அடியேனும் தெளிவுசும்பு திருநாடு அடைய ஆச்சர்யன் அருளும் ஸ்ரீ மதே ஜனார்த்தனன் அருளும் கிடைக்க வேண்டும். நாராயணன் திருவடிகளே சரணம். அடியேன் ராமானுஜன் தாசி. குருவே சரணம்.
நண்பரே! சுருதிகளில் கூறப்பட்ட லட்சணம் உடைய,தகுதி வாய்ந்த ஓர் ஆச்சார்யன் மூலமே வைகுண்டம் செல்ல முடியும். இந்தக் கருத்தை உபதேச ரத்தின மாலை என்ற தமது நூலில் மணவாள மாமுனிகள் குறிப்பிட்டுள்ளார். ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -------மணவாள மாமுனிகள் மேற்சொன்ன பாடலில் "குருவை அடைந்தக்கால்" என்று எழுதிய இருப்பதைக் கவனிக்கவும். இராமானுஜர் அவர்கள் ஆச்சார்யனின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவருடைய காலத்தில் வாழ்ந்த திருக்கச்சி நம்பிகளிடம் சென்று தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி இறைஞ்சினார். அவரும் ஏற்றுக்கொண்டார். இராமானுஜர் தனக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்து மறைந்த ஆச்சார்யனையே வணங்கியிருக்கலாமே! அவ்வாறு செய்யாமல் ஏன் அவருடைய காலத்தில் இருந்த ஓர் ஆச்சார்யனை நாடினார்? இராகவேந்திரரும் அவர் இருக்கும் போது வாழ்ந்த ஒரு குருபெருமானையே நாடினார். ஏன்? ஏனென்றால் அத்தகைய ஆச்சார்யனால்தான் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்.
தந்தை மகன் காற்றும் கடமையும் மகன் தந்தைக்கு செய்யும் கடமையும் செய்து தாங்களும் தங்கள் மகற்க்கும் செய்து தங்கள் மகனும் தங்களுக்கு செய்யும் நன்றியும் மூன்று தலைமுறை இறைபணி செய்ய எத்தனை ஜென்மம் எத்தனை கோடி புண்ணியம் தங்கள் முன்னோர்கள் அடியேனின் நமஸ்காரம் அன்புடன் ,🌹🙏
ஐயா மாதா, பிதா, குரு(ஆச்சார்யன்) , தெய்வம். ஒரு குழந்தைக்கு மாதா பிதாவைக் காட்டுகிறாள். அது போல குரு (ஆச்சார்யன்) பகவானைக் காண்பதற்கும், வைகுண்டம் செல்வதற்கான வழிமுறைகளைக் காட்டுகிறார். இதனை உபதேச ரத்தின மாலை என்ற தமது நூலில் மணவாள மாமுனிகள் எழுதியிருக்கிறார். ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும். ஆச்சார்யன் துணையின்றி வைகுண்டம் செல்ல முடியாது என்பதை இந்தப் பாடல் வலியுறுத்துகிறது
பகவானுக்கும், தகுதி வாய்ந்த பக்தனுக்கும் பாலமாக இருப்பவர் தகுதி வாய்ந்த ஆச்சார்யன். ஓர் ஆச்சார்யன் (தற்போது பூமியில் வாழுகின்ற ஆச்சார்யன் ) துணையின்றி வைகுண்டம் செல்ல முடியாது. இதனை மணவாள மாமுனிகள் மிகத் தெளிவாக தமத உபதேச ரத்தின மாலை என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும்