நிதர்சனமான உண்மை.அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலத்திலேயே இத்தனை மூட நம்பிக்கைகள் இருந்தால் அறிவியல் வளராத அந்த காலத்தில் எத்தனை கதைகளை அவிழ்த்து விட்டிருப்பார்கள். எந்த கடவுளும் தனக்கு கோவில் கட்டி கும்பிட சொல்லவும் இல்லை, தன்னை வணங்கும், புகழும் மனிதருக்குதான் எல்லாம் அருளப்படும் என்று சொல்லவும் இல்லை. அண்ட சராசரத்தையும் படைத்தவர் கடவுள் என்றால் மனிதனின் அற்ப புகழ்சியை விரும்புவரா? கடவுள் இருந்தால் நல்லவர் அனைவரையும் காப்பாற்றுவார். முடிந்தவரை மனித நேயத்தோடு பிறருக்கு நன்மை செய்து சந்தோஷமாக வாழ்வதே வாழ்க்கை. வீணாக நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு மனதை குழப்பி கொண்டால் உள்ளமும் உடலும் பலவீனம் அடையுமே தவிர ஒரு பலனும் இல்லை என்பதே உண்மை. மதங்களை மறப்போம், மனித நேயத்தை வளர்ப்போம். Truth is still a truth if no one believes, a lie is still a lie even if everyone believes it.
தோழரே மனிதர்கள் ஆழமாக சிந்திக்கும் திறன் இருந்தால் உங்கள் செயலுக்கு கொஞ்சமாவது பலன் இருக்கும்.ஆனால் அவர்கள் கிட்ட தட்ட கோமா நிலையில் இருக்கிறார்கள் .இருந்தாலும் உங்கள் முயற்சி மதிப்பு மிக்கது