May heaven's choicest blessings be showered upon Manoj always. We need extremely talented youngsters like MANOJ to save n cleanse this society. His organization is gifted. Highlight is, he n U2BRUTUS Minor hardly know the meaning of the term "jealous". I'm learning TAMIL a lot by watching his videos continuously!
Excellent manoj.... பெரியார் யார் என்று மேலும் மேலும் புரிய வைப்பதற்கு நன்றி. நான் பெரியார் பள்ளியில் தான் படித்தேன் ஆனால் உங்கள் சேனல் பார்த்து தான் விரிவாக தெரிந்து கொள்கிறேன்.
"அதாவது சார்.. பெரியார் ஒரு கன்னடர் சார். அவர் தமிழர் இல்லை. அவரை தலைவராக ஏற்றுக் கொள்ளவே முடியாது சார்.." "சரிதான் தம்பி, பெரியார் கன்னடர்களுக்கு என்ன பாடுபட்டார்?" "ஒண்ணுமில்லை சார்." "கன்னட மாநிலத்தில் என்ன பாடுபட்டார்?" "ஒண்ணுமில்லை சார்" "கன்னட மொழிக்கு என்ன பாடுபட்டார்?" "ஒண்ணுமில்லை சார்" "அவர் பேசியது என்ன மொழி?" "தமிழ் தான் சார்" "அவர் பாடுபட்டது எந்த மண்ணில்?" "தமிழ்நாட்டில் தான் சார்" "பாடுபட்டது யாருக்காக?" "தமிழருக்கு தான் சார்" "அவர் தமிழ்நாடு கன்னடருக்கே-ன்னு சொன்னாரா?" "இல்லை சார், தமிழ்நாடு தமிழருக்கே -ன்னு தான் சொன்னார் சார்" "அவரை விட அதிகமாக தமிழருக்காக பாடுபட்ட ஒரு தலைவரை சொல்லுங்க பார்ப்போம்?" "அது வந்து.. அது வந்து... மபொசி சார்.." "மபொசியா..?" "இல்லை, வந்து... கிஆபெ சார்..." "கிஆபெ-யா...?" "இல்லை.. வந்து.. அண்ணல் தங்கோ சார்." "அண்ணல் தங்கோ வா..?" "இல்லை.. வந்து.. ஆதித்தனார் சார்.." "ஆதித்தனாரா...?" "ஆமா சார்." "எப்படிப்பா?" "அதெல்லாம் தெரியாது" "எங்க குருஜிக்கள் அப்படிதான் சொல்லிக் கொடுத்திருக்காங்க சார்.." - தளபதி | பொழிசை கண்ணன் அவர்களின் பதிவு
தம்பி இவ்வளவு நீளத்துக்கு விளக்கம் எழுதின நீங்கள் முக்கியமாக தேவைப்படும் யாரும் எதிர்க்க முடியாத ஒரு விளக்கத்தை விட்டு விட்டீர்களே,அதாவது,பெரியாருக்கு மட்டும் அல்ல வேறு எவரையும் கேள்வி கேட்க முடியாத " உரிமை," என்று ஒன்று உண்டு,அதாவது, " பிறப்புரிமை",பெரியார் எங்கு பிறந்தார் ? என்ற ஒரே கேள்வியில் கிடைக்கும் " ஈரோடு "என்ற ஒரு பதில் போதும், எந்த வெறி நாயும் பெரியார் பற்றி கேள்வி கேட்க முடியாது.
