மிகமிக அருமையான பதிவு, உங்கள் குரல் மிக இனிமையாக உள்ளது, நன்றி ஒரு நிகழ்ச்சிக்காக ஆய்வுக்காக நான் இதை கேட்க நேர்ந்தது பாக்கியம். திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன் சிவாய நம்🙏
சுடுகாட்டை, பேயை வர்ணித்த விதம் உண்மையிலேயை சுடுகாடு சென்று பேயை நேரில் பார்த்து போல் இருந்தது. பேய்கள் நரிகளை கோபத்துடன் அறைந்தது, பேய்களின் அழகான குடும்ப வாழ்க்கை, தற்கால மனித வாழ்க்கை முறையை பேய்களின் வாழ்க்கை முறையுடன் ஒப்பிட்ட விதம், பேய்களின் கூத்து என்று அழகான வர்ணனை. இப்படிப்பட்ட இடத்தில் எம்பெருமான் ஆடும் ஊர்த்துவ தாண்டவத்தின் தாத்மீகத்தை சொல்லிய விதம் அருமை. பெருமானின் சலங்கை ஒலியை குறிப்பிடும் பொழுது, நிஐமாகவே கேட்டது போல் இருந்தது. அம்பலவாணன் protocol பற்றிய செய்தி அருமை. உடல் கண்டிப்பாக ஒரு நாள் அழிந்தே போகும் என்ற குறிப்பு சிறப்பு. தியானம் கைகூடும் வழி, சிவகதி அடையும் முறை என்று அழகான செய்திகள் அடங்கிய அருமையான உரை. அழகாக பாடி முடித்தது புதுமை.