This song is produced purely to Praise God by singing with the Karaoke in your family or church prayer meetings. More such traditional song's karaoke will be uploaded frequently. Songs that you wish can be shared in the comment section.
ஆவியை மழைபோலே யூற்றும், - பல
ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.
அனுபல்லவி
பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், - ஆவியை
சரணங்கள்
1. அன்பினால் ஜீவனை விட்டீர் - ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். - ஆவியை
2. சிதறுண்டலைகிற ஆட்டைப் - பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். - ஆவியை
3. காத்திருந்த பல பேரும் - மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். - ஆவியை
4. தோத்திரக் கீதங்கள் பாடி - எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். - ஆவியை .
recorded : C7 Audio Studio
Music produced : Benny Pradeep
Camera : Sharon Lisa
2 авг 2023