இந்தப் படம் வெளிவந்தபோது எங்களது வீட்டுப் பக்கத்தில் மிகவும் கருமை நிறம் கொண்ட ஒரு அக்கா இருந்தார்கள். அவர்களை ஒருவர் திருமணம் செய்து கொண்டார். அவரது அக்காவின் சொற்படி கேட்டு திருமணம் செய்தார். பின்பு அந்தப் பெண்ணை விட்டு விலகி விட்டார் . அப்போது எனக்கு வயது 10. நான் அந்த அண்ணனிடம் உங்கள் மனைவி எங்கே என்று கேட்டபோது அவள் நானும் ஒரு பெண் படத்தில் உள்ளவள் போல் இருப்பாள் . என்றார் நான் அந்தப் படத்தைப் பார்க்காததினால் அவர் சொன்னது புரியவில்லை . பல வருடங்கள் கழித்துதான் புரிந்தது . இப்போது அதை நினைக்கிறேன்.
நான் சாகும் வரை என் நினைவில் நிலைத்து நிற்கும் பாடல்களில் ஒன்று... ஒரு பெண்ணின் ஆதங்கத்தை இவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் உணர்த்த கவிஞரால் தான் முடியும்..😊 "எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா"? எப்பேற்பட்ட பெண்ணாக இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு முறையேனும் கடவுளிடம் முறையிட வைக்கும் வரிகளில் ஒன்று..😌 ஏனென்றால் "நானும் ஒரு பெண்"..
A slight change in your comment: "சாகும் வரையில்" என்பதற்கு பதில் "உயிர் உள்ள வரை" என்று இருக்கலாமே! நம் positive or negative எண்ணங்கள் சிறிதும் சிதறாமல் நம் குழந்தைகள் மனங்களில் பதியும் என்கிறது விஞ்ஞானம்.
கண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே கண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை (கண்ணா...) மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா கண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா (கண்ணா...)
இந்த பாடலை கேட்டாலே புரியும் கவியரசர் காட்சிக்கு ஏற்றமாதிரி பாடல்களை எழுதுவதில் தான் கவிச்சக்கரவர்த்தி என்று உலகில் இவரை போல் பாடல்களை எவருமே கிடையாது என்பது ஆயிரம் சதவிகிதம் உண்மை
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். எனது பள்ளி, கல்லூரி நாட்களில் (1960-70)எனது குடும்ப வறுமை சூழலை மறக்க வைத்த பாடல். அந்த கால கட்டத்தில் பல கருப்பு பெண்கள் சிவப்பு கணவரை பெற உதவிய பாடல். வாழ்த்துக்கள்.
சிறு வயதில் அடிக்கடி வானொலியில் கேட்டு கேட்டு எனது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய பாடல். வருடம் பல கடந்தும் நெஞ்சத்தைவிட்டு நீங்கா இடத்தை பிடித்துள்ள பாடல்.
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எப்போவும் கேட்கும் பாட்டு அதில் இருக்கிற ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகா எப்ப கேட்டாலும் அந்த பாட்டு என் மனசு எப்போ கஷ்டப்படுது அப்பல்லாம் இந்த எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச லவ் திஸ் சாங்
தான் பிறர் பார்த்து ரசிக்கும் வண்ணமாக வெள்ளையாக அழகாக இல்லையே என்ற ஏக்கத்தோடு பாடும் நபரின் உள்ளத்து உணர்வை வெளிப்படுத்தும் பாடல் இது! நிறம் பார்த்து வெறுப்பதையும் ஆண் பெண் பாகுபாடு பார்ப்பதையும் விடுத்து மனித உணர்வுகளை மதிப்போம், யாரையும் வெறுக்காது எல்லாரையும் சமமாக மதித்து நேசிப்போம். அதுதான் ஆண்டவர் விரும்பும் நற்செயல் ஆகும்.
அப்போது நடிகை நடிச்சாங்க. படத்துல பெண் கேரட்டருக்கு தனி இடம் உண்டு. இப்போது, தொடை, தொப்புள்,மார்பு,முதுகு, இதுவொல்லாம் காட்டுறதுக்காக மூணேமூணு பாட்டுக்கு மட்டும் வந்துட்டு காட்டுட்டு அவ்வளவுதான் அவங்க வேலை முடிந்தது.
ஆஹா...மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. யாரைத்தான் பாராட்டுவது....பாடல் எழுதியவர்யா, பாடிய சுசீலா அம்மாவா அல்லது விஜயகுமாரி அம்மாவையா? கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் போது...அப்பப்பா....மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏
💚கண்ணன்💚 💚 என்ற பெயரில் ♥️ எனக்கு எப்போதும் ♥️ஓர் ஈர்ப்பு உண்டு ♥️அடுத்த ஜென்மத்தில் ♥️ கண்ணன் ♥️ என்ற பெயரிடப்பட ♥️ வேண்டும் எனக்கு ♥️ ஆண்டவன் ♥️அருள் வேண்டும் ♥️ அதற்கு
ஒரு காவியத்தை கவிதையாக படைத்த கவிஞருக்கும், ஒரு சொல்லை காதினிலே கீதமாக ஒலிக்க செய்த, கவிக்குயல் சுசிலா அம்மாவுக்கும், இந்த இனிய கவிதையை, இன்ப கீதத்தை தன்னுடைய நளினமான நடிப்பாலும், கண் அசைவுகளாலும், உணர்ச்சி பூர்வமாக உணர்த்திக் காட்டிய விஜயகுமாரி அம்மாவுக்கும் கடவுளின் ஆசியும், கருணையும் கிடைக்கட்டும். 🙏
* நூற்றாண்டு கடந்தாலும் இனிமை மாறாது...!இளமை குன்றாது...! தமிழ்த்தாயின் தவப்புதல்வன்...கவிமாலை வழங்கிய அந்த கவியரசனை எப்படி பாராட்டுவது ? கண்ணீரால் பாதம் கழுவுகிறேன் !
I fully endorse your views. All the 'Face Book' members including me became extremely happy to hear this beautiful song. Tempts us to hear again and again. - "Mandakolathur Subramanian."
உணர்ச்சி பிரவாக வெள்ளத்தில் கண்ணதாசன், விஜயகுமாரி மற்றும் சுசீலா அவர்கள் மிகப் பெரிய உச்சத்தை தொட்டு விட்டார்கள். உலகத்திலுள்ள கருமையான அக்காக்களுக்காக சிறுவயதில் குக்கிராமத் திரையரங்கில் அழுத அழுகை பசுமரத்தாணி போல் இன்றும் நினைவில் உள்ளது. ஆத்மபந்தம் ஏற்படுத்தியதால் இந்த பாடல் அழியாது ஆயிரமாயிரம் ஆண்டுகளானாலும் புதுப்புது பொலிவோடு ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் ஏற்றிருக்கும். அறுபதுகளின் சினிமா பைத்தியங்கள் கர்வம் கொள்ளலாம்.
Such an amazing acting for such beautiful lyrics from the heart...... She even has perfect timing to take breaths between lines while focusing on such emotional acting.... The class of yesteryear actors can be matched by extremely very few present generation actors.... Tons to learn.....
sir P susheela can only sing these kind of songs other singers can not they cannot even sing level of 10% of P susheela she has such beatiful and honey well tarined classical singer have very clarity and sweet ness and good prounciation no body have that why she was prefered for many music directors.
Kanna- Black colored Kanna You are unseen by no eyes You are rejected by none Sighting and hating is none Seeing me, none can bear Seeing my heart and rejecting Before them You created me Kanna Seeing my color and hating Before them You gave me Kanna Seeing my people for me joining You forgot to do Kanna A fine place you found As a statue you sat Kanna A golden heart, You gave Kanna A flower-like thought You kept there Kanna Eye can't enjoy seeing Like that you hid Kanna To settle what debt You created me Kanna? mvvenkataraman
Sungdichippa Chippy ...dark skin is the original colour of Dravidians. Geographically they're to be dark. All fair skins are mixture of aryans bro. I married a lovely dark skin angel.....
How about a fair skinned person ridiculed for his natural skin colored and bullied tortured and brutally beaten and rendered a subhuman outcast by his entire family. It works both ways.
