பெண்கள் சொத்து கேட்கும் போது பெண்களுக்கு கொடுத்த நகை,சீர்வரிசை அனைத்தும் ஆண் பிள்ளைகளுக்கும் தர வேண்டும்.பெற்றோர்களை பெண்பிள்ளைகளும் பார்த்துக்கொள்ள வேண்டும்.உரிமை பேசும் இடத்தில் கடமையும் உள்ளது என்பதை நியாபகத்தில் கொள்ள வேண்டும்.
Then wives should also share the expenses done by the husband for the family..This doesn't include his parents expenses .only his family expenses@@komaleeswarir3008
எங்க அம்மா அப்பா எந்த சொத்தும் சேர்த்து வைக்கல நான் வேலைக்கு போய் என் தம்பிய படிக்க வச்சேன் தம்பி வேலைக்கு போய் எனக்கு திருமணம் பண்ணி ரெண்டு பிரசவம் 10 லட்சம் செலவு பண்ணி இருப்பான் இப்பவும் நான் கேட்டுக்கமலே எல்லாம் செய்வான் என் தம்பி எனக்கு வரம் என் அப்பா அம்மா வும் எனக்காக எல்லாம் செய்றாங்க என் குடும்பமே எனக்கு மிக பெரிய சொத்து என் சகோதரன் பட்ட கஷ்டத்திற்கு நல்ல மனைவி, நல்ல வேலை கிடைத்து ஒரு குட்டி தேவதையும் பிறந்து விட்டால் என் தம்பி மகளை என் தம்பிக்கு எந்த கஷ்டம் தராமல் என் மருமகள் ளாக என் வீட்டுக்கு அழைத்து செல்ல ஆசை காலமும் கடவுளும் அருள வேண்டும்
சகோதரி. கூட பிறந்த சகோதரன நம்மால் முடிந்த வற்றை செய்வதில் மகிழ்ச்சி ஆனால் நீ என்ன செய்வாயா ஏது செய்வாயோ எனக்கு தெரியாது எனக்கு செய்யவேண்டிய முறையை செய்தே ஆக வேண்டும் என கட்டாயப் படுத்தி கேட்கும் போது பொருளாதார சிக்கலில் உள்ள சூழ்நிலையில் இப்படி உறவு தேவையா என தோன்றுகிறது,
பெண் மற்றும் ஆண் இருவரும் சமம் என்றால் சீர்வரிசை நகைகள் மற்றும் சொத்து பத்திரம் இவை இரண்டையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளட்டும்,அதே போல் கடன்களையும், பெற்றோர்களையும் பெண் மற்றும் ஆண் இருவரும் பார்க்கட்டும் 😊😊 உரிமையாக கேட்கும் பெண் மற்றும் ஆண் இருவரும் கடமைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
என் சகோதரிக்கு திருமணமாகி 67 ஆண்டுகள் ஆகிறது பேரன் பேத்திகள் உள்ளனர் பேத்திக்கு திருமணமாகி அவருக்கும் குழந்தை உள்ளது இப்படியிருக்க என் அப்பா என் அக்காவுக்கு வீடும்கட்டி கொடுத்திருக் கிறார் அவருக்கு நிறைய செலவுகளும் செய்திருக்கிறார் நானும் இரண்டரை கோடி மதிப்புள்ள சொத்தை ஒரு கோடி ரூபாய் தள்ளி யும் கொடுத்துள்ளேன் இவ்வளவு செய்தும் என் சகோதரியின் பேரரசை என் சொத்தை அபகரிக்க பார்க்கிறார்கள்.சகோதரியை நினைத்தால் மிக வேதனையாக. உள்ளது. இந்த படுபாவி கருணாநிதி கொண்டு வந்த சட்டத்தால் பல குடும்பங்கள் வேதனை படுகின்றன
Ennayaa... Oru ponnu urimai keta avlo eriyudhaa.... Endha samudhayathula irukinga... Nobody is going to in-laws home nowadays... Aangalum veeta vitu vandhu thani kuduthanam tha poranga.... Enga amma irukangale amma.. avanga thaan avanga amma va um pathutanga.. Enga appa ooda amma va um pathutanga.... Including hospital bill.. Naa irukene naa.. Naa tha enga appa ooda debts lam pay panitu iruken... Naa padika kooda educational loan thaan....
