பிஸ்மில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்! அழகான உரை. தமிழ் மொழிபெயர்ப்பு பைபிளை பார்க்கும்போது சமஸ்கிருத வார்த்தைகளாகவே இருப்பதை பலமுறை கவனித்திருக்கிறேன். ஏன் அழகான தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என நினைத்திருக்கிறேன். தமிழுக்கு சேவை செய்தவர்களில் கிருஸ்துவர்கள் மிகப்பலர். இப்படி இருக்கும்போது ஏன் இந்நிலை யோசித்துள்ளேன். இப்போதுதான் தெரிகிறது யாழ்பாண நல்லூர் ஆறுமுகநாவலரும், மழவை மகாலிங்க ஐயர் சேர்ந்து செய்த வேலை என்பதை அறியச் செய்தீர்கள். பாராட்டுக்கள், நன்றி! - அமீன், ஆம்பூர்
சரியான கருத்து.... கத்தோலிக்க திரு அவை இதிலிருந்து எப்போதே வெளியேறி விட்டது... பொது மொழிபெயர்ப்பை முழுமையாக பயன்படுத்துவர்கள்... கத்தோலிக்கர்கள்.... காலத்திற்கு ஏற்ப சொற்களை திருத்தி கடவுள் அன்பை நிறைவோடு சுவைப்பவர்கள் கத்தோலிக்கர்கள்....
காலத்திற்கெற்ப சொற்களை மாற்றி ..ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும், ஓரின சேர்க்கையை காலத்திற்கெற்ப மாற்றி அனுமதி கொடுத்து உங்கள் churchலையே கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களே, என்ன கொடுமை இது???
@@Mahebmeharகத்தோலிக்க திருச்சபையில் இன்னும் ஓரினச்சேர்க்கை தடைசெய்யப்பட்டதுதான்! ஆனால் சில புரோட்டாஸ்ண்டு திருச்சபைகள் ஓரினச்சேர்க்கை திருமணங்களை நடத்துகின்றன😂 .
எந்த மொழியில் பைபிள் கையாடல் செய்யப்பட்டு இருந்தாலும்,,,,,தேவனுடைய பிள்ளைகள் தெளிவாக புரிந்து கொள்வார்கள்,,,புரிய வைப்பது தேவனாகிய கர்த்தர் அல்லவா,,,,நமக்கு ஞானத்தை தருவது கர்த்தர் அல்லவா,,,ஸ்தோத்திரம் ஐயா
அப்படியல்ல சாமானியனுக்கு புரியாத அந்த மொழி நம்மை இன்றும் பொருள் புரியாமல் தவறான புரிந்து கொள்ளுதலில் வைத்துள்ளது... இன்னொன்று சமஸ்கிருதம் கலந்ததே தமிழை அழிக்கதான் அப்படி அழித்து பிரித்ததுதான் இன்றைய மழையாளம்.
உண்மையில் பெர்சிவர் என்னும் பாதிரியார் தேவனுடைய வசனத்தை ஆறுமுக நாவலர் மொழிபெயர்ப்பதின் விளைவால் தேவனுடைய வார்த்தையின் வல்லமையையும் தேவன் தரும் இரட்சிப்பையும் அடைய நல்ல வாய்ப்பாக அமையக்கூடும் என்றே கருதி இப்பொறுப்பை அவரிடம் கொடுத்திருக்க வேண்டும் ( முயற்சி பெர்சிவருடையது 🛐 இரட்சிப்பு தேவனுடையது ✝️ மனம் திரும்புதல் ஆறுமுக நாவலர் உடையது) 💟
உங்கள் பதிவு மிகவும் அற்புதம் இதைப் போன்று இன்னும் அதிகமான தேவ செய்திகளை எங்களுக்காக பதிவிடவும் உங்களைப் போன்ற ஊழியர்கள் இவ்வுலகத்தில் மிகவும் குறைவே உள்ளதை உள்ளபடி கூறும் உங்களை கடவுள் உங்கள் பலத்தையும் உங்கள் ஆத்மாவையும் ஜீவனையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென்🙏🙏🙏
ஐயா, இதில் என்ன தவறு, பரிசுத்த வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் சாரமேற்றப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளில் கர்த்தரை கனவீனப்படுத்தும் வார்த்தைகள் ஏதுமில்லை. ஆனால் பொது மொழிபெயர்ப்பு அப்படியல்ல...
