அம்மா திருவண்ணாமலை கோவிலை பற்றி சொல்லுங்க நீங்க பிறந்து வளர்ந்த மதுரையை பற்றி மதுரையைப் பற்றி சொன்னீர்கள் மிக அற்புதமாக உள்ளது திருவிளையாடல் புராணம் முடிந்து விட்டதே என்று வருத்தத்தோடு இருந்தேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மையார் அவர்களுக்கு வணக்கம். நானும் காரைக்குடி என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் எங்களது மூல முதற் கடவுள் கொப்புடை நாயகி அம்பிகையை வர்ணித்து தாங்கள் பேசும்போது உள்ளத்தில் பக்தி பொங்கி கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது சமீபத்தில் குடமுழுக்கு விழாவில் தாங்கள் சொற்பொழிவு(அகிலாண்டேஸ்வரி அம்பிகை மடப்பள்ளி சமையல்காரருக்கு வெற்றிலை பாக்கு கொடுத்த கதை) ஆற்றியதைக் கேட்டு மகிழ்ந்தோம்..மிக்க நன்றிகள்.
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏. நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகாது... கோடான கோடி நன்றிகள் அம்மா 💐💐💐.. நான் காரைக்குடியில் வளர்ந்து வந்தவள். தற்போது நான் அவ்விடம் இல்லை. நீங்கள் சொல்ல சொல்ல அம்மாவை பார்க்க வேண்டும் என்று மனமானது ஏங்குகிறது. மகிழ்ச்சி அம்மா 💐💐💐.
அம்மா, தேவாரம் மற்றும் திருப்புகழ் போலவே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இந்த பாசுரம் பாராயணம் செய்தால் இன்ன பலன் என்று உண்டா? ஆம் என்றால் பாசுரங்களும் பலன்களும் தலைப்பில் அதையெல்லாம் சொல்லுங்கள் அம்மா.
அம்மா Please Maa, திருவாசகம் பற்றிய ஒரு தொடர் பதிவு போடுங்க அம்மா. வாரத்திற்கு ஒருமுறையாவது போடுங்க அம்மா Please Maa❤அம்மா தினமும் உங்க பதிவு பார்க்காமல் அன்றைக்கு நாளே ஓடாது. உங்கள் குரல் கரகரப்பு இருக்கிறது. தொண்டை பிரச்சினையா அம்மா, உடல்நிலையை கவனனமாக பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா❤🌹நன்றி
அம்மா நான் காரைக்குடி. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த பதிவு. இந்த கோவில் பகௌகத்தில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அட்மிட் ஆனேன் ரொம்ப சிரமம் டெலிவரில்ல சொன்னாங்க ம்மா அம்பாள தான் மனமுருகி வேண்டினோம்.பூச்சொரிதல் செவ்வாய்கிழமை. அம்பாள் உலா வந்த நேரத்தில். 9:15 பெண் குழந்தை பிறந்தது அம்மா சுகப்பிரசவம் அம்பாள் மகிமையே மகிமை❤
அம்மா நீங்கள் சொல்லும் போதே இந்த அம்பாளுடைய அருள் கிடைத்தது போல் இருகிறது தாயே. என் மகளுக்கும் ரிசால்ட் நல்ல படியாக அமைய கொப்பாத்தா அருள் புரியானும் அம்மா. 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️✨✨
தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு அருளியது போல் எல்லோருக்கும் தந்து அருளும்காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் துணையே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா வேல்மாறல் எப்படி நீங்க குரல் பதிவாக கொடுத்தீர்களோ.அதே போல கந்தர் அலங்காரமும் கந்தர் அனுபூதியும் குரல் பதிவாக வணங்கினீர்கள் என்றால் மிகவும் உபயோகமாக இருக்கும்...
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
அம்மா அதே போல அன்னை ஆதிபராசக்தி லலிதா பரமேஸ்வரி காரைக்குடி நகரில் குழந்தை முத்துமாரி அம்மனாக அருள்கிறார் .... ஒரு காலத்தில் காரைக்குடி என்றால் செட்டிநாடு புகழ் என்பது மட்டுமே பெரிதாக இருந்தது.... இன்று காரைக்குடி என்றாலே அன்னை தக்காளி பழ காணிக்கை ஏற்கும் லலிதா முத்துமாரி அம்மன் கோவில் லட்ச பால்குட திருவிழா தான் தமிழகம் முழுவதும் சிறப்பாக கூறப்படுகிறது ..... பக்தர்களின் வேண்டுதல்களை வேண்டிய வண்ணம் நிறைவேற்றி கொடுக்கும் காரைக்குடி லலிதா முத்து மாரி அம்மன் வரலாறு இந்த பதிவில் போடுங்கள் அம்மா ..... 🙏🙏🙏🙏🙏
அம்மா... 6 வாரம் செவ்வாய் கிழமை வெற்றிலை தீபம் ஏற்றினேன்.. ஏனோ முருகன் என்னிடம் செவி சாய்க்கவில்லை... 7 வது வாரமும் முடிந்தது.. என் பிரார்த்தனை நடக்கவில்லை.. சிரத்தை கொண்டு.. மனமுருகி செய்தேன்... நம்பிக்கை தளரவில்லை.. ஆனாலும் மனதில் வருத்தம் உண்டு.. உபாயம் கூறுங்கள் அம்மா