அம்மா ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப நன்றி இந்த செயலை இந்த உரையாடலை கேட்டதற்கு நான் கடனை கட்டி முடித்த ஒரு திருப்த்தி கிடைக்கிறது நாங்கள் இன்று வரை கோரை என்பது தெரியாமல் இருந்தோம் இன்று முதல் அதை நான் கடைப்பிடித்து இறையன்பு அந்த எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்குகிறேன். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ..
அம்மா நீங்கள் எங்களுக்காக இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு நீங்கள் அதனால் தான் ஒவ்வொருவருக்கும் அந்தந்த சூழ்நிலையில் எப்படி எல்லாம் துன்பம் வருகிறது என்பதை கணித்து அதற்கு தகுந்தால் போல் உங்கள் பதிவுகளை தேடித்தேடி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த அருமையான பணிக்கு நீங்கள் உங்கள் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு நீடூடி வாழ்க
🙏🏻🌹அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.தங்களது ஆன்மீக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.தங்களது ஒவ்வொரு பதிவும் அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🏻
அம்மா இந்த ஹோரை பற்றி மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி. யூ டுயூபில் இதுவரை இந்த தலைப்பை சிறப்பாக யாரும் பேசியது இல்லை. இந்த காணொளி சேமித்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.. மேலும் மேலும் நீங்கள் சீரிய சேவை ஆற்ற வாழ்த்துக்கள் அம்மா. 🙏🏼
அம்மா உங் கள் ஆன்மீகப் பணி மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறையருள் இறையருளும் குருவருளும் துணை புரியட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.. மிகச் சிறந்த பயனுள்ள பதிவு அம்மா நன்றி .. நன்றி.. நன்றி..
அம்மா நீங்கள் நீங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் . உங்கள் பதிவுக்காக காத்து கிடந்தேன் அம்மா.மகர ராசிக்கு மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இது பற்றி நீண்ட காலமாக ஒன்றும் தெரியாமல் இருந்தேன்.. என்னை முழிப்புடன் இருக்க இந்த பதிவு மிகவும் பெரும் உதவியாக உள்ளது. உங்களுக்கு என் வணக்கம் கலந்த நன்றிகள்..... 🙏நற்பவி... நற்பவி.. நற்பவி... 🙏🙏
அம்மா என் வாழ்க்கையில் இன்னும் நான் ஒரு வெற்றியை கூட சந்திக்கவே இல்லை அம்மா என்னப்பன் முருகனை நான் இடைவிடாது நினைத்துக் கொண்டே இருக்கிறேன் அம்மா ஆனால் ஏன் என்று தெரியவில்லை அவர் எனக்கு கஷ்டத்தை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அவர் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அவரை நான் மறப்பதாகவே இல்லை அம்மா இந்த பதிவு கொடுத்ததற்கு மிக நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
ஓரையை பற்றி தெளிவாக விளக்கினார்கள் கோடான கோடி நன்றிகள் அம்மா இப்போது எனக்கு பணத் தேவை உள்ளது நகை அடகு வைக்க வேண்டிய சூழல் உள்ளது எந்த நேரத்தில் வைத்தால் சரியாக இருக்கும் அம்மா பதில் அறிய விரும்புகின்றேன் அம்மா நன்றி அம்மா
அம்மா அவர்களுக்கு நன்றி உங்கள் கருத்து மிகவும் நன்றாக உள்ளது செவ்வாய் கிழமைக்கு குரு சுக்கிரன் சூரியன் சந்திரன் நன்மைகள் செய்வார்கள் தவிர்க்க வேண்டிய செவ்வாய் கிழமை என்று சொன்ன நீங்கள் அதற்கு பதிலை புதன்கிழமை என்று சொல்லி உள்ளீர்கள் ஒரு தெளிவான விளக்கம் வேண்டும் நன்றிகள் அம்மா பதிலை உடனே அனுப்பவும்
அம்மா இவைகள் அனைத்தும் வாழ்வில் முன்னேற்றம் அடைய முட்டுக்கட்டகள் ஆகும் மனிதன் பம்பரமாக சுழன்று கொண்டு அன்றாடம் கூலி செய்து கொண்டு உள்ளவர்கள் நாளும் நேரமும் பார்த்து கொண்டு இருந்தால் பிச்சை தான் எடுக்கணும் எல்லோரும் ஆய்வு செய்து பாருங்கள் நல்ல நேரம் என்று குறிப்பிடும் நேரத்தில் ஆகாத ஹோரை இருக்கும் நல்ல ஹோரை இருக்கும் போது கௌரி பஞ்சாகத்தில் விஷம் என்று இருக்கும் யோசிச்சு பாருங்கள் இது இந்த காலத்துகு ஒத்து வராது 🌹🌹
செவ்வாய் மற்றும் புதன்கிழமை நல்ல காரியம் செய்ய வேண்டிய ஓரைகள் நீங்கள் கூறியதை மீண்டும் ஒரு முறை பார்த்து தெளிவுபடுத்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.