Raam R. R. True. But it isn’t common. That is why the internet police who, rightly, pour scorn at people ridiculing dark skinned people stay mum at people who make fun of short people, calling them dwarfs, Lilliputians, etc. If if is wrong to mock one’s color, it is equally wrong to mock one’s height too. But, it isn’t taken seriously
Tears in my eyes.. Kannadasan's lyrics, Susharshan's music, P.Susheela's voice top notch.. along with the actress bring out the best to describe the situation. How come P.Susheela didn't get national award for this song ?
When I listen to this.. takes me to old memories when my mother sings this song to put me to sleep. That time I never understood the meaning as I was too young... but the emotions still stays now. Love this song.
Same here during childhood times THEN KINNAM in Jaya tv morning 7 to 9 they use to telecast all old songs, since my mom is great fan of old song we grew up hearing all these songs we ask mom to sing these songs at all the time. My mom used to sing chinna payale chinna payale song to make me sleep🥰🥰
கண்ணதாசனும் -திரைப்பாடலும் ************************************************** ஒருசமயம் சுவாமி விவேகானந்தர்பற்றிய ஒரு புத்தகத்தை கண்ணதாசன் தேடிக்கொண்டிருந்தார். அதுபற்றி ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள தனக்குத் தெரிந்த ஸ்வாமிகளிடம் சொல்லியிருந்தாராம் . கண்ணதாசன் வந்துவிட்டார். அங்கே தரை விரிப்பில் அமர்ந்து இருக்கிறார். ஒரு முப்பது பேர் காத்து இருக்கிறார்கள் அவரை சுற்றி பாட்டுக்காக; இந்த அறைக்கு வெளியே சிகப்பு விளக்கு எரிகிறது . வெளி ஆட்கள் உள்ளே வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க . அப்போது ஒருத்தர் கண்ணதாசனை காண வருகிறார் . அவரை வெளியே இருக்க சொல்லிவிட்டார்கள் . இப்போது நாம் உள்ளே சென்று பார்ப்போம் படத்தின் கதை ; சூழல் டைரக்டர் சொல்ல , அங்கே ஒரு பாடல் வேண்டும் .சுதர்சன் பல்லவிக்கான இசைமெட்டை சொல்கிறார். கவிஞர் இரண்டு நிமிடம் யோசனை செய்கிறார். ஒன்றும் பிடிபடவில்லையாம் . சுதர்சனை கூப்பிட்டு ,'எதுவும் தோணலை, நாளைக்கு பாத்துக்கலாம் ' என்று சொல்லிவிடுகிறார் . சுதர்சனும், இசை கலைஞர்களிடம், போகலாம் என்று சொல்ல, அவர்கள் புறப்பட தயார் ஆகிறார்கள். அப்போது தபேலா வாசிப்பவர், 'என்னண்ணே,முப்பதுபேரை ,டிபன் ,காபி எல்லாம் வாங்கி கொடுத்து கூட்டி வந்திருக்கோம்,...இவரு சர்வ சாதாரணமா, 'எதுவும் தோணலை ...நாளைக்கு ...பாக்கலாம்னு சொல்றார் ' என்று கீழ்க்குரலில் சொல்லியிருக்கிறார் ' டேய், அவரைப்பத்தி உனக்குத் தெரியாது. அவருக்கு மனசு போகலேன்னா , இரண்டு வார்த்தை எழுதிக்கூட வாங்கமுடியாது ...எனக்கு அவரை பத்தி நல்லாத் தெரியும் ,நீ கிளம்பு ' என்று சொல்லி நகர்கிறார். வாசலில், சிகப்பு விளக்கு மாறி, பச்சை விளக்கு எரிகிறது . கண்ணதாசனை காண வந்தவரிடம், 'சார், நீங்க உள்ளே போகலாம் ; என்று கதவை திறந்து விடுகிறார். அவர் நேராக, கண்ணதாசனிடம் சென்று ,'ஸ்வாமிகளிடம்,இந்த , புத்தகம் கேட்டிருந்தீர்களாம், உங்களிடம் நேரில் கொடுத்து வரச்சொன்னார் ' என்று புத்தகத்தை கொடுத்தார். அது ஒரு பழைய புத்தகம் . அவரும் எங்கோ தேடி, புதிதாக, பைண்டிங் செய்து கொடுத்து அனுப்பி இருந்தார்.