என் குடும்பத்தோடு நான் கொண்டாடிய போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்கள் இந்தப் பதிவில்... Special Pongal Celebration Vlog with my family… - திருமதி. தேச மங்கையர்க்கரசி
தமிழ் யூ ட்யூப் ஆன்மிக சேனல்களில் எனக்கு மிகவும் பிடித்த சேனல். காரணங்கள் 10. 1. அம்மாவின் பேச்சு. 2. அம்மாவின் ஆன்மிக கருத்துகள். 3. பல ஆலயங்களின் தகவல்கள். 4. தெய்வீக முகம். 5. பார்த்தாலே கை கும்பிடத்தோன்றும் உடை. 6. சுத்த தமிழ் உச்சரிப்பு. 7. வழிபாடு முறைகள் சொல்வது. 8. நேர்சிந்தனைகள். 9. குடும்பத்தாரை பற்றி கூறாமை. 10. ஆலயங்களுக்கு நேரடியாக சென்று தரிசனம் செய்தல். இன்னும் பல. தேசமங்கையர்க்கரசி உங்கள் வயது என்னமோ 35 ககுள். ஆனால் நீங்கள் கூறும் ஆன்மீக கருத்துகள் எங்கும் கிடைக்காத பொக்கிசங்களே! அதுவும் இன்று தூங்கும் முன் நினைத்தேன் உங்கள் பொங்கல் பதிவு பார்க்க வேண்டும் என்று.இதேபோல பார்த்தும் விட்டேன்.மிக்க மகிழ்ச்சி. உங்கள் கணவர் இரட்டைக்குழந்தைகள் செல்லக்குட்டி பெற்றோர் சகோதர்ர் அண்ணி என எல்லோரையும் பார்த்த பேரின்பம்எனக்கு.
அம்மா உங்களை ஒருமுறையேனும் நேரில் பார்த்து புகைப்படம் எடுக்க வேண்டும். நான் தங்களின் பிறந்த ஊரான மதுரையில் தான் இருக்கிறேன் மதுரைக்கு நீங்கள் வந்தால் உங்களை சந்திப்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன். அம்மா இன்னும் ஒரு சிறிய வேண்டுகோள் ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் லைவ் வீடியோ போடுங்கள்.ஏனெனில் பலருக்கும் ஆன்மீக விஷயங்களில் பல ஐயங்கள் இருந்து வருகிறது எனவே அதை தாங்கள் தீர்த்து வைக்க வேண்டும். ஒருநாள் அவசியம் நீங்கள் லைவ் வீடியோ வரவேண்டும். அம்மா நீங்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் தோடு நீடூழி வாழ்க இறைவன் துணை நிற்கட்டும்.
தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களின் குடும்ப பதிவு நன்றாக இருந்தது உங்கள் சகோதர் குடும்ப பதிவு சூப்பர் அடுத்த ஆண்டு உங்கள் மாமியார் கணவரின் கூட பிறந்தவர்களையும் பதிவிடுங்கள் நன்றி நன்றி
அம்மா உங்கள் ஆத்மார்த்த ரசிகை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா ,. உங்கள் ஆன்மிக சொர் பொலிவு ஒருமுறையாவது கேட்கவேண்டும் பூர்விகம் திருச்சி தற்போது சென்னை நங்கனுள்ளூர் அம்மா அப்படி நடந்தால் தெரியபடுங்கள் அதுவும் உங்களை பார்க வேண்டும் அம்மா என் தந்தை கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு தவரமாட்டார் நான் சிறு பிள்ளை அதாவது நான்காம் வகுப்பு படிக்கும் என்னை என் அம்மாவையும் அழைத்து செல்வார் ரொம்ப நன்றி அம்மா
அம்மா நீங்கள் சொன்னதால் தான் நாங்கள் அரிசி மாவு முலம் கோலம் போட ஆரம்பித்தேன் ஆனால் நீங்கள் கலர் கோலம் போட்டு இருக்கிறார்கள் . கேட்பது தவறு என்றால் மன்னிக்க வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏 எங்கள் வீட்டில் இப்பொழுது தினமும் மா கோலம் பார்த்து பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்களும் கோலம் போடுகிறார்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
மகிழ்ச்சி மேடம் .பார்க்கவே ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.இன்று போல் என்றும் வாழ்க.நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் இறையருளோடும் குருவருளோடும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் 🙏
