மனதை இலகுவாக வைத்துக்கொண்டாலும் சமுதாயத்தில் நாம் இருக்கிற போது அடுத்துள்ளவர்களின் எண்ணங்களால் அவர்கள் செய்யும் செயல்களால் நாம் சிதறடிக்கப்படுகிறோம். மரணத்திற்கு யாருமே தயாரில்லை என்ற தங்களின் கருத்தில் நான் முரண்படுகிறேன். விருப்பம் உள்ளவர்களுக்கு சுகமானமரணம் வழங்கப்படும் என்று மட்டும் அரசு அறிவிப்பு செய்தால் நிறைய பேர் தயாராவார்கள் என்பது எனது கருத்து. மரணத்தின் நேரத்தில் ஏற்படும் வலிக்குத்தான் அஞ்சுகிறார்கள்.ஏன் நானே சுகமான மரணத்திற்கு தினமும் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். அதற்க்காக பிரார்த்தனையும் செய்கிறேன்.
சுகமான மரணம் .. கொஞ்சம் விளக்க முடியுமா .. நோய்வாய்ப்படாமல் இறப்பதா .. ??? மிக அதிகபடியான மது அருந்தினால்கூட சுகமான மரணம் வரும். தன்னை அறிந்தவர்கள் மட்டுமே மரணத்தை கண்டு பயப்பட மாட்டார்கள் .
Looks like JK wants us to use Rajasya Gunas to overcome Tamasic and Satva gunas to overcome Rajyasa since he only looks at mind purification. Good ofcourse there are steps beyond this which can be realized once the mind is cleansed. Nothing new here. Mind and memories cannot be You the Atman. If it was then you can freeze your brain and resurrect it when technology improves. Complete and utter BS !!
எனக்கு மரணம் பற்றி எந்த பயமும் இல்லை, என்ன நமக்கு பிரியப்பட்டவர்கள் எப்படி தாங்குவார்கள் எனபது மட்டுமே கவலை. ஆனா அதுவும் சில காலம் மட்டுமே வருத்தம் இருக்கும் என ஒரு சமாதானம். மரணம் இயல்பாக நடந்தால் போதும் அதை மட்டுமே இறைவன் கொடுத்தால் போதும்🙏🙏🙏🙏
அன்பிற்குரிய திரு முரளி அவர்களே ஜே கே அவர்களை அவரது சிந்தனைப்படிவங்களை நன்றாக செதுக்கிக்காட்டியிருக்கிறீர்கள். இறப்பு என்பது நினைவுச்சுமைகளை களைந்து விடுவது மட்டுமே என்றும் முக்தி ஆன்மா போன்ற பூச்சாண்டித்தனங்கள் அற்றது என்றும் அவர் கருதுவது ஒரு தெளிவான சிந்தனை ஓட்டம் என்றும் ஒரு பளிங்குப்புத்தகம் ஒன்றை உங்கள் விரிவுரையில் பக்கம் பக்கமாய் புரட்டிக்காண்பித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. இறப்பு பற்றி எண்ணுவது கூட ஏதோ ஒரு இருட்டுக்கடை அல்வா சாப்பிடும் இனிய நினைவு என்று அவர் படிவங்களை வைத்து காட்டியிருக்கிறீர்கள். இங்கு இரு சுமைகளை அழகாக காட்டுகிறீர்கள், சுமையை சுமக்காத ஒரு சுமை. சுமையில் சுமக்கப்படும் ஒரு சுமை. இரண்டுமே எண்ணங்கள் தான். இவற்றை எறிந்து விடுவதும் மீண்டும் இன்னொன்றை தன் தோளில் தூக்கிக்கொள்வதுமே இறப்பு அல்லது இருப்பு ஆகிறது என்று சிந்திப்பது மிக மிக அருமை. மீண்டும் நன்றி. அன்புடன் கவிஞர் ருத்ரா
நன்று... நல்ல பாடம்.. அறிவியல் நிரூபணம் ஒரு பொருளைப் பற்றிய அறிவின் எல்லை... தாண்டி பார்வை செல்லவில்யானால் 'இல்லை' என்பது தாண்டி பயணிக்க இயலாதவனின் பரிதாபநிலை .... ஜேகேயின் அறிவியல்...... அல்லது புரிதலை வெளிப்படுத்துவது....ஒரு பேராசிரியர் புத்தகம் எழுதுகோலின்றி மொழியின்றி கண்மூடி பாடம் நடத்துவது மிகவும் அருமை..அதை பார்வையற்ற காதுகேளாத மாணவர்கள் புரிதலை வெளிப்படுத்துவதும் ஒரு அறிவியல் கண்ணோட்டம்....பல ஜேகே குஞ்சுகள் உருவாக வாழ்த்துக்கள்...