புத்தகம் பழையது என்பதால், மேல் அட்டைக்கு பதிலாக, கருப்பு காலி கிளாத் ஒட்டி பைண்டிங் செய்யப்பட்டு இருந்தது. கண்ணதாசன், அந்த கருப்பு புத்தகத்தை கையில் வாங்கினார் , பிரிக்கக் கூட இல்லை . அப்போது ஒரு மாயை நடந்தது ' ஏம்பா, இங்கே, வா, அந்த பல்லவி சந்தம் சொல்லு,' என்று சுதர்சனை சொல்ல வைத்தார். சுதர்சன் சொல்லி முடித்ததும், அருவி போல வார்த்தைகள் வந்து கொட்டியது படம்: நானும் ஒரு பெண் பாடல்; 'கண்ணா கருமை நிறக்கண்ணா..' இசை ; ஆர் சுதர்சன் "கண்ணா, கருமை நிறக்கண்ணா உன்னைக் காணாத கண் இல்லையே உன் மறுப்பாரில்லை,கண்டு வெறுப்பாரில்லை என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை ..." சரியா இருக்கா பாரு,என்று சொல்ல, 'அண்ணே,ரொம்ப நல்லா வந்திருக்கு என்று சுதர்சன் மகிழ்ந்து பாடுகிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் கவிஞர் கிட்டத்தட்ட பாடல் முழுதும் தந்துவிட்டாராம் . சற்று அமைதி கலைய, சுதர்சன், அந்த தபேலா வாசிப்பவரை பார்த்தாராம் . அவர்,'அண்ணே, தெரியாம சொல்லிட்டேன், இவர் மனுஷன் இல்லை, தெய்வம் ; என்றாராம் . எத்தனை காலம் கடந்தாலும் அழியாத பாடல் . அந்த கார்மேக வண்ணன் கண்ணனே வந்து அடி எடுத்துக்கொடுத்த பாடல் இது . திரைப்பட பாடலில் கண்ணதாசன் ஒரு சகாப்தம்; பல பாடல் உருவாக இது போல நிகழ்வு, ஒரு அனுபவம் என்று இருந்ததால், பாடல்கள் சாகாவரம் பெற்று இன்றும் உலா வந்துகொண்டிருக்கிறது இதில் உள்ள ஒரு வரிதான் என்னை பாதித்தது . நாட்டில் எவருக்குமே நல்லது செய்யாது, அவர்கள் மட்டும் , சொத்து சுகம் சேர்ப்பது என்று இருப்போர்க்கு என்று கவிஞர் இந்த வரிகளை எழுதினாரோ ? 'எந்தக்கடன் தீர்க்க எனை நீ படைத்தாய் கண்ணா '(எந்தக்கடன் தீர்க்க இவர்களை எல்லாம் படைத்தான் இறைவா ? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது ) கூடவே பாடலுக்கு உயிர் கொடுத்த பி சுசீலா, அதற்கு திரையில் நடத்தி காட்டிய விஜயகுமாரி, திரை உலகில் என்றுமே ஈடுசெய்ய முடியாத எஸ். வி ரங்காராவ் ,சுப்பையா என இவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் .
Excellent song. Vijaykumai, Ranga Rao and S. V. Subbiaha. It is a treat to watch them acting. Very much doubt whether we can see actors of such caliber - S. S. Ramu - Senior Citizen.
கண்களை கசிய வைக்கும் காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசனின் பாடல். சுதர்சனம் ஐயாவின் இசையும் அற்புதம். விஜயகுமாரி அம்மாவின் நடிப்பு கண்களை குளமாக்குகிறது. இது போன்ற படங்கள் இனி வரவே வராது.
This song has a deeprooted meaning.It is message dwells on karmic effects .Kadan Theerka .We always feel for all the woes and pains in our life and living but failed to apprecaite the core reasons .It is past karma which is haunting us now ....in Shakespearian terms ,the evil she /he did lived after her/him.Kannadasan can never be or should be compared to any one .Pl