Тёмный
No video :(

குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய உடல் பரிசோதனை  

Dr.Selvan.R
Подписаться 1,8 тыс.
Просмотров 245
50% 1

பிறந்த குழந்தைக்குச் செய்யப்படும் உடல் பரிசோதனைகளைப் பற்றிப் பார்ப்போம். குழந்தை பிறந்தவுடன் நல்ல சத்தம்போட்டு அழுவது, மூச்சு நன்கு இழுத்து விட்டு, நிறம் நல்ல சிவப்பாக இருந்து , கை, கால் நன்கு ஆட்டினால் எல்லாருக்கும் நல்ல சந்தோஷம்.
ஆனால் குழந்தை மருத்துவர் கொஞ்ச நேரம் எடுத்துத் தான் குழந்தை நன்றாக உள்ளது எனச் சொல்வார். அந்த நேரத்தில் எந்த பரிசோதனை செய்வார் என்பதைப் பார்க்கலாம்.
முதலில் குழந்தையின் தலையில் இருந்து கால் வரை உற்றுப் பார்ப்பார். குழந்தையின் அமைப்பில் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? முக அமைப்பில் ஆரம்பித்து, கை கால் அமைப்பு வரை ஏதாவது மாறுபாடு இருக்கிறதா?அதுக்கப்பறம் குழந்தையின் கண்ணைப் பார்ப்பார். கண்ணில் லென்ஸ் இருக்கும் இடத்தில் வெண்படலம் தெரியுதா? ஏதாவது இரத்த கசிவு இருக்கிறதா?? சிகப்பா இருக்கிறதா? எனப் பார்த்து, கண்ணுக்கு அடுத்து வாயைத் திறந்து பார்ப்பார்.குழந்தைகளுக்கு (Cleft Palate) மேல் அன்னத்தில் ஒரு ஓட்டை இருக்கலாம். அப்படி இருந்தால் குழந்தை சாப்பிடுவதில் ஆரம்பித்து, பேசுவது வரை பிரச்சினை இருக்கும் அதைப் பார்ப்பார்கள்.
தாய் கர்ப்பமாக இருக்கும் போது பனிக்குட நீர் அதிகமாக இருந்தால் குழந்தைக்குக் குடல் பகுதியில் அடைப்புப் பிரச்சினை இருக்கிறதா?எனச் சந்தேகம் இருக்கும். அதனால் ஒரு மெல்லிய இரப்பர்க் குழாயை வாய் அல்லது மூக்கு வழியாக விட்டு இரைப்பைப் பகுதி வரை போகிறா? என்பதைப் பார்ப்பார்கள்.இரைப்பைக்குச் சென்றுவிட்டால் தொண்டைப் பகுதியில் பிரச்சினைகள் இல்லை என்பதை உறுதி செய்வார்கள். ஆசனவாய் பகுதி முழுவதும் திறந்து இருக்கா? மலம் குடலில் அடைப்பு அறிகுறி இருக்கா? என இரப்பர்க் குழாயை விட்டுப் பரிசோதனை செய்வார்கள். நூற்றுக்கு ஒரு குழந்தைக்கு இருதயப் பிரச்சினை வரலாம். அதில் நான்கில் ஒரு குழந்தைக்குத் தீவிரமான இருதயப் பிரச்சினை இருக்கலாம். இந்தக் குழந்தைகளுக்கு உடனடியாகவோ அல்லது சிறிது நாட்கள் கழித்தோ இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். இந்த மாதிரி குழந்தைகள் அநேக நேரங்களில் சுறு சுறுப்பு இல்லாமல், பிறந்த சில் மணி நேரத்திலேயே நீலநிறமாக மாறிவிடும், மூச்சுவிட சிரமம் இருக்கும். குழந்தை பிறந்து பார்த்தவுடன் இரத்தச்செறிவு பார்த்து பிறகு , 24 மணி நேரம் கழித்து மறுபடியும் ஒரு முறை வலது கை, இடது காலில் பல்ஸ்ஆக்சி மீட்டர் வைத்துப் பார்ப்பார்கள். இரண்டு பகுதியிலும் உள்ள வித்தியாசம் 3 %மேல் இருந்தாலோ, இரத்ததில் ஆக்சிஜன் செறிவு 95 %குறைவாகவோ இருந்தால். உடனடியாக, எக்கோ,எக்ஸ்ரேபரிசோதனைகளும் செய்யப்படும்.
இடுப்பு எலும்புகள் சரியாக இருக்கிறதா என பரிசோதிப்பார்கள் பார்ப்பார்கள். ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு பக்கம் உள்ள விதைப்பைகளில் விரைக்கொட்டை இல்லாமல் இருந்துச்சுனா, ஆறு மாத்திற்குப் பிறகு கீழே இறக்கிவைத்து அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். சிறுநீர்போகும வழி சரியாக இருக்கிறதா? துவாரம் நுனியில் இருக்கா? கீழே அல்லது மேல் பகுதியில் இருக்கிறதா? எனப் பார்ப்பார்கள். எனவே குழந்தை பிறந்த 24 மணி நேரத்தில் குழந்தை மருத்துவரைப் பார்த்து நலமாக உள்ளத்தை உறுதி செய்து விட்டால் பயமில்லை.

Опубликовано:

 

24 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
Будзек и рецепт🐝
00:25
Просмотров 144 тыс.
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Просмотров 12 млн
MRCP Paces Neurology Station
10:13
Просмотров 843 тыс.