முதலில் விவசாயிகள் திட்டம்
திருவள்ளூர்: மத்திய அரசின், 'முதலில் விவசாயிகள்' திட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் துவக்கப்பட்டது. இதில், 50 விவசாயிகளுக்கு நாட்டு கோழி வளர்ப்பு, ஜப்பானிய காடை வளர்ப்பு மற்றும் உரங்கள் வழங்கப்பட்டன.
இத்திட்டம், கோயம்பாக்கம், தண்ணீர்குளம், பண்டிகாவனுார், கரையான்மேடு, மேலகொண்டயூர் மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய ஆறு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இக்கிராம விவசாயிகள், இத்திட்டத்தினை பயன்படுத்தி, வேளாண்மை துறை சார்ந்த தொழில்நுட்ப உதவி, கால்நடை பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்ப உதவி, களநிலை ஆதரவு பணிகள், மனையியல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் உதவி செய்து அதன் வழியாக கிராம மக்கள் தாங்கள் ஈடுபட்டுள்ள தொழில் மூலம் செய்கின்ற உற்பத்தி திறனை மேம்படுத்தி கூடுதல் வருமானத்திற்கு வழிவகை செய்யலாம்.
5 мар 2023