பேராசிரியர் முரளி அவர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் . தத்துவம் (Philosophy) வேறு , மதம் (Religion) வேறு . தமிழ்நாட்டில் இரு சொற்களும் ஒன்றைப் போல் பயன்படுத்தப் படுகின்றன . இது ஆபத்தானது . ஏனெனில் மதங்களுக்குள் உள்ள சண்டைகள் , மதங்களுக்கு இடையே உள்ள சண்டைகள் உங்களின் தத்துவங்கள் பற்றிய பேச்சுகளுக்கு கிடைக்கும் பதில்களில் ஊடுருவ வாய்ப்பு உள்ளது . தத்துவம் என்பது முழுக்கவும் மதம் சாராமல் அறிவைக் கொண்டு தர்க்கம் மூலம் வாழ்வின் அடிப்படை கேள்விகளுக்கான விடை காணும் ஓயாத முயற்சி . எடுத்துக் காட்டாக " நான் யார் " என்ற கேள்விக்கு பல விதமான ஆய்வுகள் மூலம் உலகம் முழுவதும் தத்துவ வாதிகள் விடை காண முயற்சிக்கிறார்கள் . அதே போல் "நேரம் என்றால் என்ன ? உண்மை என்றால் என்ன ? நல்லது தீயது என்றால் என்ன ? " என்ற கேள்விகள் . ஆனால் எந்த தத்துவ வாதியும் " என் தத்துவம் தான் இந்தக் கேள்விக்கு தீர்வு " "என் விடை தான் சிறந்தது , மற்றதெல்லாம் மட்டம் , மற்றதெல்லாம் பொய் " என்று எந்த தத்துவ வாதியும் கூறுவதில்லை . அவனின் குறிக்கோள் ஆய்வு , தேடல் , பொய் விடைகளைக் களை எடுத்தல் . ஆனால் மதவாதிகள் " எங்கள் மதத்தின் விடை தான் சிறந்தது , மற்றதெல்லாம் பொய் , எதிரி " என்று உடனே கூறுவார்கள் . உங்களை நான் தலை வணங்கி பாராட்டுகிறேன் . ஏன் என்றால் , எப்படி ஒரு ஒளிப்பதிவு கருவி படம் எடுக்கையில் உள்ளதை உள்ளபடி படம் பிடித்துக் கொடுக்குமோ , எப்படி அது தன் நிறத்தை கொஞ்சமும் எடுக்கப் படும் படத்தில் கலக்காமல் , முழு நேர்மையுடன் படம் பிடித்துக் கொடுக்கிறதோ , அதைப் போல் நீங்கள் தத்துவ உலகில் உள்ள பற்பல தத்துவங்களை கொஞ்சமும் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகள் புகுத்தி கலப்படம் செய்யாமல் , தத்துவ வாதிகள் சொன்னதை உள்ளதை உள்ளபடி தெளிவாக , துல்லிதமாக எடுத்துக் கூறுகிறீர்கள் . இதெல்லாம் உங்களிடம் உள்ள ரொம்பப் பெரிய விடயம் . இது கல்வியில் மிகுந்த தேர்ச்சியும் முதிர்ச்சியும் உள்ளவர்களுக்கு மட்டுமே வரும் . உங்கள் பயணத்தில் உங்கள் பேச்சை கேட்பவர்கள் அவர்கள் சுயநலத்துக்காக எப்படியாவது மதத்தை புகுத்த முயல்வார்கள் . அந்த முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு நிற்பீர்களாக !! உங்கள் பணி சிறந்து தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நான் ஒரு ஆசிரியர்.பேராசிரியன் மட்டுமே .ஞானி யோ தத்துவ ஞானி யோ அல்ல.அதை த்தான் அவர் சொல்ல விரூம்புகிறார்.அவரூடைய மதமோ விரூப்பமோ கொள்கை யோ எதுவும் இல்லை."நான்" சிறிதும் இல்லை.அது மிகவும் கஷ்டப்.