@@beawarehelp6029யம்மா. நிஜமா எரியுது. என்னோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் வீட்ல ஒருத்தனுக்கு 70 இலட்சம் கடன் ஒருத்தனுக்கு 1 கோடி கடன். எந்த வீட்லயும் பொண்ணுங்க கடனை சமமாக பங்கு போட்டுக்க வரவில்லை. ஆனால் இன்னொரு நண்பன் வீட்டில் சொத்தை பங்குபொட மட்டும் சண்டை. பெண்கள் பலர் சுயநலவாதிகள்.
சொத்தை கேட்டு புடுங்கற இடத்தில் அண்ணன், தம்பி பாவம். சொத்தை கொடுக்காமல் ஏமாற்றும் இடத்தில் பெண்கள் பாவம். உண்மையான பாசத்துடன் இருப்போம், ஏமாளியாக அல்ல.
ஆணும் பெண்ணும் சமம் அப்படின்னு ஒரு சகோதரி சொல்றாங்க அப்படினா 50 பவுன் நகை உங்களுக்கு போட்டா அந்த வீட்ல உள்ள உங்களோட அண்ணன் தம்பிக்கும் கொடுக்கணும் இல்லையா
அப்பா,அம்மா உடல் நிலை சரி இல்லை என்றால் அண்ணன் தம்பி அவர்கள் மனைவிகள் மட்டுமே பார்க்க வேண்டும்.இவர்கள் வருவார்கள் அது செய்யவில்லை,இது செய்ய வேலை என்று குறை கூற வருவார்கள்,அவர்கள் செய்ய மாட்டார்கள்.
சொத்தை, அம்மா,அப்பாவின் காலத்திற்கு பின்னர் தான் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மா,அப்பாவை கடைசிவரை நன்றாக பார்த்து கொள்ளுபவர்களுக்குத் தான் சொத்து.
அவரவர்களுக்கு சேர வேண்டியதை சரியாக கொடுத்து விட வேண்டும் நமக்கு இருக்கும் ஆசைதான் அடுத்தவர்களுக்கும் இருக்கும். யாரையும் ஏமாற்றி சொத்து சேர்க்காதீர்கள்.
இதே ஒரு தகப்பன் வட்டிக்கு கடன் வாங்கி கல்யாணம் செய்து வைத்து கடன் தொகை மூன்று மடங்காக இருக்கும் போது சொத்தில் பங்கு கேட்க்கும் பெண் கடனை அடைப்பதில் பொருப்பு ஏற்பார்களா கடன் சுமையை மட்டும் ஆண் ஏற்க்க வேண்டும் சுகமான வாழ்க்கை மட்டும் பெண்ணிற்க்கா
விட்டு கொடுப்பது தம்பிக்கு தான் என்பதில் மகிழ்ச்சி. ஆனால் அவர்கள் திருமணத்திற்கு முன் பெண் படித்து விட்டால் அதற்குமேல் படித்த மாப்பிள ளை பார்த்து சீர்வரிசை கடினம் என்று கல்வியை தொடர விடாமல் முட்டுகட்டை போடுவதில் பெற்றோர்க்கும் சகோதரனின் பங்கும் அளப்பரியது இதுவே: அவர்கள் திருமணத்தின் போது வேலைக கு போகும் பெண் தான வேண்டும்என்றும் அப்போதுதான் தன்னுடைய பொருளாதாரம் உயரும் என்று எண்ணுகிறார்கள். வீட்டில் பாதுகாப்பு, வேலை பிள்ளை வளர்ப்பு போன்றவற்றுக்காக பெற்றோர்களை முற்றிலும் பயன்படுத்துகிறாரகள். அந்த இடத்தில் சகோதரியின் நிலை ?
அம்மா, அப்பாகிட்ட சொத்து வாங்குவது கடமை என்றால் , அம்மா அப்பாக்கு மட்டும் செய்வது கடமை இல்லையா? ஒவ்வொரு பிளைகளும் போற்றோரை அவமானபடுத்தாமல் அவர்களுக்கு வேண்டிய கடமைகளைச் செய்.