பிதா நம் வேண்டுதல்களை எந்த மொழியில் இருந்து செய்கிறோம் என்பதை பார்ப்பதில்லை, மாறாக அவர் இருதயத்தை கண்டு அறிகிறார் ஏன் என்றால் அவர் சர்வ வல்லவர், நீங்கள் பேசுவதை உங்கள் மனதில் உதிப்பதற்கு முன்பே அவர் அறிவார் அவர் நினைத்தது என்றும் தடை படாது, அவர் தான் யாரை முன் குறித்திருக்கிறாறொ அவர்களுக்காக எல்லாவற்றையும் ஆயத்தம் செய்துள்ளார் No one can change his plan
இவர் சொல்ல வரும் கருத்து உங்களுக்கு புரியவில்லை என நினைக்கிறன் .. அவர் வசனத்தை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள தமிழ் வழி வேதாகமம் அவசியம் என்கிறார் நீங்கள் அது புரியாமல் ஏதோதோ பேசுகிறீர்கள்
@@murugesanvelayutham. நீங்கள் உபயோகிக்கும் தமிழில் எது தூய தமிழ் என்று உங்களால் கூற முடியாது என்னால் வாசித்தது புரிந்து கொள்ளும் அளவு நன்றாகவே உள்ளது அது,
தமிழ் மொழியின் தொன்மையை சீரழிப்பதற்காக திட்டமிட்டுச்செய்யப்பட்டதுதான் இந் சமஸ் கிருத கலப்படம். அம்மா என்றால் அம்மாதான், சித்தி என்றால் சித்திதான். அம்மாவை சித்தியாகவும்,சித்தியை அம்மாவாகவும் பார்ப்பது நல்லதல்ல.
மிக அருமை ஐயா இதில் இவ்வளவு சமஸ்கிருத கலப்புகளா நாம் இரு தமிழில் படிக்கிறோம் என நினைத்தால் இத்தனை சமஸ்கிருதங்கள் இருந்தால் அந்தப் புனித புத்தகத்தின் அடிப்படையே ஆட்டம் பட்டுவிடும் உங்களது மிகச் சிறந்த முயற்சி மிக அழகாக இதுவரை எந்த இந்த மதகுருவும் இந்த அளவுக்கு சிந்தித்து இருக்க முடியாது அதை உலகிற்கு சொன்னது சொல்லவும் இல்லை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
சமஸ்கிருதம் ஒரு மொழி தான். அது தவறு அல்ல. ஆனால் மற்ற தமிழ் மொழிபெயர்ப்புகளோடு நான் ஒப்பீடு செய்து பைபிளை வாசிக்கும் போது, தெளிவான விளக்கம் கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து...
முக்கியமாக இனப்பிரிவுகளை ஜாதி ஜாதி என்று மொழிபெயர்த்ததினால் இன்றைக்கும் சில சாத்தான் கூட்டம் ஆபிரகாம் ஜாதி பார்த்தான் என்று அறிவில்லாமல் கூச்சலிடுகிறது ஐயா
கத்தோலிக்க வேதாகமம். ஆனால், நான்கு தமிழ் வேதாகமங்களை ஒப்பீடு செய்து கொள்ள முடியும். பயன்படுத்துங்கள்... play.google.com/store/apps/details?id=com.catholictamil.bible
மொழிபெயர்ப்பு செய்தவர்களின் தவற்றைக்கூட மன்னிக்கலாம். ஏன்னெனில் அன்றைக்கு அவர்களுக்கு ஆங்கில, எபிரேய மற்றும் கிரேக்க புலமை எவ்வளவு இருந்திருக்கும் என்று நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஆனால் இன்றைய போதகர்கள் செய்யும் வேத புரட்டை மன்னிக்கமுடியுமா?
😭😭😭😭பிரதர், நீங்க என்னதான் விழுந்து, விழுந்து, பைபிள் படித்தாலும்,1000 முறை படித்தாலும், ஆவியானவர் தாமே அதன் உள் அர்த்தத்தை விளங்க செய்வார், ஏசு கிறிஸ்து பேசிய எல்லா வார்த்தையுமே உவமையாலேயே பேசினார், என அறிகிறோம், அதை நம் மனசுக்குள் ஊடுருவி, அர்த்தம் புரிய வைத்து, உணர்த்துவது ஆவியானவர் தானே, ஆவியானவர் எங்கே உண்டோ, அங்கே விடுதலை உண்டு???????