அருமையான உரை. இறப்புக்கு பிறகு வாழ்க்கை இல்லை என்று சொன்னால் மண்ணில் குற்றங்கள் அதிகரித்து விடும். அதனால்தான் சமயங்கள் உண்மையில்லை என்று அறிந்தாலும் மறுமை உண்டு என்று கூறுகின்றன.
During 80s, I had an opportunity to listen JK’s lecture in person. It was one of the busiest place in Bombay city, just Opposit to VT station. The place was so crowded and noisy. But when I entered JK’s lecture hall, everything vanished. A pin drop silence was prevailed in the lecture hall. JK was speaking, in very very low voice. I noticed that His soft, but clear voice made soothing effect in the minds of the audience. He took a long gap between his each sentences. One should have enough patience to hear his lecture continuously. But I didn’t have the patience that time. Understanding JK’s message is really a tough job. You have explained it so beautifully so that anyone can understand. Well done Murali Sir. Thank You for such a rare video 👏
நமக்கு கொடுக்கபட்டிருக்கும் அல்லது நம்மிடம் இருக்கும் ஒன்றை - நமக்கு இஷ்டபட்ட விதத்தில் அமைத்து வாழ்க்கையை வாழவேண்டும். JK அதுபோல் செய்யாமல் அந்த ஒன்றை வெறுமணே பார்த்துகொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறாரா ? நம்மிடம் இருக்கும் ஒன்று களிமண் என்றே வைத்துகொள்ளுங்கள். அதை நம் விரும்பிய விதத்தில் ஒரு உருவமாக ஒரு Shape கொடுத்து ரசிப்பதிலேதான் அந்த களிமண் நம்மிடம் இருப்பதில் அர்த்தம் இருக்கிறது. வெறுமணே ஒன்றும் செய்யாமல் அந்த களிமண்ணை பார்த்துகொண்டிருப்பது அர்த்தமற்றதாக எனக்கு தோன்றுகிறது. பின் எதற்காக அந்த களிமண் நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது ?
இருக்கும் போதே வாழ்க்கை என்ன ஆகும் என்ற கவலையே பலருக்கு இறந்த பின் என்ன ஆனால் என்ன வாழும் போதும் எதையும் தடுக்க முடியாது இறந்த பின்னும் அப்படியே ! இது நான் கண்ட உண்மை வழிகாட்டியின் பின்னால் செல்லும் சுற்றுலா பயணிகள் போல் வாழ்வின் பின்னால் நாம் !
J .krishnamoorthy’s Lectures by your excellent wonderful high level knowledgeable lecturer presented in Tamil language . Very nice explanation. Lagu helpful for all. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உயிர் உள்ளபோதே , நம் " கடந்த காலம் " சுமையாகத் தொடராத , பாரமற்ற , சுதந்திரம் மலரும் மனம் புதுமையாக, இனிமையாக, இயல்பாக சிந்திக்கும். உண்மைகளை உள்வாங்கி உலகை நேசிக்கும்.