எனக்கு புரியல சீர் செஞ்சே ஆகணும்னு ஏதாச்சு சட்டம் இருக்கா. சீர் வாங்கிட்டு அதுக்கப்புறம் சொத்தையும் கேட்குறாங்க . எனக்கு தெரிஞ்சு நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க வேணுங்கற அளவுக்கு சீரும் வாங்கிப்பாங்க. அப்பறம் சொத்துல பங்கும் புடுங்கிக்குறாங்க. அந்த பையனோட கஷ்டத்தை புரிஞ்சுக்க மாட்டிங்குறாங்க. நல்லா வசதியா இருக்கிறவங்களுக்கு பரவாயில்லை ஆனா மிடில் கிளாஸ் ஆண்களுக்கு😢. கடன் வாங்கி சீர் செஞ்சு அத கட்ட எவ்ளோ கஷ்டப் படுவாங்க. நான் எல்லாம் சொத்தே கேட்க மாட்டேன் இப்பவே என்னோட தம்பிக்கு கையெழுத்து போட்டு கொடுத்துடுவேன் எனக்கு எதுவும் வேண்டாம்னு.
Sagothariii. Ne enkuu sagothriyaa vanthu erkaa vendum en thangaiku thaviyathai seithu koduthan kadisillll sothu than periyathu en uravu vendam endru pesi vetta pen enku en vailkaii enn valgirom enna thondriyathuuu
சீரும் வாங்கிகொண்டு சொத்தும் வாங்கிகொண்டு அப்பா அம்மா எதுவம் செய்யவில்லை என்று இதயமே இல்லாமல் மாற்றுத்திறனாளி தம்பியிடம் சொத்துக்கும் சண்டை போடும் பெண்கள் உள்ள நாடுதான் நம்ம நாடு.
@@saravananjk672 விடுங்க சகோ. பணத்திடம் பாசம் தோற்று விடுகிறது. எல்லாரும் இங்கு சுயநலவாதிகள் தான். அவங்கள எல்லாம் கண்டுக்காதீங்க உங்க வாழ்க்கைல கவனம் செலுத்துங்கள் நீங்கள் அதை விட அதிகம் சொத்து சேர்ப்பீர்கள். அப்பறம் அவங்கள பாத்துக்கலாம்
சரியா சொன்னீங்க. இன்னும் சொல்லப் போனா என் அப்பா வீட்ல வேலை பார்க்கற அம்மாவுக்கு( அப்பாவும் தம்பியும் ஒண்ணா பிஸினஸ் பண்ணாலும் தனித்தனியாதான் இருக்காங்க, அம்மா தவறிட்டாங்க) ஒரு சேலை வாங்கிக் கொடுக்க விடமாட்டான். நீ பாட்டுக்கு வந்து சேலை வாங்கித் தந்துட்டு போயிடுவ, அந்தம்மா அப்புறம் அதையே எங்ககிட்டயும் எதிர்பார்க்கும்னுவான். இது ஒரு சாம்பிள்தான். அவனைப் போல ஒரு கேவலமான பிறவிய எங்கயும் பார்க்க முடியாது. நிஜமாவே சீர் செய்யற சகோதரங்களை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியம்தான் வருது.
என்கூட பிறந்ததும் இதே மாதிரித்தான். இத்தனைக்கும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டா. அம்மாவை தாஜா பண்ணி நிலத்தை எழுதி வாங்கிகிட்டா. அம்மா இறந்ததுக்கு பின்னாடி, இப்போ எனக்கும் தம்பிக்கும் பொதுவா இருக்கிற ஒரே ஒரு வீட்டிலையும் பங்கு வேணும்னு எங்க இரண்டு பேர்கூடவும் முட்டிகிட்டு நிக்கிறா. 😣
Atha bro akka thangachi pasam la summa bro namma abalukalam kannukama namma life mattum valanum selfish aha illa avaluka nakka pichakarana mathituvalunga....😂
❤❤ நூற்றுக்கு தொண்ணூறு சதவீத பெண்கள் பிறந்த வீட்டிலேயும் அதிகாரத்தை பிடிக்க சொத்தை பிடிக்கணும் அப்புறம் புகுந்த வீட்டிலும் அதிகாரத்தை செலுத்தினால் சொத்தை பிடிக்கணும் சுருக்கமாகச் சொன்னால் இரண்டு இடத்திலும் முழு இராட்சியம் பண்ண வேண்டும் இதுதான் பெண்களின் பேராசை❤❤
ஆண் பிள்ளைக இருந்தும்....சொத்திலும் பங்கு வாங்கிட்டு பெற்றோரை கடைசி காலத்தில் பார்க்கனுமே பெண் பிள்ளைகள்... அப்போ மட்டும் என் வீட்டுக்காரரை கேட்டு சொல்றேன்னு சொல்றது...
டேய் பாய்ஸ் எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க டா பொண்ணுங்க யாருக்கும் எவளுக்கும் எதுவும் பண்ணாதீங்க உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.. அவன் அவன் பொண்டாட்டிக்கு பன்னா போதும்...
உங்களை படிக்க வச்சதோட என் கடமை முடிவுக்கு வந்தாச்சி... மேல் கொண்டு செய்யணும்னு என்பது என் விருப்பம். என் சொத்து முதலில் என்னை காப்பதணும். நீங்க உழைத்து சம்பதிங்க.... தனக்கு மிஞ்சினது தானமும் தர்மமும்.
❤❤ பெரும்பாலான பெண்கள் தான் பொறந்த வீட்டில் தான் அண்ணன் தம்பி கிட்ட சுத்திக்கிட்டு சண்டை போடுவாங்க ஆனா கணவனோட தான் அக்கா தங்கச்சி சொத்து கொடுக்க கூடாதுன்னு கரெக்ட்டா இருப்பாங்க இதுதான் பெண் ஆசை❤❤
நானும் ஒரு தகப்பன் தான் என் மனதில் மகள் வேறு மகன் வேறு என்ற எண்ணமே த் தோன்றாது வீடைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இரண்டு பேரும் பங்கிட்டுக் கொள்ள சொல்லிட்டேன்.
வீடோ, நகையோ விலை ஏறும் பொழுது பிரச்சனை வரும், நகைகள் ஈடு செய்ய நகைகளும், தான் பிறந்த வீட்டில் பிள்ளைகள் அனைவருக்கும் சமமான பங்கு உண்டு, பெற்றோர் கடன்பட்டிருந்தால் பிள்ளைகள் சமமாக கட்ட வேண்டும், முடிந்த அளவிற்கு மருத்துவ காப்பீடு செய்யுங்கள்,சுமை குறையும்
My மாமியார்: மறுமகளுக்கு 10 பைசா போக கூடாது. எல்லா சொத்தும் நம்ம பொண்ணுங்களுக்குதான். My நாத்தனார்கள்: புருஷன் கூட பிறந்தவர்களுக்கு 10 பைசா குடுக்க கூடாது. அண்ணன் கிட்ட மட்டும் பெண்களுக்கு சம உரிமை என்று பேசனும்.. My புருசன்: உன்னோட சம்பளத்தில 10 பைசா உங்க அம்மாக்கு குடுக்க கூடாது. Me:சொத்தும் வேண்டாம் உங்க அம்மாவும் வேண்டாம்.. 100% share வச்சுக்கோங்க உங்க அம்மாவயும் பொண்ணுங்களே விட்ல வச்சுக்கோங்க. ஆள நிம்மதியா விடுங்க. என் பிள்ளையும் என் ஆரோக்கியமும் தான் என் சொத்து. சின்ன புத்தி மனிதர்கள்.. என் அம்மாவ என் அண்ணன் தான் பாத்துக்கனும்னா என் அம்மாகிட்ட நான் சொத்து வாங்க மாட்டேன்.. வச்சனா செக்மேட். 😎
அக்கா 3 நான் கடைசி தம்பி அப்பா இல்லை அப்பா சொத்து எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் 12 வருடம் சென்ற பிறகு தம்பிக்கே கொடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் அவர்களே பஞ்சாயத்து வைத்து எங்களுக்கு சொத்து வேண்டாம் தம்பிக்கே கொடுங்கள் என்று கூறிவிட்டனர் 2 வருடம் கழித்து நான் அந்த சொத்தை பாதி விற்பனை செய்து கல்யாணம் செய்ய வீடு கட்ட எல்லாம் பயன்படுத்தலாம் என்று விற்பனை செய்த பிறகு பணத்தை சண்டை போட்டு வீடு வாங்க விடவில்லை கல்யாணமும் நின்றுவிட்டது வேண்டாம் என்ற சொத்தை கொடுத்து திரும்பவும் பிடுங்கிக் கொண்டனர் இதைத்தான் முதலிலேயே சொன்னேன் எனக்கு சொத்து வேண்டாம் என்று
இரண்டு பக்கமும் சுயநல மென்ட்டல்களா இருக்குங்க நான் பெண் தான் எனக்கும் ஆண் பெண் குழந்தைங்க இருக்காங்க......பிறந்த வீட்டுக்கு உதவியா இருந்திருக்கேன் உபத்திரம் தந்தது இல்லை.....எங்க அம்மா அப்பா இல்லனா நான் இங்க இல்லை ❤❤❤❤❤❤❤