அருமை அருமை அருமை அம்மா பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது அம்மா நீங்க லும் உங்களுடைய குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கடவுள் இடம் வேண்டுகிரேன்
Hi Mangai this is Stella. Neenga marathurpinga Nama elarum Rosary church school a onna paduchavnga. Adikadi unga programme parpan you tube la. Apo romba perumaiya irukum.namakuda paduchavangnu. Neenga 4th std laya 1330 thirukural sona first kulanthai neenga than. Ippo ivalvu varusam kalichu amma and appa unga kudmbathoda parkurapo ennala valthukal sola ma iruka mudiyala. Unga pani thodara valthukal
சுண்ணாம்புக்கார தெரு நேதாஜி ரோடு மதுரை யில இருந்து தமிழ் செல்வி பேசுகிறேன் MKடெய்லர் கருப்பையா பொண்ணு தான் நான் நீ சின்ன குழந்தையாய் இருக்கும் போது எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீடு தான் உங்கள் வீடு உன்னோட போண் நம்பர் குடுப்பா நான் நேரில் பேசுகிறேன் நன்றி நன்றி வாழ்க வளமுடன் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர நற்பவி நற்பவி
We ve never seen your in laws. We usually celebrate festivals with our in laws only that is more important. I need not tell you. You seem to be happy because you are living with your parents only
பொங்கல் கொண்டாடும் முறையினை அருமையாக தங்களுடைய குடும்த்தினருடன் தாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வை எங்களுடன் பகிர்ந்தமைக்கு அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். தாங்கள் குடும்பத்துடன் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ இறைவனிடம் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
தமிழ் மொழியை ஆங்கிலம் கலக்காமல் இன்றைய கால கட்டத்தில் முழுமையாக பிழையின்றி பேசும் கலை உங்களிடம் அற்புதமாக உள்ளது. ஆன்மீகம் பேசுவது மட்டும் இல்லாமல் அதன் வழி பின்பற்றுவதும் சால சிறந்தது. வாழ்த்துக்கள்.
மறந்து போன வழக்கத்தில் இருந்து மாறி போன பொங்கலை இன்று கண் குளிற காண்பித்தீர்கள். பாரம்பரிய பொங்கலை விட்டு கொடுத்தவர்கள் தயவுசெய்து திரும்ப ஆரம்பித்து சந்தோஷமாக வாழுங்கள்... நம் குழந்தைகளுக்கு நாம் சேர்க்கும் கற்பிக்கும் சொத்து இது தான்... வெளிநாட்டு மரபுகள் வேண்டாமே .... நன்றி அம்மா தங்களை போன்றவர்கள் உள்ளவரை நம் பாரம்பரியம் சாகாது... ஏனெனில் தங்களை போன்றவர்கள் தான் மீண்டும் மீண்டும் உயிர் கொடுத்து கொண்டே உள்ளீர்கள்..
உங்களின் இனிய பொங்கல், குடும்பத்தார், கணவர் ,மகன்கள், தாய், தந்தையர் இவர்களோடு உங்களின் இனியமாட்டுப் பொங்கலும் இனிமையாக இருந்தது பொங்கலோ !பொங்கல்! வணக்கம் மிக்க நன்றி அன்னை.
முருகப்பெருமானின் திருலருளோடும், வாரியார் சாமிகளின் நல்லருளோடும் வளம்பல பெற்று சுற்றங்கள் சூழ நலமோடு பல்லாண்டு வாழ மனம் விழைகிறேன்.. தங்கள் சொற்பொழிவின் ரசிகன்
* எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். இந்த வீடியோ பதிவு ஐஸ்வர்யம் நிறைந்த பதிவாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.* * பாரத தாய்க்கு நன்றி *