கத்தோலிக்க வேதாகமம் தூய தமிழில் இருக்கிறது நாம் எளிதாக்க புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது சகோதரா அத்தனை எதிர்ப்புகள் மத்தியிலும் நம் தாய்மொழியில் நம் வேதாகம் நமக்கு கிடைக்க செய்தாரே அவர்தான் நம்தேவன் நன்றி
பிரிந்த அவையினர் இப்போதாவது இது குறித்து பேச ஆரம்பித்து கண்டு கத்தோலிக்கக் கிறித்தவனின் மட்டற்ற மகிழ்ச்சி. பிரிந்த அவையினருக்கு மணிப்பிரவாள தமிழில் 'ஆராதிப்பதில்' தான் ஒரு நிறைவோ என்னவோ என்று பல முறை நான் நினைத்ததுண்டு. கத்தோலிக்க குருவாக இருந்து அங்கு சென்ற தந்தை பெர்க்மாண்ஸ் உட்பட! கத்தோலிக்கத் திரு அவையின் மன்றாட்டுகள் நூறு விழுக்காடு தனித்தமிழில் மாற்றம் பெற்று விட்டன எப்போதே. எ.கா. பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, இப்போது விண்ணகத்தில் இருக்கும் எங்கள் தந்தாய்.
பிதா நம் வேண்டுதல்களை எந்த மொழியில் இருந்து செய்கிறோம் என்பதை பார்ப்பதில்லை, மாறாக அவர் இருதயத்தை கண்டு அறிகிறார் ஏன் என்றால் அவர் சர்வ வல்லவர், நீங்கள் பேசுவதை உங்கள் மனதில் உதிப்பதற்கு முன்பே அவர் அறிவார் நீங்கள் முழு தமிழில் வேண்டுகிறீற்கள் என்று பெருமை கொள்ள வேண்டாம்,
@Purave_Rubavathiye_yezhunduvaaபாரம்பரிய லத்தீன் திருப்பலி வழிபாட்டை நேசிக்கும் கத்தோலிக்கர் சிலர் உலகம் முழுவதும் உள்ளனர். சரி. அதற்கும் தமிழ்நாட்டில் வடமொழிக்கலந்த தமிழ் பயன்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று சற்று விளக்கினால் நல்லது. மணிப்பிரவாளம் தமிழ்நாட்டரசினால் ஒழிக்கப்பட்டு பல்லாண்டுகள் ஆகியும் இன்னமும் அதைத்தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பது குறித்து வருத்தம் 😢. 0:09
Praise God. Brother, நான்கு தமிழ் வேதாகமங்களை ஒப்பீடு செய்து கொள்ள முடியும். பயன்படுத்துங்கள்... play.google.com/store/apps/details?id=com.catholictamil.bible
வணக்கம் Brother Sasikumar, Praise the Lord. உங்களுடைய இந்த பதிவுக்கு நன்றி. ஆங்கிலத்தில் " Amplified Bible" என்றும் "Message Bible" என்றும் இருக்கின்ற பதிப்புகளால் நான் பலனடைகிறேன். தமிழில் இப்படியான மொழிபெயர்ப்புகள் செய்யப்படுவது நல்லதா, இல்லையா என்பதைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? சமீபத்தில் "Blessing Bible" என்ற தமிழ் பரிசுத்த வேதாகமப் பதிப்பு வாங்கினேன். அதில் "றா, னா, ணா, னை, ணை, லை, ளை" எழுதுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கர்த்தர் என்ற வார்த்தை எல்லா இடங்களிலும் "தடித்த" எழுத்தாக எழுதப்பட்டிருக்கின்றது. நீங்கள் சொன்னபடி "தமிழ் பரிசுத்த வேதாகம" மொழிபெயர்ப்பில் அந்த தவறு தவிர்க்கப்பட்டிருந்தால், வேத வசனங்களின் தார்ப்பரியம், அர்த்தம், உணர்வு, விளக்கத்தன்மை மாறியிருக்கும் என்று நானும் நம்புகின்றேன். நன்றி. வணக்கம்.
சர்க்கரையின் இனிப்பை விட, தேனின் சுவை அதிகம். பழைய மொழிபெயர்ப்பு சர்க்கரை என்றால், தாய் மொழியாம் தூய தமிழில், வரும் மொழிபெயர்ப்புகள் தேன் போன்றவை. ஒப்பீடு செய்து வாசிக்கும் போது கடவுளோடு இன்னும் நெருங்கி சேருவதற்கு பெரும் உதவிகரமாக இருக்கும். நன்றி ஐயா.
