யார் இறந்ததும் இந்த மாதிரி மனவலியை உணர்ந்ததில்லை...என்னவோ தெரியவில்லை எனக்கு மட்டும் தான் இப்படி என்றால் எம்மை போல பலருக்கும் இந்த வலி இருக்கிறது.. எப்படி யார் இறந்ததும் இப்படி பாதிததில்லையே...எனக்கு விஜயகாந்த் புடிக்கும் ஆனா நான் ரசிகையும் இல்ல...கட்சி ஆளும் இல்ல...என்னவோ அவர் இழப்பு மனச ரொம்ப பாதிச்சது...😢..
நான் விஜயகாந்தின் ரசிகை என்னுடைய முதல் ஓட்டு சார்க்கு தான் ❤❤ என்னுடைய மாமனார் இறந்த நாள் மே நான் மறந்துவிட்டேன் இவருடைய இறப்புயே பார்த்துக் கொண்டு இருந்தேன் எங்கள் வீட்டில் ஒருவர் இறந்த விட்டால் எப்படி அடக்கம் பண்ணபிறகு குளிப்போம் அதுபோல இவருடைய அடக்கம் பண்ணபிறகு குளிச்சிட்டு வந்தேன் வெள்ளிகிழமை விளக்கு ஏற்றகூட மனசுவரல
தேர்தலில் யோசிக்க வேண்டும்... அவர் வாழ்ந்த காலத்தில் யாரும் யோசிக்க வில்லை..... வாய்ப்பு கொடுத்தால் தெரிந்திருக்கும் அவர் யார் என்று...... போங்கடா நீங்களும் உங்கள் ஆறுதலும்....
கலாம் ஐயாவுக்கு அடுத்து நம்ம கேப்டன் தான் நமக்கு ரோல் மாடல்!இருவருமே அப்பழுக்கற்ற ஆத்மாக்கள்! கலாம் ஐயா அடுத்து தமிழகத்தில் மிகப் பெரிய கூட்டம் கூடியது கேப்டனுக்குதான்❤
கர்னன் என்று ஒருத்தர் இருந்தார் என்று வரலாறு பாடத்தில் படித்ததோம் ஆனால் இந்த கர்னன் எங்கள் கண் முன்னே வாழ்ந்தார் என்பது நாளைய. வரலாறு வாழ்க. எங்கள் கேப்டன் புகழ்
ஓய்வு இல்லாமல் தூக்கமின்றி இரவும் பகலும் உழைத்தது. ஒரே வருடத்தில் 18 படங்கள். 18 படத்திலும் கதாநாயகன்(no guest role). அதிகமாக சரியான துக்கம் இல்லாமல் இரவு ஷூட்டிங்கில் நடித்தார் ஒரு படம் சூட்டிங் மதுரையில் என்றால் மற்றொரு படம் பொள்ளாச்சியில் மற்றொரு படம் சென்னையில் இருக்கும். இவர் நினைத்திருந்தால் Train ல் first class AC யில் போயிருந்திருக்கலாம். ஆனால் காரிலேயே இரவும் பகலும் சரியான தூக்கம் இல்லாமல் சென்றது.டூப் இல்லாத சண்டை காட்சிகள் நடித்தது.அப்போது Rajini sir கூட சொல்லி இருக்கிறார் டூப் இல்லாமல் நடிகாதீர்கள் என்று. ஆனால் Vijayakanth sir கேட்காமல் டூப் போடமல் நடித்தார். இந்த காரணங்களால் தான் விஜயகாந்த் சார் உடம்பு நிறைய பாதிக்கப்பட்டது. Vijayakanth sirஅவர்கள் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே சமயம் ஓய்வு இல்லாமால் மிக குறுகிய காலத்தில் கிட்டதட்ட 157 படங்களில் நடித்தால் தான் அவர் அவ்வளவு சீக்கிரமாக பணக்காரராக மாற முடிந்தது. அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவ முடிந்தது. I miss u captain vijayakanth sir❤️❤️❤️
அவருக்கு சிலைவைப்பது அரசியல் நோக்கமல்ல நாம் வாழ்ந்த காலத்திலும் இனி வரும் காலத்திலும் மனித நேய மனிதரை பின்பற்ற அது ஒரு பாடமாகும் சிலைவைக்க வேண்டும் மக்களே ஆதரவு கொடுங்க பாளீஸ்
பிரேமலதா விஜயகாந்த் 😍 இங்க ஒரு மனுஷன் தன்னோட விருப்பபடி மத்தவங்களுக்கு உதவி பண்ணனும் ன்னு நினைக்கிறாங்கனா அதுல அவங்க குடும்பத்துல உள்ளவங்களோட ஒத்துழைப்பும் பங்களிப்பும் ரொம்பவே முக்கியமா இருந்திருக்கும். இல்லனா கண்டிப்பா அந்த நபரால நிம்மதியா அவங்க நினைக்கிற உதவிகளை மத்தவங்களுக்கு செஞ்சிருக்க முடியாது.. குறிப்பா தன்னோட மனைவியின் அனுமதி. இதே தான் கேப்டன் விஷயத்திலும் 20 30 படங்கள் ல நடிச்சவங்களே கோடி கோடியா சொத்து சேர்த்து வச்சிருக்கும்போது.. சம்பாதிச்ச எல்லாத்தையும் அவர் மக்களுக்கு வாரி குடுத்தாருனா அதுல பிரேமலதா அனுமதி கொஞ்சம் கூடவா இல்லாம இருந்திருக்கும்.. அவங்களோட கடைசி வரைக்கும் பயணிக்கிறது அவங்க மட்டும் தானே. அவங்க நினைச்சிருந்தா அத தடுக்க முடியலனாலும் குறைச்சிருக்க முடியும் தானே.. இப்ப கூட மறைந்த போண்டா மணியின் மறைவுக்கு அவரோட குடும்பத்துக்கு 1 லட்சம் பிரேமலதா தான் குடுத்ததா அவங்க நண்பர்கள் சொல்லிருக்காங்க.. சில வருசத்துக்கு முன்னாடி அதே போண்டாமணியின் கடன் சுமார் 12 லட்சத்த கேப்டன் தான் அடச்சிருக்காரு என்பது கூடுதல் தகவல். இதெல்லாம் வெறும் உதாரனம் தான். இந்த மாதிரி நெறைய செஞ்சிருக்காரு.. அவரு செய்யுறது எவ்ளோ பெரிய விஷயமோ அதே மாதிரி அவர தடுக்காம கூட இருந்து ஊந்துதலா இருக்குறதும் பெரிய விஷயம் தான். அதுக்கு முக்கிய காரணமா இருக்குறது அவர்களுக்குள் இருக்கும் காதலும் புரிதலும் தான். அவங்கள நீங்க பாரட்ட லாம் வேணாம்.. அது அவங்களுக்கு தேவையும் படாது.. ஆனா இந்த மாதிரி சூழ்நிலை ல தூர்வாரம இருக்கலாம் ல.. கேப்டன் என்னைக்காவது அவங்க மனைவி பசங்கள பத்தி உங்க கிட்ட வந்து Complaint பண்ணிருக்காரா ? அப்டி இருக்கும் போது எப்டி இவ்ளோ ஈஸி யா அடுத்தவங்க வாழ்க்கைக்குள்ள என்ன நடந்திருக்கும் ன்னு உங்களால சர்வ சாதாரணமா Judge பண்ண முடியுது ? எங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க எத்தன பேர் உங்க வீட்ல உங்களுக்கு சேர வேண்டியத உங்க அப்பாவோ இல்ல கணவரோ அடுத்தவங்களுக்கு அள்ளி குடுக்க அனுமதிக்கவிடுவீங்க.. ? ஒரு பக்கம் கணவர் இறந்த துக்கம் இன்னொரு பக்கம் பிள்ளைங்க கதறி அழுவுறத ஆசுவாசம் படுத்துட்டு இருக்காங்க இந்த மாதிரி நேரத்துல கருத்துங்கிற பேர் ல உங்க மனசுல உள்ள சாக்கடைய பொது வெளியில கக்காதீங்க.. Life is so simple and short நாம இங்க என்ன பண்றோமோ அதான் நமக்கு திரும்பி வந்து சேரும். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியலனா அடுத்தவங்கள Judge பண்றத விட்டுட்டு முடிஞ்ச அளவு அமைதியா இருக்க பாருங்க.. மறுபடியும் சொல்றேன் இந்த இழப்போட வலி நம்மளுக்கெல்லாம் விட இத்தன வருஷம் உசுருக்கு உசுர அவங்க கூடவே வாழ்ந்த அவர் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு தான் அதிகம். அவங்களுக்கு மேலும் கஷ்டம் குடுக்காதீங்க ப்ளீஸ் 🙏 சில வக்கிரமான பதிவுகளலாம் பாக்கும் போது ஆத்திரமா வருது.. 🤧 ( இதெல்லாம் தாண்டி அவங்களுக்கு master plan இருக்கு அவங்க கேப்டன யூஸ் பண்ணாங்க அவங்க கெட்டவங்க ன்னு என்ன வேணாலும் இருக்கட்டுமே.. ஏன் இதெல்லாம் உண்மையா வே இருக்கட்டுமே.. அதுனால உங்களுக்கு என்னயா வந்தது.. who the hell are u to Judge them)...
