribe செய்யுங்கள்.
மீனாட்சி சுந்தரம் அவர்களே தங்கள் தமிழ்சுவை சுந்தர்(அழகு) அதிலும் மாது படைக்கிறார் (,சிவன்) மீனாட்சி சுந்தரம் அழிக்கிறார் என்ற இடத்திலிருந்து பின் வந்த கண்ணதாசன் பாடல்கள் யான் இதுவரை கேட்காதவை நெஞ்சம் நெகிழ்ந்தோம் வாழ்க வளமுடன், தமிழுடன் பல்லாண்டு வாழியவே
நான் ஒரு செவிலியர்,, கண்ணதாசனை மிகவும் பிடிக்கும், கவிஞர் களை காலத்தால் அழிக்க முடியாது. மருத்துவர் அய்யா வின் கொஞ்சு தமிழ் கேட்டு மெய் மறந்தேன், நிறைய சொற்பொழிவு களை யூ டியூபில் கண்டு களித்து உள்ளேன்,, கூட பணியாற்றும் வாய்ப்பு இல்லையே என வருந்துகிறேன்,, பல்லாண்டு உங்கள் தமிழ் சேவை யும் மருத்துவ சேவையும் தொடர விரும்புகிறேன் 🙏🙏🙏
மருத்துவம், பொறியியல் என்று உயர்நிலைக்குப் போய் விட்டால் தமிழில் உரையாடுவதையே அகௌரவமாக நினைக்கும் காலச்சூழலில், ஒரு மருத்துவரிடமிருந்து, இப்படி ஒரு சொல்லாற்றல். எதிர்பார்ப்பின்றி கேட்க ஆரம்பித்தேன். என்னையே மறந்து போனேன். அருமை மருத்துவரே. வாழ்க நீவீர் பல்லாண்டு.
மேடை பேச்சின் வரைமுறைகளை உடைத்து இப்படியும் பேசலாம் என பேசி ரசிகர்களை கவரலாம் என்பதை நிலைநாட்டியுள்ளார்.இதுவரை கவியரசரை பற்றி யாரும் பேசதா கோணத்தில் சரளமாக பேசியுள்ளார் . மயக்கமருந்து மருத்துவர். மயக்கமருந்து கொடுக்காமலே தனது நகைச்சுவையான பேச்சால் ரசிகர்களை மயக்கி விட்டார். 👍🏻🙏🏻💐
மனதில் உறுதியுடன் இருந்தபோது மமதையுடன் நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று பாடி வைத்த கவிஞர் தான் நிலைகுலைந்த மனநிலையில் தன் இறுதி நிகழ்வுகளையும் அழகு தமிழால் ஒரு பல் மலர் பாடை போல் ஊரார் வியக்கப் பாடி வைத்தான். நிரந்தரம் அவன் பாடிய தமிழ் - யாராலும் அனுபவித்து புகழக்கூடியது. மரணம் - பிறந்தவர் அனைவருக்கும் என்றோ ஒரு நாள் நிரந்தரம். இப்புவியை நிரந்தரமாக மறக்கச் செய்வது.
I am rather surprised and amazed on Dr.Meenatci Sundaram's eloquence .It is unusual for a person who is in medical profession to have time to read literature and of Kannadhasan's erudition on every walk of human life.I am happy and delighed to hear the mellifluous speech of Dr.Meenatci Sundaram . Congrats,A.Muthuswamy
DR.Meenatci sundram speech on poet kanndasan - டாக்டர் அருமையாக பேசுகிறார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். பாராட்டுகள் DR.Meenatci sundram - நன்றி tamil pechu
அருமையான பேச்சு அய்யா.தாங்கள் உண்மை யிலேயே எம் பிபிஎஸ் டாக்டர் ரா அல்லது தமிழறிஞரா என்று தோன்றியது.வாழ்க பல்லாண்டு.தொடரட்டும் இப்படி.வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் சார்
Excellent super explanation speech. Maranamilla kaviya kaviyarasar kannathan illaianal thamil kavithai elloraiyum adaindhu erukkadhu.mayakkamilla kavingnanin pukalai mayakkaviyal doctor in Tamil urai mika mika arumai. Parattukal.
மருத்துவர் அய்யா அவர்களின் வாயில் இருந்து அருவியாக கொட்டிய கண்ணதாசன் வரிகள். உயர் படிப்பு முடித்தாலே தமிழில் பேசினால் அவமானம் என்று நினைக்கும் பலர் மத்தியில் சிங்கம் ஒன்று தனித்து நின்று கர்ஜிப்பதை போல பேசிய இவர் ஆற்றல் மிகவும் அற்புதம். தமிழின் பால், அதை உயிர் என்று எண்ணிய கண்ணதாசன் பால் இவர் கொண்டு இருக்கும் தீரா காதலே இந்த வெளிப்பாடு. ஓங்குக கவிஞர் புகழ்.
மடை திறந்த வெள்ளம் போல் மகிழ்ச்சி சுரந்த உள்ளம் போல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் திருத்தமுற தீஞ்சவைத் தமிழ்ப் பேச்சு வாழ்த்துகள் எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர் 9611226392 மருத்துவர் மீனாட்சி சுந்தரம் அலைபேசி எண் வேண்டும் நன்றி
படிக்காத கண்ணதாசனை நான் கண்டதில்லை, ஆனால் படித்த கண்ணதாசனை இன்று கண்டேன். அவருடைய நகல் தானோ நீங்கள். ஆஹா என்னவொரு புலமை. நான் அன்று பெண்ணாக பிறந்திருந்தால் கண்ணதாசனின் கடைசி பொண்டாட்டியாக இருந்திருப்பேன். இன்று நான் பெண்ணாக இருந்தால் உங்கள் வாழ்க்கையை பங்கு போட்டுருப்பேன். ஆனால் என் விதி நான் ஆணாக பிறந்து வீணாக நிற்கிறேன். பெண்ணாக பிறந்து இருந்தால் முற்பகுதியில் கண்ணதாசனும்,பிற்பகுதியில் மீனாட்சிசுந்தரமும் கணவனாக விலைக்கு வாங்கி இருப்பேன். நானொரு கண்ணதாசன் பித்தன்.
ஒருநாள் ஓசூர் ஹோட்டலுக்குள் சென்று ரவா தோசை போட்ட சரக்கு மாஸ்டரை பார்த்து பத்து ரூபா டிப்ஸ் கொடுத்தேன்...இன்ப அதிர்ச்சியில் அவர் கண்ணில் கண்ணீர் வழிந்ததை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்தேன்...