என்னிடம் ஒரு இந்து சகோதரர் இவ்வாறு கூறினார். அவர் வீட்டின் அருகில் ஒரு கத்தோலிக்க ஆலயம் இருக்கிறது. அதில் காலை தோறும் ஜெபமாலை சொல்வார்களாம். மரண நேரத்தில் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற வார்த்தையைக் கேட்கும் போது காலையிலேயே அபசகுண வார்த்தையைக் கூறுகிறார்களே என்று வெறுப்படைவாராம். ஆனால் உலகில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது அது எவ்வளவு ஆறுதல் தரக்கூடிய ஜெபமாக இருக்கிறது என்று இப்போது புரிந்துகொண்டேன்...