வணக்கம் ஐயா, வான் கலந்த திருவாசகத்தை உங்கள் உணர்வு கலந்து தந்ததில் நானும் உங்களில் கரைந்துதான் போனேனய்யா ஈசனின் கருணையினால் சரியான இடத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறேன்(சேர்க்கப் பட்டுருக்கிறேன்)தங்களுக்கும் இறைவனுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றிகள்... 🙏
கருத்துச் செறிவினை மிக எளிய முறையில் வழங்கியமைக்கு எமது உள்ளார்ந்த நன்றிகள். சாகாக் கல்வியினை போதிப்பது, அதனை மிக எளிய முறையில் என் போன்ற பாமரனும் புரிந்து கொள்ளும்படியான விளக்கங்கள்.
எனக்கு வயது 65இப்பொது தான் திருவாசகம் முற்றோதல் சென்று கொண்டு இருக்கிறேன் .தாங்கள் சொல்வது முற்றிலும் சரி .இதுபோல தேடல் எனக்குள்ளும் இருந்தது .தற்செயலாக தங்களின் உரை கேட்டேன் .சிவனே எனக்கு வழி காட்டியதாக நினைக்கிறன் .நன்றி ஐயா
திருவாசகத்தின் மேல் முதல் ஆர்வம் ஐயா சொ.சு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் சொற்பொழிவு கேட்டபின் ஏற்பட்டது.திருவாசகத்தீயை பற்ற வைத்தவர் ஐயா சிவதாமோதரன் அவர்களும் சிவபுராணம் ரமணி ஐயா அவர்களும் தான். அதைவிட அவனருளாலே அவன் தாழ் வணங்கும் பேறும் எண்ணமும் தோன்ற வைத்தவன் என்னப்பன் ஈசன் கருணையுமே…!!
நெஞ்சம் உருகி கண்ணீர் பெருகி தூய்மையான மனதுடன் திருவாசகத்தில் ஒரு பாட்டு பாடினாலும் ஆயிரம் குடம் பால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த புண்ணியம் திருவாசகம் பாடிய அந்த பக்தனுக்கு இறைவனால் உடனடியாக வந்து சேரும் பரம்பொருளாகிய இறைவன் நாத வடிவினன் உண்மை .......அன்பு....... இரக்கம்........ சமாதானம் .....ஜீவகாருண்யம் ....... தயவு ............பசிப்பிணி அகற்றுதல் ..... இந்த ஏழு நல்ல பண்புகளை ஒவ்வொரு மனிதனும் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்து பரமாத்மாவாகிய இறைவனை திருவாசகம் பாடி வழிபட்டு வந்தால் பரம்பொருளாகிய சிவபெருமானின் அருள் கருணையினால் அந்த மனிதனுக்கு சகல செல்வங்களும் நல்ல குழந்தைகள் பாக்கியமும் மறுமையில் கிடைத்தற்கரிய மோட்சமும் கிடைக்கும்....... அவன் சந்ததிகள் ஆல் போல் தழைத்து அருகு போல் பெருகி இந்நிலவுலகில் செழித்து வாழ்வார்கள்❤........
அண்ணா நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் உண்மை. நான் இதை பல முறை எங்கள் திருவாசக முற்றோதல் படிக்கும் இடங்களில் சொல்லியுள்ளேன். அவர்கள் நான் சொல்வதை விரும்புவதில்லை இவ்வாறு நான் சொல்வதால் நான் வராமல் இருப்பது நன்று என்று நினைக்கிறார்கள். நல்ல வேளை ஒருவராவது நம் மனநிலையை புரிந்து கொண்டவர்களை இறைவன் இனம் காட்டினாரே. இறைவா நன்றி நன்றி நன்றி.
விளக்கம் மிகவும் அருமை அய்யா 🙏 பழமொழி " திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" ஆனால் இருமுறை தாங்கள்" திருவாசகத்திற்கு உருகார்" என சொல்லியுள்ளீர்கள். "உருகாதார்" என்பதே சரி 🙏 என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே திருவாசகம் என்னும் தேன் ❤❤❤ முதற்கண் வணக்கங்கள் ஐயா பாமர மக்களும் சுலபமாக இறைவனிடம் சேர இந்த பதிகத்தை இயற்றியிருக்கிறார் மாணிக்கவாசர் 🙏🙏🙏எவ்வளவு தான் எளிதாக இருந்தாலும் மனதில் தூய்மையும் உண்மையான அன்பும் இறைவனிடம் இருந்தால் மட்டுமே அதை வாசிக்க முடியும் . நாம் ஊண் கலந்து உயிர் கலந்து உருகி ஐம்புலன்களையும் அடக்கி பொருள் உணர்ந்து இறைவன் முன் பாடினால் தான் திருவாசகம் என்னும் தேனை நாம் ருசிக்க முடியும் . ஊழிமலி தருவாதவூரர் திருத்தாள் போற்றி 🙏🙏🙏 இந்த பதிவை போட்ட ஐ பக்தி பசிக்கும் தம்பிக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐
ஐயா ! அருமையான பதிவு . அடியேனும் தங்களின் கருத்துக்களை உடையவள் . திருவாசகம் முற்றோதலில் பலமுறை கலந்து கொண்டேன் ; ஆனால் நீங்கள் கூறியது போல் உணர்வு பூர்வமாக இருந்தால் நன்றாக இருக்கும் . இறைவன் ஆணை எதுவோ அவ்வாறு அமையும் என நினைத்துக் கொள்வேன் .
ஓம் நமசிவாய , என் உணர்வுகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன், மனதைக் கவரும் வகையில் இசையுடன் கலந்த தமிழ்ப் பாடல்கள் அனைத்தும் பொருள் விளங்கவில்லையென்றாலும் மனதில் பதிந்துவிடும், அதனால்தான் பாட்டின் பொருளுணர்ந்து அதற்கேற்ற பண்ணில்( இராகத்தில்) அமைத்திருக்கிறார்கள். அப்படிப் பாடும்போது அதற்கு உருகாதார் யாருமிலர், அதிலும் குறிப்பாக பாடுபவர் அளவோடு இரண்டு சங்கதிகளோடு நிறுத்திக் கொண்டு மேற்கொண்டு தொடர்ந்தால் நன்றாக இருக்கும், இதைவிட முக்கியமாக சிலர் பாடும்போது தமிழ்ச் சொல் உச்சரிப்பே புரிவதில்லை ,இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிடுவதாலும் பாடல் புரியாமலே போய்விடுகிறது. இசையும் பாடல் வரிகளும் உச்சரிப்பும் பொருள் விளங்குமாறு அனைத்துமே சரியான விகிதத்தில் அமைந்தால் படிக்காத பாமரனையும் மற்றும் எல்லோரையும் சென்று சேரும், நல்ல இசையமைப்பாளர்கள், தமிழ் அறிஞர்கள் உதவியுடன் அனைவரும் பயிற்சி எடுத்துக்கொண்டு இத்தமிழ்த் தொண்டு செய்தால் மிக்கச் சிறப்புற அமையும் என்பது எனது பணிவான வேண்டுகோள், திருச்சிற்றம்பலம் , ஓம் நமசிவாய
திருவாசகத்தை முற்றோதல் செய்பவர்கள் நூலை சந்தத்தோடு பாடுவது பிழையில்லை ஐயா.பொருளுணர்ந்தால் பாடுவதேது.பாடுகின்ற இந்த ஆன்மாக்கள் இறைவனால் அருளப்படும் வரை பொருளுணர்தல் இயலாது. அவர்கள் எப்படி பாடினாலும் அதன் சாரம் துளித் துளியாக அவர் ஆன்மாவை சென்றடையும்.
ஐயா எனக்கு வயது 67 ஆகிறது இப்போதுதான் திருவாசகம் படிக்க வேண்டும் என்று என்னுள் இருக்கும் ஆவல் இப்போதுதான் நிறைவேறியது அதிலும் உங்களின் இந்த உறையை கேட்டபின் என் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீரை வரவழைத்து விட்டது நன்றி ஐயா இனி பொருள் உணர்ந்து படிப்பேன் 🙏🙏🙏🌹🌹🌹🌹
ஆனந்தம் ஸ்ரீஆனந்ததாஸன் ஆஹா... "சித்தியை நான் வேண்டேன் முக்தியையும் நான் வேண்டும் வேண்டுவேன் நின் தூயபாதமலரில் இடையறாத பக்தி மட்டுமே அம்மா என்று அன்னையிடம் வேண்டுகிறேன். சூரியோதயம் ஆகிவிட்டால் இருளை தொலைந்து போகும். அதுபோல பக்தி எனும் சூரியனின் வெப்பத்தினால் செய்த வினை அஞ்ஞானம் ஆணவம் இவை தொலைந்து போய்விட்டால் சித்தியும் முத்தியும் தானே கிடைத்து விடும்".--ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்--