ஒரு இடத்தில் கோயில் கட்டினால் போதும். தமிழ்நாடெங்கும் சிலை வைக்க வேண்டாம். அத்தனை சிலைகளை பராமரிக்க முடியாது. பறவைகள் அமர்ந்து அசிங்கம் செய்யும். நாய்கள் வந்து பீடத்தை அசிங்கம் செய்யும். பொதுமக்கள் சிலையைச் சுற்றி குப்பை கொட்டுவார்கள். தயவுசெய்து சிலைகள் வைக்காதீர்கள். ஒரே ஒரு இடத்தில் ஒரே ஒரு கோயில் கட்டி அதை நன்றாக பராமரியுங்கள். முடிந்தால் கோயிலுக்கு அருகே ஒரு குளம் வெட்டுங்கள்.
அக்கா உங்களுடைய ஆத்தரம் கலந்த பொருமையான அனுகுமுறை பேச்சு நிதர்சமான உலக உண்மைப் பதிவு ❤ உலக அளவில் கேப்டன் புகழ் மேலோங்கி நிற்கிறார் இந்த தருணத்தில் நானும் ஒரு தமிழன் என்பதில் திமிராக கெத்தாக தில்லாக சொல்ல பெருமை படுகிறேன்🎉❤❤❤
நல்லது சகோதரர் சகோதரிகளே.... சாதியால் மதத்தால் இனத்தால் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பேசும் மொழியால் பிரிந்து கிடந்த தமிழக மக்களை அன்பால் ஈகை குணத்தால் ஒனறினைத்தார் கேப்டன்.
இனிமேலாவது திருந்துங்கள் நல்லவர்களை பழித்து பேசி புறந்தள்ளிவிட்டு மீண்டும் மீண்டும் ஊழல் நாய்களையும் இயற்கை வளங்களை சுரண்டும் பிசாசுகளுக்கும் வாக்கு செலுத்தி நாசமாக போய்விடாதீர்கள்
பேசிய அத்தனை வார்த்தைகளிலும் உண்மை மட்டுமே உள்ளது என்பதை இப்போது உணர்ந்துவிட்டோம் சாமி.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் ஆகிவிட்டது இப்போது.. தவறு செய்து விட்டோம் சாமி.. நல்ல தலைவனை இழந்துவிட்டோம்..
எல்லாம் சரி . நல்ல மனுசன் அவரை பின்பற்றி நல்லது செய்யுங்க அதோடில்லாமல் தமிழ் பற்றையும் வளர்க்கனும், நல்ல தமிழ் பேச,படிக்க பழகுங்கள். லோக்கலாக தமில்,தமிலு!!! பெரியவர்களை பெரிசு.... அது, இது.. லோக்கலா மரியாதையில்லாமல்!! ஆங்கிலம் கலந்த தமிழ் என்றும் பேசாதீங்க. நல்ல தமிழ் ,மரியாதைக்குரிய மொழி அதை அழகாக பேச முயற்சிக்கலாமே, மரியாதை நிமித்தமாக இருக்கும். நம்மையும் மரியாதையுடன் பார்ப்பார்கள்!!! நம்ம தாய் மொழி ,நம்ம பூமி, நம்ம தெய்வங்கள் எதையும் கைவிட்றாதீங்க 🎉. வாழ்க வளர்க இளைய சமுதாயம் அவர் நேர்மையான , யதார்த்தமான ஒழுக்கமான வாழ்கை கடைபிடிக்க மயற்ச்சிக்கலாமே.!!! மது அருந்த வேண்டாம் தவரு செய்வது இயல்பாக இருக்க!!! அதை சரிப்படுத்த முயற்ச்சிக்கலாம். இதுவும் கடந்து போகும். வாழ்க்கை வாழ்வதற்கே. 🎉 நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல குடிமகனாக வாழ்ந்த அவரை நேசிப்பவர்கள் நிச்சயம் தம் வாழ்கையில் வெற்றிபெற்று அவருக்கும் மரியாதை செலுத்தும் வண்ணம் இருக்கும். 🎉 ஜெய் ஜவான்ஸ் 🎉வீரத்தமிழர்கள் சிந்தித்து செயல்பட வாழ்த்துக்கள். 🎉
நான் கேப்டன் விஜயகாந்த் இறப்பிற்குப் பிறகு ரொம்ப மிஸ் பண்றேன். எத்தனையோ பேர் இறந்து இருக்காங்க ஆன எனக்கு இவ்ளோ வலிச்சது இல்ல. கேப்டன் இறப்பு எனக்கு ரொம்ப வலிக்குது. உண்மைய இப்ப பீல் பண்ற அவரு முதலமைச்சரா இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும். நான் முதல்ல ஓட்டு போட்டது கேப்டனுக்கு தான்.. 😢😢
Vijakanth sir ivalo senji irukaru ipo than theriya varuthu,Enaku pidikum avara ipo Romba pidikuthu,but avaru pesa kuda mudiyama poitare,china gounder padam varumpothu nan school students.