ஐயனே பொன் சுந்தரலிங்கனாரே.. உங்களைப் பணிந்து வணங்கி வேண்டுகிறேன்.. இன்னும் பல தேவார திருவாசக திருமுறைகளை பாடி இந்த தமிழுக்கு.. சைவத்துக்கு.. பிறவி பணி செய்யுங்கள்
கொண்டாடப்படவேண்டிய ஈழத்து இசை மேதை. கல்லையும் உருக்கும் குரலில், திருவாசகத்தின் பொருள் விளங்கப்பாடுகையில் மெய் சிலிர்க்கிறது. அவர் வாழுங்காலத்தில் அவர் புகழை பன்னாடும் சென்றடைய இவ் இசை இழையை பகிர்ந்திடுவீர். “என் இனமே என் சனமே அவரை உனக்குத் தெரிகிறதா?…
திருவாசகம் என்னும் தேன், என்று சொல்லுவார்கள், உண்மைதான். ஆனால் உங்களுடைய இனிமையான குரலைக் கெட்டு என் இதயம் மிகவும் உருகுவதை உணர்ந்தேன். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாத்தவர்க்கும் இறைவா போற்றி. 🙏🙏🙏🙏🙏
நான் தினமும் கேட்கின்றேன். இப்பாடல் கேட்கும் போது நம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரர் பெருமானை தரிசித்த உணர்வு எனக்குள் ஏற்படுகிறது. நன்றி ஐயா. சிவ சிவ. 🙏🙏🙏
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.... எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நாம்...இப்பாடலை கேட்க...என்ன தவம் செய்தேனோ... உன்னை ஒரு நொடி கூட மறவாமல் இருக்க வரம் கொடு இறைவா....நம சிவய வாழ்க... நாதன் தாள் வாழ்க...
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே 🙏🙏🙏
இசை தமிழால் தேன் அமுதம் பருகி எனக்குள்ளே நீயும் மாகி உனக்குள் நானும் மாகி காலத்தின் சுழற்சி குள்ளே நீயே அரசன் வியக்கும் அற்புத ஈசனை பல்லாண்டு பல்லாண்டு போற்றி போற்றி ஓம்
சிவ! சிவ! நால்வரின் குரலை கேட்டதில்லை தங்கள் இனிய குரல் மூலம் அவர்களின் குரலை கேட்பது போல் உள்ளது ஐயா! பெரும் பாக்கியம் ஐயா தங்கள் குரலை கேட்பது! சிவ! சிவ!
ஐயா . வணங்குகிறோம் நால்வர் நற்றமிழ் மன்றம் காஞ்சிபுரம் ஊரும் உயிரும் உருகுதே! காஞ்சிக்கு எப்போ வருவீர்கள்? தொடர்புக்கு செல்: 9789251194 காஞ்சிபுரம் உங்கள் செல் அனுப்ப வேண்டுகிறேன் நெகிழும் தமிழன் சிவ வெற்றிச்செல்வன் கு.இராமலிங்கம் செயலர்-நால்வர் நற்றமிழ் மன்றம் . காஞ்சிபுரம் திருச்சிற்றம்பலம் திருத்தம்: ஊனும் உயிரும் உருகுதே உங்கள் செல் நெம்பர் அனுப்ப வேண்டும்
ஈழத்தின் புகழ்பூத்த சங்கீத கலா வித்தகரும் இன்னிசை வேந்தனுமாகிய பொன் சுந்தரலிங்கம் ஐயா. ஆரம்ப காலத்தில் புகழ்பெற்ற தமிழீழ விடுதலை கானங்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய “என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா?” பாடல் பல இளைஞர்களை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்த்ததெனில் மிகையாகாது! ஐயா இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ் இசைத்துறைக்கு தொண்டாற்றவேண்டும்.
Ayya vanakkam many many crore times because of your talency in singing sivapuranam by Ragam mohanam is very very nicely arraiving the Lord Siva's foot Raga alabanai and pirgas are taking me to a wonderful new Loga Thank GOD For giving such a voice with LAYAM Vanakkam By T Kanthimathinathan Pharmacist (vellore) at Palayamkottai Tirunelveli Daily I am hearig This twice
No words to express anandham to hear this. Thiru Pon Sundarlingam deserve s all Hearing with closed eyes would heal all illnesses and GOD with you We lost pure Tamil like Thiruvasaham to hear in our Siva temples and Azhvar Divapravandam in Vishnu temples in Tamilnadu more than sixty years It is shame that we do not have good tamil teachers and scholars We have been losing greatness of Tamil language
Melting ,devotional,musical,sweet sweet rendering in calming voice .There cannot be any other song far reaching than this soul filling devotion.God is also listening this devotional song singer and so where his blessings are there .Omni present .Omni potent.
Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya Om Namashivaya
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை யார்கழற்குஎன் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே எல்லாவற்றையும் உடையவனே! உனது, மணம் நிறைந்த திருவடியைப் பெறுதற்கு என் உடல் புளகித்து, நடுநடுங்கி கைகளைத் தலைமேல் வைத்து, கண்களில் நீர் வடிந்து, மனம் புழுங்கி, பொய்நீங்கி, உன்னைக் குறித்து வணங்கித் துதிக்கின்ற ஒழுக்கத்தை நான் தளர விட மாட்டேன். ஆதலால் எனது நிலைமையை, நீ நோக்கி உன் அடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்வாயாக! நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும். வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட் டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே. நெஞ்சமே! வாழ்வது போல் நினைத்து வாழாது இருக்கின்றாயே! நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழி படுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன்? வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க் குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம் கண்ணிணையு மரமாம்தீ வினையி னேற்கே. கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே யாம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம். சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன் கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர வந்தனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனை செந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே. கடவுளே! இருமை வகை தெரியாத என் மனத்தை நின்திருவுருக்காக்கி, கண்களை நின் திருவடிகளுக்கு ஆக்கி, வழி பாட்டையும் அம்மலர் அடிகளுக்கே ஆக்கி, வாக்கினை உன் திரு வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் பயனுற என்னை அடிமை கொண்ட உனது பெருங் குணத்தை என்ன வென்று புகழ்வேன் ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே. நெஞ்சே! இறைவனது திருவடிக்கு அன்பு செய்கின்றிலை; அவ்வன்பின் மிகுதியால் கூத்தாடுதல் செய்கிலை; எலும்பு உருகும் வண்ணம் பாடுகின்றிலை; இவை எல்லாம் செய்ய வில்லையே என்று பதைப்பதும் செய்கிலை; திருவடி மலர்களைச் சூடவும் முயன்றிலை, சூட்டவும் முயன்றிலை; இறை புகழ் தேடலும் இல்லை; தேடித் தேடி அலையவும் இல்லை; நீ இப்படியான பின்பு, நான் செய்யும் வகை ஒன்றும் அறியவில்லை. யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே . இறைவனே! நானும் என் மனம் முதலியனவும் பொய்ம்மையுடையவர்கள் ஆனோம். ஆனால் அழுதால் உன்னைப் பெறலாமோ? தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! நான் உன்னைப் பெறும் வழியை எனக்கு அறிவித்தல் வேண்டும்.
Iyya keep singing on lord shiva and spread the value of thiruvasagam to this world with your mesmerising voice and devotion. May god bless you with long life and good health .. Your voice is of course gods creation obviously proving His greatness 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அய்யா, நெக்குருகி நிற்கின்றேன். இறையருள் தங்கள் மீது பூரணமாய் பொங்கிப் பொலிவதை நன்கு உணர்கின்றேன். பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்து இத்திருப்பணியை செய்து அருளுங்கள் .
Ohm Namashivaya !! What a golden voice and on hearing this I really feel like that I am standing in front of Lord Shiva at UttarakosaMangai Such a beautiful rendition Om NamaShivaya Srilanka is blessed to have such a devotee of Lord Shiva and Entire Tamil Bakthi world is proud of your Golden voice and your rendition is touching our hearts and sould Ohm Namashivaya Ohm Namashivaya
வணக்கம் 🙏, you are absolutely right. To tell you frankly i also felt the same. Closing my eyes, i could feel HIS presence. With such a mesmerizing voice, you are transported to another dimension where you can feel Siva perumaan everywhere. Coincidentally my guru happens to be a SriLankan born person, being in Mauritius since his childhood, he is now 86. Through him i have learnt about saivam, saiva samayam. I perform all my poosais (prayers) in tamil molhi. I made him listen to this recording and immediately he told me that this person is from Sri Lanka. நன்றி, வணக்கம். 🙏🙏🙏🙏🙏
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே, கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தன் கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே”