500 ஆண்டுகளுக்கு முன் அவதரித்தவர் அருட்புலவர் அருணகிரிநாதர்! அவர் ஜெயந்தி ஆனி பெளர்ணமி மூலம் ! மனதிற்கு மகிழ்வும், வாழ்வுக்கு வளமும் தரும் திருப்புகழின் பெருமைகளைக் கேட்டு மகிழ்வோம்!..
ஆனி மூலம் பவுர்ணமி அருணகிரிநாதர் ஜெயந்தி புண்ணிய தினமான இன்று முருகனின் மனத்தை உருக்கும் ,நினைத்ததை அளிக்கும் திருப்புகழ் உரை மிக சிறப்பாய் இருந்தது. வறுமை,கவலை,நோய் நீங்கி வாழ்வில் செழுமை பெருக்கும் திருப்புகழ் விளக்கம்,சங்க இலக்கியங்களில் முருகன் வழிபாடு,திரு எழுகூற்றிருக்கை,வீடுபேறு விளக்கம் அருமை.நோய் தீர்க்கும் திருத்தணி திருப்புகழ் கூறி குமரேசனின் இரு தாள்களை பற்றிய வர்களை நாளும், கோளும் தீமை செய்யாது என்ற கந்தர் அலங்காரப் பாடலை ,ஞான சம்பந்தரின் கோளாறு திருப்பதிகத்துடன் ஒப்பிட்டு முருகன் வழிபாட்டின் உயர்வை உரைத்த தங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி நவி லும் தணிகை செல்வி பழனி அபிராமி.
அய்யா வணக்கம் தங்களின் தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் பற்றிய அரிய செய்திகள் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் அருணகிரி நாதரரின் திருப்புகழ் பாடல் தினமும் கேட்டு மகிழத்தக்கவை .சிறுவாபுரி வரலாறு கேட்டு வீடுபேறு அடைய வேண்டும் மற்றும் அங்கு சென்று வந்தால் வாழ்வதற்கு தேவையான வீடும் கிடைக்கப்பெற்று மகிழலாம் என்பதை தங்கள் திருவாய் மூலம் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தாமதமாக பதில் எழுதியதற்கு மன்னித்து அருள் வேண்டுகிறேன் ஜோதி பாண்டியன் ஆசிரியை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir Vanakkam 21 6 2024 your Speech in regard to Thiruppugazh is very superb. How it collected And printed etc Information all Very noteable to the society. Vallimalai swamigal etc are Very good. I pray you should Have good health To serve to society. With regards. K. Sivasubramanian