அருமை... ஆகச்சிறந்த முயற்சி சகோதரா.... உங்களது பதிவேற்றப்பட்ட காணொலியினை முதல் முதலில் 23.04.2023 இன்று பார்க்கின்றேன்... உங்களின் மீது நன்மதிப்பு வந்து விட்டது .... பயணம் தொடரட்டும் ... வாழ்த்துகள்.... இறுதியாக வினாவிற்கான விடை அளித்தால் மிகச் சிறப்பாக இருக்கும் .... தொடர்ந்து முயற்சியுங்கள்.... சேலம்.. தமிழ்நாடு ... வாழ்த்துகள்🎉🎉🎉
ஹலோ உனக்கு தெரியாம நீ மத்தவங்க கிட்ட கேட்டு விசாரிக்கிற தெரியாதது சொல்லிக் கொடுக்கிறேன் என்று சொல்லாம போறியே உனக்கே தெரியாது நீ அவங்க கிட்ட கேட்டு கோப்பி அடிக்கிற
சுத்தம் என்பது தூயத்தமிழ்ச்சொல் தான். அறிஞர் அரசேந்திரன் ஆய்ந்து நிறுவியுள்ளார்.வேர் சுதை.சுதை =வெண்மை, சுண்ணாம்பு என்று பொருள். தூரிகையும் தமிழ்ச்சொல் தான். சமஸ்கிரதத்தில் வேர் இல்லை. சமஸ்கிரதத்தில் பெரும்பாலான சொல்கள் இடுகுறிப்பெயர்களே.தமிழில் அப்படியல்ல. "எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே " என்கிறது தொல்காப்பியம்.
ஒரு சொல் சற்று வித்தியாசமாக இருந்தால் போதும் அது தமிழ் சொல் அல்ல என்று கூறி அதை சமசுகிருதத்திற்கு தாரை வார்த்து கொடுத்து விடுவது மிகத்தவறானது. அவை தமிழில் இருந்து சமசுகிருதத்திற்கு போன திரிந்த சொல்லாக இருக்கலாம். உதாரணமாக தேசம் என்பது தமிழ்ச்சொல் அது தேயம் என்று தூய தமிழ் சொல் மருவி உருவானது, அதிலிருந்துதான் தேஷ் என்ற இந்திச்சொல் உருவானது, ஆனால் தேஷ் என்ற சொல் இந்தி மொழியில் இருப்பதை காரணம் காட்டி தேசம் என்பது தமிழ் சொல் அல்ல, எனக்கூறுவது மடமை, தேயம் என்ற சொல் பேச்சு வழக்கில் திரிந்து தேசம் என மாறுவது போல ஏகப்பட்ட தமிழ் சொற்கள் பேச்சி வழக்கில் திரிந்து வழங்கப்படுகிறது. இலக்கிய வழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் வேறுபாடு தெரியாமல் தமிழ் சொற்களை பிறமொழிக்கு தாரை வார்க்க கூடாது, மாறாக பிறமொழிகளில் கலந்துள்ள தமிழ் சொற்களை கண்டறிந்து தமிழில் சேர்க்க வேண்டும்.
அந்த பயத்தை போக்க வேண்டும் என்பதற்காகத்தான் நமது நிகழ்ச்சிகள் அமைகின்றன நாம் எதற்காக வெட்கப்பட வேண்டும் நமக்கு தெரிந்த விடயத்தை சொல்வதற்கு முன் வருவதில் தவறில்லை அதேபோன்று தெரியாத விடயத்தை கற்றுக் கொள்வதற்கு முன் வருவதும் தவறில்லை. ஆனால் நமது கல்வித் திட்டம் தெரியவில்லை என்றால் அவன் கோழை என்றும் வெற்றி பெற வில்லை என்றால் அவன் தோற்றுப் போடுவேன் என்றும் குற்றம் சாட்டுகிறது எனவே அவற்றை எல்லாத்துளித்து மக்களுக்கு ஒரு நல்ல சேவை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் நமது பணி தொடர்கிறது தொடர்ந்தும் இணைந்திருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
தூரிகை என்றால் Brush not pen. எழுதுகோல் பொதுவாக pencil ஐ குறிக்கும். காரணப் பெயர்கள் பல இடங்களில் பாவனையில் உள்ளன. அவை தவறல்ல. உதாரணங்கள் மண்வெட்டி, உழவன். குளிர் கழி, காரணப் பெயர் அல்லவா? நுருவை யும் (நுருங்கக் கூடியதால்) காரணப் பெயர்தான் பல புதுச் செற்களை நீங்கள் அறிமுகம் செய்கிறீர்கள். அவை அங்கீகரிக்கப்பட்டவயா அல்லது உங்கள் சொந்தக் கண்டுபிடிப்பா?
