ஏதோ வந்தோம், வாய்ல வந்தத சொன்னோம்னு இல்லாம அதை ஆதாரத்தோட சொல்லி எங்க சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து தமிழை குற்றமற கற்க உதவும் தங்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
உம்மை போன்றோர் தான் தமிழாசிரியராக ஆக வேண்டும். இப்பொழுதுள்ள தமிழாசிரியர்கள் வெறும் மதிப்பெண்களுக்காக தமிழை மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள் உம்மை போல அக்கு வேறு ஆணி வேறு என பிரித்து சொல்லிக் கொடுப்பவர்களைத்தான் எனக்கு பிடிக்கும்.
சகோதரி உங்களைப் போன்றோர் இருப்பதால் தான் தமிழ் இன்னும் இவ்வுலகில் வாழ்கிறது உங்களைப் போன்று யாரும் இவ்வளவு அழகாகவும் இவ்வளவு தெளிவாகவும் அதுவும் ஆதாரத்துடன் அழகாக விளக்கி சொல்கிறீர்கள் உங்கள் பதிவு எனக்கும் என் குழந்தைக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது வளர்க உங்கள் பணி,சிறக்க உங்க பணி, வளர்க தமிழ், வாழ்க தமிழ்.
சகோதரிக்கு வாழ்த்துக்கள். எனக்கு சிறு வருத்தம் உண்டு. தேவையற்ற காணொளிகளை இன்றைய சமுதாயம் அதிகம் பார்க்கின்றனர். ஆனால் இது போன்ற கற்பித்தல் முறையை குறைவானவர்களே காண்கின்றனர். ஆனால் நீங்கள் பதிவிடும் அனைத்தும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.
அம்மணி வணக்கம். தமிழுக்கு தாங்கள் இலக்கணவழில் ஆற்றும் பணிகள் மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியன. ஆயினும் “கள்” என்ற அஃறிணை பன்மை விகுதி தொல்காப்பியத்தில் “கள்ளொடு சிவணும் அவ்வியக்கம் பெயரே கொள்வழி உடைய பலவறி சொற்கே” என்ற நூற்பா வள்ளுவர் காலத்திலேயே உயர்திணைக்கும் வழங்கலாயிற்று. - புலவர் மு. சரவணன் வணி.இ. பெங்களூர்.
அருமை நல்ல விளக்கம் இவர்களும் தவறோ? கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் படம்: சூதாட்டம் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் வரிகள்: கண்ணதாசன் குரல்: பி.சுசீலா பாடல் வரிகள்: விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும் நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும் கவிஞர் தாமரையின் வரிகள் படம் : பீமா வரிகள் : தாமரை எனதுயிரே....எனதுயிரே.. நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே
கண் + கட்டி = கட்கட்டி கல் + கண்டு = கற்கண்டு என வருகிறன. இதைப்போல் பெண் + கள் = பெட்கள் என்று ஏன் வரக்கூடாது? ஆள் + சி =ஆட்சி என்று தனிக்குறிலுக்கு அடுத்து வரவில்லை. ஆனால் ள் என்பது ட் என்று திரிந்துள்ளது ஏன்?