ஆண் பெண் இரு இனங்களுக்கும் ஒவ்வொரு உணர்ச்சிக்கு ஏற்ற அமிலங்கள் தான் சுரக்கின்றன ஆனால் சிந்தனைகள் மட்டும் வேறுபடுகின்றன ஆதற்கு காரணம் தன் வாழ்நாளில் தான் கண்டு கேட்ட நிகழ்வுகளோடு தனக்கு நிகழ்ந்த ஒரு செயலை அல்லது கேட்ட செய்தியை பொருத்தி பார்க்கும் போது புது சிந்தனைகள் பிறக்கும்
குணம் என்ற கிடங்கில் தான் எண்ணங்கள் சிறி சிறிதாக சேர்ந்து குவியலாக இருக்கிறது. இது கூடுவதும் குறைவதும் நம் வாழ்க்கையின் நிகழ்வுகளில் இருக்கிறது. குணமே ஒரு வித்தின் மறுசுழற்சிக்கு காரணமாக இருக்கிறது. ஒரு வித்தில் குணம் அற்றுப் போனால் அது மறுசுழற்சிக்கு பயன்படாது எல்லாமே ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவர்களுக்கு கிடைக்கின்ற அனுபவங்கள் தான். எல்லாவற்றிலும் ஏதேனும் உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது. நன்றி
Boolean logic படி வாழ்வு 1 ம் நிலை என்றால் மரணம் 0 நிலை. ஒன்று இருக்கையில் மற்றது இருக்காது. ஆனால் Fuzzy logic படி 1 க்கும் 0 வுக்கும் நடுவில் நிறைய நிலை உண்டு. அதைத்தான் நிறைய மதங்கள் சொல்கின்றன. ஆம். வாழ்வுக்கும் நிரந்தர மரணத்துக்கும் நடுவே உள்ள சில பக்கங்கள்.
என்று பிறந்தோமோ அன்றே இறப்பு நிஜமாகிவிட்டது.இடையில் வாழ்க்கை என்ற பயணத்தில் சிக்கிகொணடோம்.சரியான பயணம் செய்வது நமது முயற்சி.அறிவும் அனுபவம் நம்மை வழிநடத்தும்.
நான் உள்ளிட்ட உணர்வு உருவாக்கம் குறித்து புத்தர் விரிவாக விரிவாக எடுத்துரைத்துள்ளார் நீங்கள் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி விளக்கங்களை எடுத்து எடுத்து சொல்லு கையில் புத்தரின் கருத்துக்கள் நினைவுக்கு வருகிறது உங்கள் உரை விளக்கத்திற்கு மிக்க நன்றி உங்களுடைய அன்புக்கு நன்றி முனைவர் மூ ரமேஷ்
வணக்கம் தோழர், உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ,ஜே கிருஷ்ணமூர்த்திப் பற்றி அதிகம் பேசவும் தோழர் விழிப்புணர்வு மற்றும் எண்ணங்கள் குறித்து பேசவும்... ஜே கிருஷ்ணமூர்த்தி(உள்மனம் புரட்சி) மற்றும் மார்க்ஸ்(வெளிப்புரட்சி) இருவரின் கருத்தை எடுத்து பேசவும் தோழர்... நன்றி 🤍
வழக்கம்போல் இம்முறை யும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே. யு.ஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பற்றி ஒரு காணொளியை பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன். அவர் பல இடங்களில் ஜிட்டு.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களுடன் முரண்படுவதாக உணர்கிறேன்.
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்பதை ஏற்பதா? அல்லது கறந்த பால் முலைபுகா கடைந்த வெண்ணை மோர் புகா உடைந்து போன சங்கின் ஓசை ஒலியும் அதன் உட்புகா இறந்த பின்னர் மாந்தர் இங்கு பிறப்பதில்லை இல்லை இல்லையே என்பதை ஏற்பதா? என்கிற வினாக்களுக்கு புதிய பார்வையைத் தந்தீர்கள். நன்றி.
