Amen. செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர் அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத்தடையென்ன உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் உவகை என்னும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய் வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே உலகம் எல்லாம் இணைவது உன் உள்ளம் ஒன்றிலே இயற்கை நிறைவு கொள்வது உன் செயலின் பண்பிலே மனித உள்ளம் மகிழ்வது உன் புனித உறவிலே மறையும் வாழ்வு மலர்வது உன் மகிழ்வின் பங்கிலே…
திருவிருந்துக்கு அழைக்கப்பட்ட அனைவரும் பேருபெற்றவர்கள் தான். இதை இன்பமாக உண்ண வேண்டும். இறைமகன் நம்மில் உறைய வருகிறார். அவரை ஏற்க நம்மை நாமே நல்ல முறையில் தயார் செய்ய வேண்டும் என்று இப்பாடல் கூறுகிறது.