@@rajasathiya1370 இவர் அறிவை வளர்ப்பதற்காக இந்த முயற்சியை எடுப்பதாக சொல்கிறார். பாராட்டப்படவேண்டிய விடயம். அதே சமயம் அறிவு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவியாக இருக்க வேண்டும். தமிழின் ஆதிக்கம் ஆங்கிலத்தை மிஞ்சினால் மட்டும்தான் இது போன்ற தமிழ்ச் சொற்கள் நிரந்தர பாவனையில் வரும். அதுவரை இது போன்ற நிகழ்ச்சி ஒரு வினோத விளையாட்டாக மட்டுமே கருதலாம். அதில் தவறில்லை.
அறிவை வளர்ப்பது மட்டுமல்ல எனது பணி சவால்களுக்கு முகம் கொடுக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் ஒலிவாங்கியை கண்டதும் மக்கள் ஓடுகிறார்கள் அப்படி ஓடாமல் சற்று நின்றால் ஏதாவது அறிந்து கொள்ள முடியும் இதைப் போன்று நம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடுகிறோம் அந்த பயத்தை இல்லாமல் ஆக்குவது இதன் பிரதானமான நோக்கமாகும் நமது நிகழ்ச்சிகள் அநேகமானவருக்கு புரிவதில்லை அதனால் தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன நிச்சயமாக தொடர்ந்தும் இணைந்திருங்கள். அப்பொழுது அனைவருக்கும் புரியும்
@@TamilVoiceNews உங்கள் முயற்சிகள்/நிகழ்சிகள் (தமிழிலும் சிங்களத்திலும்) எல்லாம் அபாரமானவை. மெச்சத்தக்கவை. ஆமாம், உண்மையில் நமது மக்கள் சவால்களை (ஒலிவாங்கியை) கண்டு ஓடுவதைப் பார்தால் வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிற. சவால்களுக்கு முகம் கொடுக்கத் தயங்கும் ஒரு சமுதாயம் எப்படி முன்னேறும். நாடு முன்னேறாததற்கு வெறுதே அரசியல்வாதிகளை குறை கூறுவதில் பயனில்லை. மக்களும் அறிவையும் அதன் மூலம் பகுத்தறிவையும் வளர்த்தாலே சமுதாயமும் நாடும் முன்னேறும். உமது எதிர்வரும் முயற்சிகளுக்கு எனது நல் வாழ்த்துக்கள். எனது முன் கூறிய கருத்து இந்தக் காணோளியைப் பற்றியது. அதாவது, புழக்கத்தில் இல்லாத சொற்கள் வாழ்க்கையில் பயன்படாது என்பதே.
பேனாவுக்கு தூவல் தூரிகை என்ற இரண்டு பெயர்கள் உள்ளது ஏனென்றால் ஆரம்ப காலத்தில் பிரஷ் போன்ற ஒரு பொருளை பயன்படுத்தி தான் எழுத்துக்களை எழுதினார்கள் ஆகவே அதை தூரிகை என்று கூறினோம் பிற்காலத்தில் அது பெரிதாக வந்து ஓவியம் வரைவதற்கு பயன்படுத்தினார்கள் இதனால் நாங்கள் அதை தூரிகை என்று மாற்றி விட்டோம் தொழுகை என்று இருந்த பேனாவுக்கு தூவல் என்று பெயரை மாற்றி வைத்துள்ளோம் இதுதான் இங்கு வந்த சிக்கல்
தூரிகை என்பது brush என்பதை குறிக்கும் சொல்லாகும் பேனை க்கு தூரிகை என்பது பொருள் அல்ல. தூரிகை தூரல் துமில் துரும்பு இன்னும் பல சொற்கள் சிறிய அளவில் உள்ளதை குறிக்கும் சொற்கள் ஆகும்.... ஆகவே பேனை என்பதற்கு தமிழ் சொல் என்ன...? பேனை என்பதற்கு தமிழ் சொல் பீலி என்பதே சரியா தமிழ் சொல் ஆகும்
we like your videos but i hope you change your method of approaching people. Take this as a constructive criticism and implement it on your future videos. Please dont ambush people, you can let people know off camera about what you are about to do before you start recording them, if they are interested, then its would be comfortable for you as an anchor, for the parcipants and for us as viewers. This way you could not only improve your videos, also you could respect and value people's privacy. Eelam people are very new to such media exposure.