Thanks for ur video. Sir one doubt. Sir I lost my dad. Will he be able to remember his childrens after his death in athmalogam. His memory will be there by thinking of his wife and childrens. Kindly explain sir.
@siddharthwigneshmadhavan siddharthwigneshmadhavan "Don't try to know God first; love God first. Then He will tell you everything." This is what Yogananda says. Ansolute crap. How can one love something without even knowing it? This is indoctrination of the highest order. I wonder what he smokes!
@@chandraraj9803 இறைவனுக்கு கற்பனை உருவத்தை கொடுத்தவன் தான் ஆதாரமில்லாத கற்பனை உலகில் வாழ்கிறான். இறைவன் படைத்த இந்த பிரபஞ்சத்திடமிருந்து ஒரு உண்மையை அறியும்போது, அஞ்ஞான த்திடமிருந்து விஞ்ஞானம் பிறக்கிறது. நீங்கள் அறிந்ததை விட, ஒன்றும் அறியாமல் இறந்தவர்கள் எத்தனையோ பேர்கள். அது விஷயமில்லை. தன் அறிவு கொண்டு வேதத்தின் படி இறைவனை நம்பியவர்களை இறைவன் விரும்புகிறான்.
அறிவியல் எங்கிருந்து வந்தது இந்த பிரபஞ்சத்தை ஆராய்வதை அறிவியல் என்கிறோம் பிரபஞ்சம் ஒன்றும் மனிதனால் தோற்றுவிக்கபடவில்லையே விமானம் கம்பியூட்டர் இப்படி எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இருந்தாலும் அவற்றின் மூலக்கூறு இந்த பூமியிலதான் கிடைக்கிறது கண் பார்வையற்றவர்களுக்கு உலகம் இருட்டு என்றால் உலகம் இருட்டாக இல்லையே நமக்கு இறைவன் தெரியவில்லை புரியவில்லை என்பதற்காக இறைவன் இல்லை என்று ஆகிவிடாது.
Bhagavan Ramana Maharishi words - Why fear of death? Death can not mean non being , Why do you love sleep, but not death? The body dies , but the spirit that transcends it can not be touched by death.
உண்மை வெளியரங்கமாயிருக்கிறது.... உணர்ந்துகொள்ள தயாரா யில்லை அவ்வளவுதான்.... உணர்த்தியர்கள் முன்பும் இருந்தார்கள் இன்றும் இருக்கிறார்கள் இனியும் வருவார்கள்... இருந்தும் ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லாதவரை யார் உணர்த்தினாலும் இங்கு பலனில்லை.... பிறப்பிற்கு முன்பு எப்படி சூன்யமாக இருந்ததோ அப்படியே இறப்பிற்கு பின்பும் சூன்யமாக போகிறது.... இடையில் நம் இருப்பு என்பது தேவையின் பொருட்டு மட்டுமே.... இயற்கை அதன் தேவைக்காக எப்படி அனைத்தையும் படைத்ததோ அதைப்போல பத்தோடு ஒன்றாக தான் நாமும்... தேவை முடிந்தால் அழித்து விடும்... நமக்கு இயற்கை கொடுத்த இந்த சில காலத்தில் அதன் விதிகளை புரிந்துகொண்டு இயற்கைக்கு ஏற்றாற்போல் வாழ்ந்தாலே மகிழ்ச்சியும் அமைதியும் தானாக அமைந்து நிம்மதியான மரணமும் நமக்கு கிடைக்கும்.... ஆனால் எப்பொழுது புரிதல் இல்லாமல் இயற்கையை விட்டு விலகி கடவுள் மதம் ஆன்மா என்ற அறிவின் அகந்தை யில் நாம் மாட்டிக்கொள்கிறோமோ அப்பொழுதுதான் நம் எண்ணங்களால் நாம் சிதைக்கப்பட்டு நம்மை நாமே சிக்கலாக்கி இன்பமாய் அமையவேண்டிய மரணத்தை துர்மரணமாய் மாற்றிக்கொள்கிறோம்.... இன்பத்தை அனுபவிப்போம் துன்பத்தையும் ஏற்றுக்கொள்வோம் ..நம் இன்பம் அடுத்தவர்களை துன்பப்படுத்து கூடாது...நம் துன்பம் அடுத்தவர்கள் சிரிக்கும்படியாகவும் இருத்தல் கூடாது.... கால ஓட்டத்தில் சமநிலை யோடு துடுப்பு போட்டால் வீழ்ந்து விடாமல் ஓட்டத்தை நிறைவு செய்யலாம்.... பாக்டீரியாவுக்கு மறுபிறவி பற்றிய பயம் இல்லை.... திமிங்கலம் சடங்கு சம்ரதாயம் செய்து பிழைப்பதில்லை.... மனிதனை குழப்பியவர்கள் அவர்கள் அளவில் கட்டுப்பாடுகள் இன்றி சுகமாக வாழ்ந்து முடிக்கிறார்கள் .... குழம்பிய மனிதனோ இறந்தபின் சொர்க்கம் செல்ல சடங்கு வேண்டி உழைத்து அழிகிறான்... மனம்தான் பிரச்சனை.... மனதை கடந்து விட்டால் நாமும் கடவுளே .....