சமஸ்கிருத மொழியினை வெறுக்காதீர்கள். அதில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை குறித்து அதிக பாடல்கள் உள்ளன. அம் மொழியில் கூறப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள். அனேக மக்கள் ஆண்டவரை அறிந்து கொள்வார்கள்.
You,wise man could have requested or recommended your forefathers to help in translations.This kind of cunningness to confuse or show hatred at one another among us is futile.
சமஸ்கிருதம் நன்கு செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம் ஒரு மொழி ஏன் செய்ய வேண்டும் யார் செய்தார்கள் எங்கு செய்தார்கள் புனித தோமையாரின் வழியில் வந்தவர்கள் தான் சமஸ்கிருதம் என்ற மொழியை உருவாக்கினார்கள் எல்லா மொழிகளின் கலப்பு எல்லா மக்களுக்கும் சுவிசேஷம் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய மொழிகள் கூட கலந்திருக்கிறது காட் வெல் அவர்கள் கூற்று
The Holy Spirit communes with us . He doesn't need a language for that. Listen to His still, small voice. No need to highlight the differences & cause divisions. We need to stand united by God's grace. As Shakespeare says,a rose smells as sweet even if called by any other name. The Bible is as powerful & living in any language. Don't make this an issue & confuse people
Super reply Please dont hesitate to comment on key issues. In this whats app age all important doctrines are sidelined by unnecessary rubbish. I have also commented below
பொதுவாக நாம் எல்லோரையும் குற்றம் சாட்டி விட முடியாது. வேதாகம மொழிபெயர்ப்பில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கு அதிகம். எல்லா திருச்சபைகளிலும் சரியானவைகளும் உண்டு தவறானவைகள் உண்டு. நாம் சரியானதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நாளில் எல்லோரும் சரியான இலக்கை அடைவோம். அப்படி செய்ய, கடவுள் மிகுந்த வல்லமை உள்ளவர்.
சரியான சவுக்கடி ஐயா பொது மொழிபெயர்ப்பு என்று சொல்லி எதையோ திணிக்கிறார்கள். அதில் இறைவன் என் ஆயன் என்றுசொல்லப் பட்டுள்ளது. மேய்ப்பன் என்கிற பழைய பதம் தானே எல்லோருக்கும் புரிகிறது
New Tamil bible is not good Sanskrit mixed Tamil bible is the best. Don’t create unnecessary problem.it’s a high standard, Sanskrit mixed time bible and king James English version bible are the best.
Praise God. Brother, நான்கு தமிழ் வேதாகமங்களை ஒப்பீடு செய்து கொள்ள முடியும். பயன்படுத்துங்கள்... play.google.com/store/apps/details?id=com.catholictamil.bible
திரித்துவம் / Trinity என்னும் வார்த்தை எந்த மொழியிலும், மொழிபெயர்ப்பிலும் கிடையாது. திரித்துவம் ஒரு விக்கிரக ஆராதனை என்ற அடிப்படையே புரியாமல் போதிக்கிற குருடனுக்கு வழி காட்டும் குருடர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இதில் மொழிபெயர்ப்பு ஒரு பிரச்சனையே இல்லை.
Stupidity That concept itself was stolen from Judaism which worshipped the triune God. Call it by some other word if you like.But how can u blaspheme that it is pagon?
Praise God. Brother, நான்கு தமிழ் வேதாகமங்களை ஒப்பீடு செய்து கொள்ள முடியும். பயன்படுத்துங்கள்... play.google.com/store/apps/details?id=com.catholictamil.bible
எப்படியும் இருந்து விட்டு போகட்டும். இந்த தமிழ் பைபிளைப் படித்து எண்ணற்றோர் கர்த்தரை தெய்வம் ஆக ஏற்று கொண்டனர். கர்த்தரும் இந்த வசனங்களை அங்கீகரித்து ஏற்று கொண்டார். உங்களுக்கு என்ன அதில் பிரச்சினை.
Without the holy spirit nothing can be scripted. The holy Bible that we have is the out come many precious blood of servants of Christ Jesus. If there is no output from the old Bible then what you say can be taken into concern. But personally who ever you ask who carries the Parisutha Vedagamam will portray what it is. Man where were you all when missionaries where toiling to write the holy scriptures. I feel this is also works of satan to bring confusion among Christian to see which one is good or bad. More than language, the words of Lord Who works in us is important, I think Parisutha Vedagamam has done it.
