இவர் போன்ற நிஜ சூப்பர் ஸ்டார் களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது நம் கடமை. SHARE செய்யவும்! ❤❤ ▶Part 2 👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pYZk8O8CtcA.html 00:00 Intro 01:21 Contributions of Dr. Santhalingam 03:05 Q1: Why Pandyas are not well-known as Cholas? 05:39 Q2: Contribution of the British to Archaeology in Tamil Nadu? 07:02 Fact: Thanjai Periya Kovil inscriptions & Eugen Hultzsch 08:14 Rapid Fire round 10:44 Q3: What were the occupations of ancient Tamils? 13:15 Fact: Raja Raja Chola's trade ambassadors to China 14:09 Casual Round: Ayirathil Oruvan movie reaction 😆 15:26 Q4: How was the coronation of the Tamil Kings held? 17:28 Q5: Pillar of Victory (Jayastamba)
கல்வெட்டு துறை மாணவியாகிய எனக்கு இந்த நேர்காணல் மேலோட்டமான பதிவு தான்... இன்னும் ஐயாவின் பல ஆய்வுரைகள் மக்களை சென்றடைய வேண்டும். மேலும் இந்தியாவின் முதல் பெண் கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் "மார்க்சிய காந்தி" அம்மா அவர்களையும் நேர்காணல் செய்தால் கல்வெட்டு துறை பற்றிய விழிப்புணர்வு தமிழ் மக்களை மட்டுமல்லாது இந்திய மக்களையும் சென்றடையும்....
உங்கள் தேடலுக்கான விலையை யாராலும் கொடுத்து விட முடியாது, இந்த காணொளியை பகிர்வதை தவிர.மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா, தொடரும் உங்கள் பயணத்திற்காய். அபிமன்யா (SL)
பாண்டிய வம்சம் தான் உலகத்தின் மிக நீண்ட அரச வம்சம் என நினைக்கிறேன்.. நெடியோன் முதல் கடைசி பாண்டியன் வரை மிக நீண்ட நெடிய வரிசை என நம்புகிறேன்.. அதே போல தமிழுக்கு சோழர்களின் பங்களிப்பை விட பாண்டியரின் பங்களிப்பு அதிகம் என்பதும் எனது தாழ்மையான கருத்து..
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு காணொளியும் பார்த்த பின்பு மனதிற்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது மெய்யாகவே சொல்கிறேன் தமிழனாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ......🙏🏼
ஒரு வரலாற்று ஆசிரியர் உண்மையாகவே இருக்க வேண்டும் பேச வேண்டும். அப்போது தான் உண்மைகள் மக்களிடம் போய் சேரும் என்பதில் அய்யா அவர்களே அத்தாட்சி நன்றிகள் அய்யா.
வரலாறு மீது விருப்பம் கொண்ட ஒரு மாணவனாக சொல்கிறேன் அய்யா அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பு அய்யா பாண்டியர் மண்டலத்தில் பிறந்தாலும். வரலாறு படி நேர்மையான பதிலால் வியந்து நின்றேன் இருந்தாலும் தமிழர்களின் வரலாறு தெற்கே இருந்து தொடங்கப்படவேண்டும் அதற்கு ஏராளமான கோவில்கள் சான்றாக உள்ளது நன்றி
நேர்காணல் மிகவும் அருமையாக இருந்தது. இதை எல்லாம் பார்க்கும்போது இந்த துறையில் உங்களுக்கு இருக்கிற ஆர்வத்தை பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா... ஒவ்வொரு பதிவும் பார்க்கும் போது அதில் உங்களுடைய உழைப்பு தெரிகிறது. இந்த முயற்சி உங்களை மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும்🎉 பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤
நீங்கள் வெளியிடும் இத்தகைய பதிவு அனைத்தும் அருமை தமிழர் வரலாறு என்பது மிகப் பெரிய புதையல் அதில் இருந்து நீங்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறீகள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@ramsamyraj9331 For 21st century readers, please write separate history books for each kingdom (Chera, Chola & Pandia) using your collected literature. That will easily reach the common man to know about our great history for about 2600 years (BC600 to AD ~1800). Reading different history books by Thiru. Sadasivapandarathar, Thiru.Neelakandsastr i, & other authors will not be easy for the common man. I appreciate your service & request you to write separate history books for each kingdom so that we can understand easily & learn about our great history.
ஹேமந்த்- Dr. சாந்தலிங்கம் பேட்டி அருமை!அருமை! சோழநாட்டில் நூற்றுக்கணக்கான கோவில்களைப் பார்த்த எனது நண்பர்கள் குழு , பாண்டியநாட்டில் ஒரு சில கோவில்களையே பார்க்க முடிந்தது. பாண்டிய மன்னர்கள் வேளாளப் பிள்ளைமார்கள் வாழும் இடங்களிலேயே / ஊர்களிலேயே கோவில்களைக் கட்டியுள்ளதாக கருத முடிந்தது. கள்ளர் இனத்தோர் கோவில் காவலர்களாக பணியமர்த்தியதையும் அறிய முடிந்தது.
ஐயா சாந்தலிங்கம் நேர் காணல் அருமை. ஐயா அவர்கள் பாண்டியர்களை விட சோழர்களை பற்றிய ஆவணங்களும், கோவில் உருவாக்கங்களும் அதிகம் என்றார். இடைகால பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் பத்தி இயக்கங்கள் தோன்றி சமண, பௌத்தத்தை அழிக்க போராடிக்கொண்டிருந்த நேரம். அப்பொழுது மதப்பிரசனையில் பாண்டியர்கள் மனநிலை ஊசலாட்டத்தில் இருந்தது. சோழர் காலம் போல் சமய பூசலற்ற காலமல்ல. ( சமணம் பௌத்தம் அழிந்த பின் சைவ-வைணவம் குலோத்துங்கன் காலத்தில் அடித்துக்கொண்டது அது ஒரு வேறு கதை). சின்னமனூர், வேள்விக்குடி செப்பேடுகள், கழுகு மலை கல்வெட்டுக்கள், நரசிங்கபுரம, அழகுமலை கல்வெட்டுக்கள், சித்தன்னவாசல் ஓவியங்கள் இன்ன பிற ஆவணங்கள் நிறைய உண்டு. ஆனால் பாண்டியர்களைப் பற்றி ஆய்வுகள் சோழர்களை விட குறைவுதான். இடைகால பாண்டியர்களில் சிறந்த மன்னன் கோச்சடை ரணதீரன், பிற்கால பாண்டியர்களில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆகிய இருவரும் மாவீரர்கள். சோழர்களை குறைத்து மதிப்பிடவில்லை அனைவரும் நமது தமிழ் மன்னர்கள் தான். ஆய்விடலில் சோழர்கள் முன்னணியில் உள்ளனர்.
மிக அழகான நேர்க்கனல். ஐயாவிடம் இருந்து பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா. இது போல் மேலும் நல்ல நெற்கனல் வேண்டும். ஐய்யா இந்த நேர்காணலை மிகவும் சுவாரஸ்யமாக எடுத்துள்ளீர்கள் ❤️
எங்களை போன்ற இலையோருக்கு உங்களை போன்ற பொறுமையும், ஈடுபாடும் தேவை அன்பரே.. மறந்ததை நினைப்பூட்டும் உங்கள் முயற்சி.. ஓங்குக.❤❤வாழ்க வளத்துடன் பல்லாண்டு.அண்ணா
Good vlog good presented on this interview with ASI lingam, I only knew about orissa balu a person who have worked for tamil origins and campuses interviews and videos conference, waiting for your next part 2.
Dr Santhalingam kku nandrigal pala. Keep doing great work Dr Santhalingam and Hemanth. Its great to hear certain truths instead of just hyping up and saying everything was great.
பதிவிற்கு நன்றி சகோ...🎉 மிக மிக அருமையான நேர்காணல். உங்கள் பயணம் தொடரட்டும். வாத்துக்கள். அய்யா பெயர் கேள்விபட்டிருக்கிறேன். அய்யாவை பார்த்ததில் மகிழ்ச்சி.
Very Good interview..... As he informed, we were experts in Metallurgy too..... Swaaami Malai & and it's Sthapathi's are best examples..... It seems, they are around 5K years old in nouldiog Panchaloga Statue's..... American Jews scientist had dignified these sthapathies.....
இது மாதிரி நேர்காணல் மூலம் இன்னும் பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.... அதற்கு எங்களுக்கு கிடைத்த அருமையான சகோதரர் நீங்கள்👉.... வாழ்த்துக்கள் தம்பி.... 🎉🎉🎉
தொல்லியல் ஆய்வாளர் டாக்டர். சாந்தலிங்கம் 00:00 அறிமுகம் 01:21 Dr. சாந்தலிங்கம் 03:05 Q1: ஏன் பாண்டியர்கள் சோழர்களைப் போல் நன்கு அறியப்படவில்லை? 05:39 Q2: தமிழ்நாட்டின் தொல்லியல் துறைக்கு ஆங்கிலேயர்களின் பங்களிப்பு? 07:02 உண்மை: தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள் & யூஜென் ஹல்ட்ஸ் 08:14 ரேபிட் ஃபயர் ரவுண்ட் 10:44 Q3: பண்டைய தமிழர்களின் தொழில்கள் என்ன? 12:33 பெரும் பத்தன் தமிழி கல்வேட்டுச் சான்றுகள் 13:15 உண்மை: சீனாவிற்கான ராஜ ராஜ சோழனின் வர்த்தக தூதர்கள் 14:09 சாதாரண சுற்று: ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட எதிர்வினை 😆 15:26 Q4: தமிழ் மன்னர்களின் முடிசூட்டு விழா எவ்வாறு நடைபெற்றது? 17:28 Q5: வெற்றித் தூண் (ஜெயஸ்தம்பம்)
Thanks for finding such Person.don't worry sir I will make all of our researchers and the great mother tongue which the oldest language (Tamizh) in the worldwide to be famous and familier.we all combined to so the work.🎉
1400 AD aprm Tamilnadu history pathi video podunga bro 1200AD ku munnadi Ella RU-vid channel um potutaanga 1300 to 1900 AD varakum thaan history yaarum post poda maatraanga athuku video podunga bro
மதுரைக்கடவுள் சிவபெருமானாகிய சோமசுந்தரக்கடவுள் தங்கள் பாட்டனானதால் "சுந்தர" என்ற பெயரைச் சேர்த்து வைத்தனர். செந்தூர் முருகன் வழி வந்தவர்கள் "செழியன்"எனக் கொண்டனர்.களப்பிரர்ஆட்சியிலும் மதுரை சுல்தான்கள் ஆட்சியிலும் நாயக்கர் ஆட்சியிலும் பாண்டிய சேர வரலாறுகள் வழித்தெறியப்பட்டன.சிங்கப்பூர் "பல்வான் பீச்" சில் முதன் முதலாக சோழர்கள் வந்திறங்கிய தீவில் புதைந்த மண்டபம் போல் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருவதை சமீபத்தில் சென்ற போது பார்த்தேன்!