சிவ செல்வங்களின் தேனான குரல்களில் திருவெம்பாவை எனும் தேன். அற்புதம் அற்புதம். என்ன தவம் செய்தனர் இக்குழந்தைகள். இவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி அனைத்து பாடல்களையும் ஒவ்வொன்றாக அளித்திடின் நலம். தேனிசை திருப்புகழையும் சேர்த்திடலாமே. நன்றி வணக்கம்.
மற்றுமொரு அருமையான பாடல் சகோதரிகளிடம் இருந்து வந்துள்ளது. நான் நன்கு ரசித்து கேட்பேன் ஒவ்வொரு முறை கேட்கும் போது. மாதர் பிறை கண்ணியானை பதிக விளக்கம் நான் தயார் செய்து கொண்டிருந்தேன். அதில் 3ம் பாடலில் பெய்வளையாளோடு என்பார் அப்பர் பெருமான். பெய்வளை என்ற சொல்லை எங்கு கேட்டோம் என்று நான் யோசித்த போது சகோதரிகள் பாடிக் கேட்டுள்ளேனன் என்று ஞாபகம் வந்து இன்று மீண்டும் இப்பாடலைக் கேட்டு ரசித்தேன். திருவெம்பாவை 20 பாடல்களில் இந்த ஒரு பாடலில் மட்டும் தான் மாணிக்கவாசகர் உமை அம்மையை மகளிர் வணங்ககுவதாக அமைத்துள்ளார். மற்ற அனைத்து பாடல்களிலும் சிவபெருமானை வணங்குவதாகத் தான் பாடல்கள் அமைத்திருப்பார். இந்த 14ம் திருவெம்பாவை பாடல் சற்று சிறப்பான பாடல் தான். இசையோடு திருமுறை பாடல்கள் கேட்கும் போது அவை மனதில் நன்கு பதிகின்றன. நல்லப் பணி செய்கிறீர்கள். என்றென்றும் தொடர மனமார வேண்டிக் கொள்கிறேன். திருச்சிற்றம்பலம்
மிக இனிமையாக பாடியுள்ளனர். ஈசாவின் வெளிப்பாடுகள் (expressions) அருமை. உமையம்மையையும் பெருமானையும் சேர்த்து காட்சிப்படுத்தியது பாடலின் சூழலுக்கு பொருத்தமாக உள்ளது.