பசியையும் ருசியையும் தமிழ் உணவிற்கு மற்றுமொரு தலையாய பணியொன்று உண்டு . அது ' மருந்தென வேண்டாவாம் ' என நம்மை நல வாழ்விற்கு நகர்த்தும் பணி.பொழுதிற்க்கு ஒரு உணவு , திணைக்கு ஒரு உணவு கலாச்சாரம் , பணிக்கு ஒரு உணவு ,வயதிற்கு ஒரு உணவு வகை என உணவை மாமருந்தாக்கிய சமூகம் நம் தமிழ் சமூகம் மட்டுமே.எதை உண்கிறோம் ? எதற்காக உண்கிறோம் ?எப்படி இவ்வுணவு செய்யப்பட்டது ?எங்கிருந்து வந்தது?எதனால் இங்கு வந்தது ?இன்றைக்கு இது நலம் தருமா ?நாளைக்கும் நன்மை பயக்குமா !நம் சந்ததிகளுக்கும் இவ்வுணவூட்டலில் தழைக்குமா ?என எதுவும் தெரியாத புதுப்புது வெளி நாட்டுக் குப்பை உணவுகள் பளபளப்பாய் நம்மூரில் புகுத்தப்படும் காலம் இது.நமது உணவு பாரம்பரியத்தைவிட்டு நாகரிக வளர்ச்சி என்றளவில் அதனை கடந்து செல்லாமல், நம் எதிர்கால வாழ்வியலை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், அறம் சார் உணவு கலாச்சாரத்தின் ஊற்றுக் கண்ணை நம் மக்கள் உற்றுப்பார்க்க , நமது மண்ணின் மூத்தகுடி ருசித்த , ரசித்த , மகிழ்ந்த, நலம் பெற்ற , பாரம்பரிய உணவுப்பெருவிழா தொகுப்புவின்.Dr.Ku.Sivaraman - Senior siddha physician - SpeechLink - • Dr.Sivaraman #மருத்துவ... Dr.A.Veni - Neurologist - SpeechLink - • Dr.veniநல்லுணவும் நல்வ... G.Anbazhagan MLA - Kumbakonam - Speech • நல்லுணவும் நல்வாழ்வும்...
19 сен 2022