தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே 2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே
Praise the lord, music is quite awesome, voice is so amazing, cinematography is really good . may God bless you and your team and family and ministries forever and give you peace blessings happiness and good health always