ஆரியத்தால் வீழ்ந்தோம்... திராவிடத்தால் எழுந்தோம்...!!! மானமும், அறிவும்.. மனிதனுக்கு அழகு என்றார்.. சமநீதி வேண்டும்... மனுநீதி கூடாது என்றார்.. சுயமரியாதை பிறப்புரிமை என்றார்... சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்.. வர்ணம், சாதிகளுக்கு காரணமான கடவுளே வேண்டாம் என்றார்... அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும் கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்.. குலத்தொழில் விட்டோழி என்றார்... புத்தக பைகளை நாம் சுமக்க, மூத்திர வாளி அவர் சுமந்தார்... மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்... மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்... மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும் சொந்தம் இல்லை என்றார்... முன்னேற்றப் பாதையில் மக்களை விரட்டிச் சென்றார்... வைக்கம் வீரர்... வெந்தாடி வேந்தர்.. பகுத்தறிவு பகலவன்... தொண்டு செய்து பழுத்த பழம்... அரசியல் ஆசான்.. ஆரியர்களின் கெட்ட கனவு.. அவர் தான் பெரியார். இறந்தும் சங்கிகளின் தூக்கத்தை கெடுக்கிறார்...!!! வர்ணம் சாதி மனுநீதி மனித பேதங்கள் ஒழிக்க வந்த.. பெரியார் அவர்.. இறந்து இத்துனை ஆண்டுகள் ஆனாலும் சங்கிகளை சுத்துபோடும் ஒற்றைத்தலை இராவணன் தான் நம் பெரியார்... 🔥❤
இங்கு பலர் சீமான் பச்சை பொய்களை நம்பிவருவதால் இவ்வாறு நீங்கள் இது பற்றி ஆதாரங்களுடன் பேசிவருவது நல்லது. இதற்கான பத்திரிகை ஆதாரங்களையும் தேடி எடுத்து பிரசுரியுங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
உங்கள் சேனலுக்கு எந்த விளம்பரம் செய்யாமல், லைக், சப்ஸ்கிரைப், ஷேர் பண்ணுங்க, ரேசர்பேல முடிஞ்சா குடுங்கன்னு சொல்லாம, மக்களின் நலனுக்காக, அரசியல் விழிப்புணர்வுக்கான, சமூக நீதிப் பார்வையில் பொறுப்புடன் அரச்சீற்றம் செய்யும் நண்பர் மனோஜ், மிகவும் போற்றுதற்குறியவர். 🙏🙏
‘தமிழர்’ என்றால் பார்ப்பானும் “நானும் தமிழன்தான்”என்று கூறிக்கொண்டு, நம்முடன் சேர்ந்து, கெடுக்கப் பார்ப்பான்; ஆனால், ‘திராவிடர்’ என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக்கொண்டு நம்முடன் சேர முற்படமாட்டான்... ஆகவேதான் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். மற்றபடி திராவிடர் என்பதில் எங்களுக்கு வேறென்ன உள்நோக்கம் இருக்க முடியும்? தமிழர் என்பதில் நான் சேர்க்க நினைத்த அத்தனை பேரையும் சேர்க்கவும், நான் விலக்க நினைத்த _ நமக்கு மாறுபட்ட கலாச்சாரமுடைய- கூட்டத்தை விலக்கவும் வசதி உண்டா? இழிவுக்கும் தாழ்வுக்கும் கட்டுப்பட்டுள்ள மக்களையும், இதற்கு நேர்மாறாக _ இவ்விழிவுக்கே காரணமான உயர்ஜாதி மக்களையும் ஒன்றாக்கிக் கொண்டால், அதில் இவ்விழிவு நீங்க வழி ஏற்படுமா? முதலில் இவ்விழிவு நீங்கட்டும்! பிறகு எல்லோரும் ஒன்றாவோம்! சூத்திரர் என்பவர்களுக்குத் திராவிடர் என்ற பெயர் தவிர்த்து, வேறு பொருத்தமான பெயர் யாராவது கூறுவார்களானால் அதை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, என் அறியாமைக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் தயாராயிருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் பெயரில் மேலே சொன்ன அத்தனை பேரும் ஒன்று சேர வசதி இருக்க வேண்டும். அதில் சூத்திரனில்லாத ஒரு தூசி கூட உள்ளே புகுந்து கொள்ளாமல் தடுக்க ஏதாவது தடையிருக்க வேண்டாமா?” என்றார் பெரியார். (மொழியாராய்ச்சி எனும் நூலிலிருந்து)