#ibakthipasi #kannappan #thirupugazh #vallimalai #vallimalai swami திருப்புகழ் வள்ளிமலை சுவாமி வாழ்க்கை வரலாறு, ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம். History of Thiruppugazh Valli Malai Satchidananda Swami
ஐயா...! தங்களது சொற்பொழிவு கேட்டு நானும் நேற்று முதல்முறையாக வள்ளிமலை சென்று முருகனை மனங்குளிர தரிசித்தேன்... சுவாமிகள் சமாதி கோவிலில் அமர்ந்து வேல் மாறல் மந்திர பாராயணம் செய்து வந்தேன்... தங்களின் பாக்கியம் ஐயா... உங்களை சந்திக்க ஆவலாக உள்ளது... முருகன் என்றைக்கு கருணை புரிவாரோ...🙏
ஐயா- தங்களது சொற்பொழிவு அப்படியே முருகனை நம் கண் முன்னே பார்ப்பது போல் இருக்கிறது. தங்களது வார்த்தைகளும், அதை சேர்த்து அமைகின்ற வரிகளும் கேட்கும் பொழுது கண்களில் பக்தியும்; ஆனந்தமும் நிறை கண்ணீர் வருகின்றது. தங்களது இந்த பக்தி சொற்பொழிவு சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என திருப்புகழ் முருகனை நான் மனமுருகி வேண்டுகிறேன்.
முருகா முருகா என்னையும் வாழ்க்கையில் ஒரு முறையாவது வள்ளிமலை முருகனை தரிசிக்க அருள்புரிய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் 🙏🙏🙏 முருகனின் திருவிளையாடல்களை கேட்க கேட்க கண்ணீர் மல்க உயிர் உருகச் செய்கிறான் எம்பெருமான் முருகன் ❤️❤️❤️ என் வாழ்விலும் முருகன் நிறைய மாற்றத்தை ஏற்படுத்திய இருக்கிறான் 😍😍😍 நான் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருப்பது அவனின் கருணையினால் தான் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வேன் எல்லாம் முருகனின் அருள் 🙏🙏🙏🙏
வள்ளிமலைக்கு ஒரு முறையாவது உங்களுடன் சென்று வர அந்த வள்ளியாண்டவன் துணைச் செய்ய வேண்டும். சுவாமிகளின் வரலாற்றைக் கேட்கும் போது அந்த எண்ணம் இன்னும் மேலோங்குகிறது. ஐயாவின் உரையில் பல தகவல்கள். நாங்களும் பயன்பெற பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏
ஐயா, நாங்களும் வள்ளிமலை கோவிலுக்கு சென்று வந்துள்ளோம் எனினும் ஐயா அவர்கள் கூறியபடி வரலாற்றை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. வள்ளிமலை முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙏
ஐயா திருபுகழை ப்பற்றி ஏதும் அறியேன் அடியேனுக்கு அனைத்தும் உணர்த்தினார்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா உண்மையில் திருப்புகள் ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது அரோகரா அரோகரா சிவபெருமானே
ஐயா முருகன் அருளால் மிக பாக்கியம் பெற்றோம். தங்களுக்கும் இந்த பதிவை வெளியிட்ட ஊடகதிற்கும் கோடி நமஸ்காரம். அவனை உணர செய்துள்ளீர்கள் ❤❤❤❤ சரவணன் விருத்தாச்சலம்
அனுபவங்களுடன் கூடிய தங்களின் பேச்சு மனதில் நிலைத்து நின்று தக்க சமயத்தில் உதவி புரியக் கூடியதாக இருக்கிறது ஐயா.... நீண்ட ஆயுளுடன் ...கடவுளின் நிறைவான திருவருள் பெற்று ....தொடர்ந்தும் தங்கள் சொற்பொழிவுகள் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் நீண்ட காலம் கிடைக்க வேண்டும் என்று ...நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விரும்பி ....இறையருளை நானும் கேட்டு நிற்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா 💛💛💛💛💛ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.....
I have subscribed Pranav channel because of you when you explained about kanakapatti siddhar ayya , now this channel . 1hr 35 mins video sounded just 13 mins. What an enthusiasm and energy.
ஐயா வணக்கம் வள்ளிமலை சுவாமிகள் குறித்து தெரியாதபல தகவல்களை தங்கள் மூலம் அறிந்து கொண்டேன் . திருப்புகழ் "நெருப்பை எரிக்கும் நெருப்பு" என்ற அழகான விளக்கத்தை அறிந்து கொண்டேன். எந்த ஒரு வேலை செய்யும் போதும் தேவாரம், திருவாசகம் ,அபிராமி அந்தாதி,கந்தர் அலங்காரம் என்று மனதில் பாடிக்கொண்டே தான் நாங்கள் செய்வது வழக்கம். இதை தலைமையாசிரியராக பணிபுரிந்த எங்கள் அம்மா பஞ்சவர்ணம் எங்களுக்கு இளவயதிலேயே புரிய வைத்தார்கள் அதை மீண்டும் தங்கள் மூலமாக நினைவு கூர்கின்றேன் அதனை இன்று வரை கடைபிடித்தும் வருகின்றேன். மிக்க நன்றி ஐயா.
அய்யாவுக்கு மிக்க நன்றி. மிக அருமையாக வள்ளி மலை திருப்புகழ் சாமிகள் வரலாறு உரைத்தீர்கள் . தாங்கள் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல முருகனை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றுவந்தேன் திரு சச்சிதானந்தம் சித்தர் அந்த குகைக்குள் செல்லும்போது தவழ்ந்து செல்ல வேண்டும் உள்ளே சென்றவுடன் உடலில் ஒரு அதிர்வுகள் மறக்க முடியாத வள்ளிமலை
இறைவன் சிந்தனை வந்து , அவன் அருள் கிடைக்கவேண்டும் என்றால் இறைவன் இயல்பை , புகழை, துதி பாடும் ஐயா பேச்சை கேட்ட வேண்டும் . அப்படி கேட்டாலே ,நாம் நம்மை அறியாமல் ,இறை பக்தி எற்பட்டு சிறப்படைவோம் .
ஐயா எங்களுக்கு தெரியாத ஆன்மீக சொற்பொழிவு ஆக்கியதற்கு மிக்க நன்றி உங்கள் பாதங்களை தொட்டு பணிகிறேன் ஐயா வணக்கம் வணக்கம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤❤
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அருளிச்செய்த வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருடைய சரித்திரத்தை கேட்கும் பாக்கியத்தை முருகப்பெருமான் அளித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள். அருமை ஐயா உங்களுடைய சொற்பொழிவு. இன்றோடு 39 நாட்கள் வேல்மாறல் மகா மந்திரத்தை பாராயணம் செய்துள்ளேன். முருகன் எனக்களித்த ஆசிர்வாதமாக எடுத்துக்கொண்டு இந்த channel ஐ subscribe செய்கிறேன். வேலும் மயிலும் சேவலும் துணை. திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன் எனது உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே.
ரொம்ப அருமை அய்யா, ரொம்ப சின்ன வயசுல படிச்ச வள்ளிமலை சுவாமி கள் பற்றின புத்தகம். இப்போ கிடைக்கவில்லை. எங்கே கிடைக்கும் எப்போது கிடைக்கும் அந்த முருகனுக்கு தான் வெளிச்சம்
அருமை அருமை மதுரைசித்தர் திரு சொசொ ஐயா உங்கள் தேன்தமிழ் பேச்சு இந்த பொக்கிஷமான தகவல்கள் மிக மிக அற்புதம்🙏🙏🙏அதிஅற்புதமான திருப்புகழை பரப்பிய பகவான் வள்ளிமலை சுவாமிகளின் வரலாறு திருப்புகழ் பசியை தூண்டுகிறது, எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு🙏ஐ பசி RU-vid channel சகோதரர் ராஜ்மோகனுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் 👏தமிழ் வாழ்க🙏வேலும் மயிலும் துணை 🙏
Tears of joy as I listen to your talks Ayya. So many incidents, legend,history, your experiences, fills our life with so much positivity and divinity. We are blessed to hear your talks