I think, Video not fully viewed by you... I suggest to compare new Tamil versions to get deeper idea. Not told to avoid bower translation. God bless. Bro/Sis.
விசுவாசம்=நம்பிக்கை எ.கா 1கொரி.13:13 Faith, hope and love = விசுவாசம், நம்பிக்கை, அன்பு (பழைய மொழி பெயர்ப்பு) = நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு (புதிய மொழி பெயர்ப்பு).
விசயங்கள் எல்லாம் சரி. தமிழுக்காகப் பேசும் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு சரியில்லையே... இது ஒரு புறம் இருக்கட்டும்... இன்றைக்கும் பிரபலமாக உள்ள பெரிய ஊழியர் முதற்கொண்டு எல்லா ஊழியர்களும் அக்கினி-akkini, aggini, பாவம்-paavam, baavam, தேவன்-thevan, dhevan, துன்பம்-thunbam, dhunbam, பாரம்-paaram, baaram என உச்சரிப்பதை பெருமையாக, தெய்வீகமாக எண்ணுகிறார்கள். இது ஒரு விதமான சமட்டுகிருத, அடிமை மனப்பான்மைதான்... ஆங்கிலத்தில் உள்ள B, D, G, F, J, போன்ற உச்சரிப்புகளுக்கு இணையாக தமிழில் உச்சரிப்பு இல்லை. இந்த எழுத்துக்களெல்லாம் ப-P, டி-T கி-K செ-Che என உச்சரிப்பதுதான் சரியானது..... தமிழ்தான் தேவ மொழி... சமட்டுக்கிருதம் நீசர்களின் மொழி... எபிரேய, அராமிய மொழி பேசும் தம்பதிகள், தெய்வக் குழந்தைக்கு "இம்மானுவேல்" என்று பெயரிடுவார்கள் என தூதன் சொன்னான்.. இம் மனு எல்... இந்த மனு(க்குலத்தோடு இருக்கும்) எல்- கடவுள் என்று அர்த்தம்... ஏலி ஏலி லாமா சபக்தானி. எல், எல், எல்லா சாபத்தையும், தா நீ.. சிலுவையில் தொங்கும் ஏசு வேதனையின் உச்சத்தில் பரம்பிதாவோடு பேசின இந்த வார்த்தைகள் சுற்றியிருந்தவர்களுக்குப் புரியவில்லை என்பதைக் கவனிக்கவும்... ஏன் புரியவில்லை என்றால் பேசினது, அராமிய, எபிரேய மொழி அல்ல.. அவர்களாக தவறாகப் பார்த்து கொண்டு கடற்காளான், காடியை எடுக்க ஓடினான்.... குமாரனுக்குப் பெயரிட்டதும் தமிழில் குமாரன் பிதாவோடு பேசினதும் தமிழ்.... ஏசு அய்யா-ஏசாயா, ஈசாக்கு எல்-எசக்கியேல், சாமிஎல்-சாமுவேல், ஓபேத் அய்யா-ஒபதியா, சால மகன்-சாலமோன் (சிறந்த மகன்)...... எனவே கிறிஸ்தவர்கள் தமிழைச் சரியாகப் பேச, எழுத உச்சரிக்க கற்றுக் கொள்ளவும்... தமிழ் பைபிள் மாத்திரமே எபிரேய, கிரேக்க மொழிகளிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது.. மற்றவை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.... தமிழ் மக்கள், தமிழைப் பேசுபவர்களைக் கொண்டுதான் உலகின் முழுமையான கடைசியான உலகை அசைக்கும் எழுப்புதல்...
பிரதர் நீங்கள் சரியான தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாமே.... பிரதர் எல்லா மொழியும் சாபத்தில் இருந்து உண்டானவைகள் ..... இதற்காக வேதத்தை இனிமேல் வாசிக்க மாட்டீர்களா என்ன??
உங்க கருத்து சரியாக இருந்தாலும், இப்போ பேசி பயன் உள்ளதா என்று யோசிக்க வேண்டியதாய் உள்ளது. இப்போது கூட KJV மொழிபெயர்ப்பு தான் இலகுவாக உள்ளது. ஆங்கிலம் ஆனாலும் சரி தமிழ் ஆனாலும் சரி இரண்டை வாசிக்கும் போது ஓர் துள்ளல் ஓசை உண்டு மற்ற மொழி பெயர்ப்புகளில் இதை உணர முடியாது. அது போல் இறைவன் என்றோ கடவுள் என்றோ பெயர் வைப்பதில்லை ஆனால் தேவன் என்றும் மகாதேவன் என்றும் பெயர் வைப்பது இந்துக்களில் சகஜமாக உள்ளது. காலப்போக்கில் புதிய மொழி பெயர்ப்பு பரவலாகலாம். நான் KJV மொழி பெயர்ப்பில் இருந்து வெளி வர முடியாது.
அதுதான் துவக்கத்திலேயே சொன்னேன். இந்த மொழிபெயர்ப்பு நம்முடைய வாழ்வியலோடு கலந்து விட்டது. ஆகவே நான் அதை விட்டு விலகச் சொல்லவில்லை. மாறாது மற்ற மொழிபெயர்ப்புகளோடு ஒப்பீடு செய்து, இன்னும் அதிகமாய் கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்துகிறேன். நன்றி ஐயா...
சமஸ்கிருத வார்தைகள் கலந்து இருக்கிறது நீங்கள் பட்டியலிட்டவை எல்லாமே சமஸ்கிருத வார்த்தை இல்லை தமிழ் இலக்கண புஸ்தகத்தை ஒருமுறை நீங்கள் சொல்லும் வார்த்தையோடு ஒப்பிட்டு பார்க்கவும் ஆதி என்கிற வார்தைக்கு இத்தனை அர்த்தம் தழிழ் இலக்கணத்தில் உள்ளது. தொடக்கம்; தொடக்கமுள்ளது; காரணம்; பழைமை; கடவுள்; எப்பொருட்கும் இறைவன்; சூரியன்; சுக்கிரன்; திரோதான சக்தி; காண்க: ஆதிதாளம்; அதிட்டானம்; ஒற்றி; காய்ச்சற்பாடாணம்; மிருதபாடாணம்; நாரை; ஆடாதோடை; குதிரையின் நேரோட்டம்; மனநோய்
தூய மனதுதான் தேவை! தூய தமிழ் தேவையில்லை! எப்ரேய, கிரேக்க மொழிகளிலுருந்துமொழி பெயர்த்த காலம் சமஸ்கிரிதம் கலந்த தமிழ் பேசப்பட்ட காலம்! தினமணி என்று ஒரு செய்தித்தாள் உண்டு 50 வருடத்திற்கு முன்னர் அதன் செய்திகள் சமஸ்கிரதம் கலந்த வார்த்தைகளில் தான் வரும்! நானே படித்திருக்கிறேன்! தேவை இல்லாத ஆணியை பிடுங்காதே! கடைசியாக " கர்த்தர்" என்று சொன்னது அர்த்தம் YHWH யாவே! கடவுள் என்ற வார்த்தை எல்லா மத கடவுள் களையும் குறிக்கும் பொதுவான வார்த்தை!
மூடரே,பிரம்மா என்றாலும் கடவுள் என்றுதான் அர்த்தம்,?? அஹம் பிரமாஸ்மி என்றால் நானே கடவுள், பார்பனன் சொல்லும் வார்த்தை அது?? பிரம்மா என்றால் அது ஒரு தனி கடவுள் அல்ல??? அல்லாஹ் அக்பர் என்றால், இறைவன் மிக பெரியவன்,?? அல்லாஹ் என்பது தனி கடவுள் அல்ல?? அல்லாஹ் என்றால் இறைவன், இறைவன் என்றால் அல்லாஹ், அந்த அல்லாஹ் வின் பெயர் என்ன??? சிவன், ஈசன், ஈஷா, மூன்றும் ஒரே கடவுளின் பெயர், சிவன் தமிழன் கொடுத்த பெயர், சரி?? ஈஷா, ஈசன் என்றால் அதை யாரு கொடுத்தது?? ஈஷா என பார்பாணன் கொடுத்த வடமொழி சொல்லும், சமஸ்கிரதமும், ஏன் குரானில், ஏசு வுக்கு பெயர் ஆனது?? குரான் படி ஈஷா நபி என்பது ஏசு கிறிஸ்து வை குறிக்கும் சொல்?? அந்த பெயர் ஏன் சிவனுக்கு வந்தது????
நீங்க சொன்ன yhwh தமிழ் அர்த்தம் தெரியாதா, நாலு எழுத்து ஆங்கிலம், யாவே என்பது தமிழ், ஏன் இந்த தடுமாற்றம்?? அடுத்தவனை கேள்வி கேட்க்கும் முன்பு, அந்த கேள்விக்கு பதில் நீங்க தெரிஞ்சிருக்கணும் பிரதர்??? எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு???? 🙏