இங்கு பெண்கள் கணவனின் பெற்றோரை கவனிப்பதால் சொத்து சம பங்கு தான் சொத்து சீர் வரிசை இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும் ஏனெனில் வரும் பெண்ணிடமிருந்து நகை சீர் வருகிறது
இங்கு கூறுகின்றார் போன்று என் மனைவிக்கு திருமணத்தில் போட்ட நகையோடு முடிஞ்சது. என் மகள் வயதிற்கு வநதபோது கூட எந்த சீரும் மாமனாரும் வைக்கவில்லை . மச்சான்களும் வைக்கவில்லை. நானும் எதிர்பார்க்கவும் இல்லை. என் போன்று பலர் இருக்கின்றனர்.
அடிப்படையே வாதமே தவறு.. 1.தத்தா பாட்டி சொத்து கட்டாயம் பெண்களுக்கு பிரித்து கொடுத்தே ஆக வேண்டும்.. 2.பெற்றோர் சம்பாதித்த சொத்தை எந்த நார மூதேவிகளுக்கும் பிரித்து கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லவே இல்லை.. Dot 🎉🎉🎉
Ivangala lam patha romba kastama erukku, kuda poranthavanuku kodukurathukku ivalau panuthunga, en marge la 80 paun potanga, enaku oru mari akitu amma thali saram thavira meethi lam enaku nu koduka pathanga, en thambi ku vara ponnu ethum kondu vara matanga nu terium, bz love marge, so en thambi sampathisu epa avaluku pota nu enaku feel aki 40 enaku, 10 ammappa, 30 thambi ku koduthuten, athu poga enta eruntha kutty chain lam veetla koduthutu vanthen, nalaiku en pasangalum, en thambi pasangaalukum antha chain ah podukongo nu koduthuten, enaaku en thambi tan mukiyam thavira soththu illaa, en mamiyar veeta pathi lam na ninaikala bz athula oru savaran kuda nano en thambiyo vankala enga ammappa potathu so na koduthuten, en thambi nala eruntha nanum nala erupen 😍, ivaanga kuda poranthavangalam romba pavam😭
நல்லதோ கெட்டதோ பெற்வர்களே தன் மக்களுகு மனசாட்சியுடன் பிரித்து கொடுக்க வேண்டும், தமக்குப்பின் பஞ்சாயத்துயேதும் அவசியமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது தான் நிம்மதி. குல தெய்வத்திற்கும் ஒரு சிறு பங்காவது வேண்டும்
The same logic also applies 2 quotas also. How many rich ppl use quotas 2 study in govt colleges when they have money 2 pay fees in pvt medical college itself?
Yennaku 32 vayasula than marriage panitiken.. family financial nanthan work Pani pathukiten athuna than late marriage panikiten .. yenna mathari neriya women's erukanga
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பெற்றோர் சொத்து எல்லாருக்கும் சரிசமமாக பங்கிடப்படவேண்டும். சீர்வரிசையும் கணக்கில் எடுக்கப்படவேண்டும். பெண்கள் சீரவரிசை வேண்டாம் என்று கூறிவிட்டு சொத்தில் சம பங்கு வாங்கிடவேண்டும். என் சொந்த அனுபவத்தில் சில லட்சங்கள் சீர்வரிசை செய்து பலகோடிகளை அமுக்கிவிட்டனர்.
சொத்து பணம் நகை தேவையில்லை என்னைக்காவது ஒரு நாள் என் பிறந்த வீட்டின் நபர்கள் என்னை பார்த்தால் நல்லாயிருக்கியா என்று கேட்டாலே போதும் அது ஏழு ஜென்மத்திற்க்கும் மகிழ்ச்சி தரும்