ஐயா வணக்கம், உயர்நீதிமன்றத்தில் 8வாரத்தில் பரிசீலனை செய்து பணி வழங்கலாம் என்று ஆணை பிறப்பித்த நிலையில் அரசு இன்னும் பணி வழங்கவில்லை, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் எத்தனை நாட்களில் தீர்வு கிடைக்கும் ஐயா...
வழக்கின் சங்கதிகளையும் அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பையும் மூன்றாம் நபர் இதில் சம்பந்தப்பட்டுள்ளாரா இல்லையா என்பதையும் பரிசீலனை செய்த பின்பே எதையும் கூற முடியும்
மாண்பமை அய்யா வணக்கம்👋 நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அரசு அலுவலர்கள் மீது contempt of court நடவடிக்கை எடுக்க அந்த வழக்கில் பார்ட்டியாக இருக்க வேண்டுமா அல்லது வாதியின் வாரிசுகளும் மேற்படி வழக்கை தொடுக்க சட்டத்தில் இடமிருக்கிறதா ?தங்களின் மேலான கருத்துக்கள் தேவை.
உயர் திரு நீதிபதி ஐயா வணக்கம். கடை சம்பந்தமாக தடையானை வழங்கபட்டது. (முனிசீப்கோர்ட் ) எதிரி மேல்முறையீடு செய்கிறார்கள். உத்தரவை நிறுத்திவைக்கும் படி. அந்த உத்தரவு பெற்றவுடன் கடை உடைக்கப்பட்டு எங்களை வலுகட்டாயமாக வெளியேறுகிறார்கள். இது சரியா சப்கோர்ட்டில் மீண்டும் எங்கள் தடையானை ஏற்கப்பட்டு அதற்கான தீர்ப்பு பெண்டிங்கில் உள்ளது. இதற்கான சட்ட வழிமுறை கூறவும். நன்றி ஐயா.