எக்காலத்திற்கும் கேட்கக்கூடிய கருத்துசெறிந்த இனிய பாடல்கள்! வாழ்த்துக்கள்! எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!👍💐💞
மக்கள் திலகம் நடித்த படம் மிகச்சிறப்பாக நடித்துள்ளார் கவனித்தால் தெரியும் அவர் அவர் பாடலுடன் ஒன்றியிருப்பார் பட்டுக்கோட்டையார் சீர்காழி அய்யா இருவரும் போற்றுதலுக்குரியவர்கள் வாழ்க எமது தமிழ் மக்கள். பட்டுக்கோட்டையார் அவர் வாழ்வில் பட்டு உடுத்த அவர் வீட்டில் பார்த்ததில்லை. பிற்காலத்தில் மக்கள் திலகம் அவர் பாடல்களை அரசுடமை ஆக்கி அவர் குடும்பத்திற்க்கு உதவி செய்தார் என்று நினைக்கிறேன்.
கவிஞரின் வரிகளை கேட்கும்போது மனது வலிக்குது, எப்போது மாடா உழைக்கிறவனோட வாழ்வில் வறுமை நீங்கி மகிழ்ச்சி வரப்போகுதென்று தெரியவில்லை, இது ஒரு சாபக்கேடு இதமாற்ற எவன் வருவான் அதுவும் தெரியல, நாம்தான் இதமாத்தனும் காசுவாங்காம நல்லவனா பாத்து ஓட்டுப் போட்டு வெற்றிப்பெற செய்யனும், அப்படி இல்லைனா காலத்துக்கும் இப்படி தான்.....
Your collections are superb 👌 🌲 (1) பிறக்கும் டோது (SEERKAZHI GOVINDARAJAN) - சக்கரவர்த்தி திருமகள் (1957) G RAMANATHAN (2) குறுக்கு வழியில் (TMS) - மகாதேவி (1957) MSV & TKR (3) சின்னப்பயலே( TMS) - அரசிளங்குமரி (1961) G RAMANATHAN (4) (5) திருடாதே (TMS) - திருடாதே( 1961) S M SUBBAIAH NAIDU (6) (7) ஒன்று பட்டால் (8) செய்யும் தொழிலே( K JAMUNA RANI & RENUKA) - ஆளுக்கொரு வீடு (1960) MSV & TKR
பாட்டுக்கு கோட்டைகட்டி, எளிய மக்களின் வலிகளையும், பாமர மொழியில் பகுத்தறிவையும் கூறிய, மக்கள்கவியின் பாடல்களை, எத்தனைமுறை கேட்டாலும், அத்தனை முறையும் மனம் சிந்தனையில் சிறகு விரிக்கும் எவர்க்கும்.
@@ilavarasanilavarasan7641 our house and we have the right time and the year of I tuition u it up i it oitu I I t it is t try ttt it itt try lupus to itoyi or not to o oil I o ok I am not
பழைய தமிழ் பட பாடல்களை புனைந்த அனைத்து கவிஞர் பெருந்தகைகளையும் நாம் சிரம் தாழ்ந்து வணங்கி கொண்டாட கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொருவருக்கும் இருந்த வெவ்வேறு திறமையால் நம்மை கவர்ந்தனர். ஆனால் இவர்கள் எல்லோரையும் விட எளிமையாகவும் பாமர மக்களை கவரும் வகையிலும் எழுதக்கூடிய திறமைப் படைத்த பட்டுக்கோட்டையாரை அந்த இள வயதில் இழந்தது தமிழரின் துர்பாக்கியமே..
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம் அவர்களுக்கு பட்டுகோட்டையார் வருடிய வார்த்தைகள் காலத்தால் அழியாத காவிய படைப்பு. நன்றி.வாழ்க வளமுடன். ✌✌✌🌹🌹🌹
இன்று அக்டோபர் 8 பொதுவுடைமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்... 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 185 மறக்க முடியாத பாடல்களை நமக்கு தந்து மரணித்து போனவர் ...
பட்டுக்கோட்டை இல்லையென்றால் mgr அரசியல் இல்லை இதுவே நிதர்சனமான உண்மை.. இதை அவரே கூறியிருக்கிறார்.. எனது நாற்காலியில் நான்கு கால்களில் ஒரு கால் பட்டுக்கோட்டை அவர்களுடையது என்று...
இவரது பாடல்கள் யதார்த்தமும் எளிமையான சொல்லாற்றலும் அதே சமயம் கதையின் தன்மையை ஒட்டியும் அமைந்தவையாகையால் நாம் பாடலோடு ஒன்றி விடுகிறோம். பட்டுக்கோட்டையாரின் எண்ணற்ற பாடல்களைக் கேட்டு மகிழும் பாக்கியத்தை நாம் இழந்தோம், அவரின் இளமைக் காலத்திலேயே அவரை காலன் கடத்தி சென்றதால். ஆனால் பழைய பாடல்களை விரும்பும் ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் அவர் வாழ்கிறார்.
வார்த்தையில் தன்.பொதுஉடமைகருத்துக்களைதனதுபாடலில்கோர்த்துபாமாலையாக்கியவர்.அவரதுவார்த்தைகளில்ஆழமும்கூர்மையும்சிந்திக்கதூண்டும்விதத்தில்இருக்கும்.29 வயதில் அகல அவலங்களை..சகலபிரச்சிணைகளையும்வடித்துதந்தத்துவவாதிகுறுகியகாலத்தில்பெரியபெரியகருத்துக்களௌதந்தமக்கள்கவிஞனவன்பூமிஇயங்கும்வரைஅவரதுபாடல்கள்வாழும்.வணங்குகிறேன்நன்றியுடன்அவரை.
நான் அமர்ந்திருக்கும் நாற்க்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டையாருடையது என்று MGR அடிக்கடி குறிப்பிடுவார். உங்கள் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும் வணங்குகிறோம் பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் ஐயா 🙏
What a wonderful songs with simple language and common man can understand and appreciate..philosophical in every field the poet touches. Long live his name and fame.
இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவியல் இணைந்த கல்வி வேண்டும் எல்லா மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
நான் தேடி வந்த பாடல் உனக்கேது சொந்தம் எனக்கேது சொந்தம் (நான் என் மாமாவை இழந்து தவித்து கொண்டுஇருக்கிறேன் 3 மாதகாலமாக )வயது 35 என் மாமா P. Balaji. B. Tech (Senior software Engineer)மாத வருமானம் 1.30lakhs in சென்னை.
காலத்திற்கேற்ப மனிதனின் மாறும் குணங்களை அற்புதமான கவிதை நயங்களை வெளிப்படுத்தி இருக்கிறார் நம் மக்கள் கவிஞர் காலமறிந்து கூவிய சேவல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அற்புதமான வரிகள் பாட்டிலே பாமரனுக்கும் பண்பையும் படிப்பறிவும் சொல்லிக் கொடுத்தேன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் நீடோடி வாழ்க என்றும் அவர் புகழ் மனிதனுக்காக வாழ்ந்தவன் புகழும் இந்த உலகத்தில் மனிதனுக்காக வாழ்ந்தவன் மனிதனின் புகழ் மனித இனம் இருக்கும் வரை என்றென்றும் இருக்கும்
பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் அனைத்தும் தேன் அமுது.பொதுவுடமை கருத்துக்களை சாதாரணமான மனிதரும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமை, தத்துவம்,புரட்சி,காதல் போன்ற அனைத்துக்கும் பொருந்தும் பாடல்கள். இவ்வுலகம் இருக்கும்வரை இவர் புகழ் இருக்கும்.