Is it correct to forget past experiences. Are they worthless. Only because of experiences we avoid mistakes. Further, belief on karma theory we fear on doing wrong things. Have I understood the lecture in a wrong way?
Thank you so much Sir for the wonderful explanations about the philosophy and about different personalities. It had changed and given so much positive and diversified insights to me personally….Great work 🙏🙏
Dear sir. It was very nicely explained. Thank you . Understand the JK it self a big task over explaining him will be very big task and you did nicely. . My understanding from this is, if clean the mind completely yes we will have fresh mind sure. But it may be as similar to the mind of Animals. Just try to think this with clean mind . 😊. Thank you sir. Have good upcoming days ..
For me, your lecture on J.K philosophy thoughts process especially psychological time, psychological death,intrinsic store house with lot of events, how to clean our collection of store house, his epistemological cleaning process ,methods, fresh thinking, deep observations, fresh observations, investigation, interpretation, interaction, arguments in each and every movements until to find truth like Socrates is inspired and will be helpful to me to ruminate further.
What I personally feel is …one should observe their self and find the truth for oneself.. every philosophy is unique and it is difficult to follow all.. some people follow a particular religion or philosophy according to their true nature.. anyways kudos to Prof. Murali for all the efforts 👏👏👏👏
there are many comments today and hence we can deduce that everyone is considering about death. out of fear? out of curiosity? is this against or affirm my faith declared death? JK had an inconsecquential death. How then can you describe a philosophers death?
I have been suffering about my way of life and my thinking , because YGK life believes are very much similar to my belief and way of life. It’s very co-incident I listen to your message, you solve my problem.
இறைவன் நம்பி நல்லவாழ்க்கை வாழ்ந்து பிறப்பை எவ்வாறு உறவுகள் வரவேற்கிறதோ அதுபோன்று இறப்பை இறைவன் துணையாக நின்று வரவேற்பான் என்ற எளிமையான ஆழமான நம்பிக்கை நம்மை இறப்பை பற்றிய புரிதலை எளிமையானதாக மகிழ்சியானதாக மாற்றும் நன்றி
வணக்கம் ஐயா. எனக்கு வயது 57. மலேசியாவில் இருக்கிறேன். ஆன்மா இறப்பு மறுபிறப்பு பற்றி அறிவேன். கடமைகள் முடிந்தது. கணவர் இறந்து ஓராண்டு ஆகிறது. எனக்கு மரண பயம் இல்லை. இப்போதே இறப்பு வந்தால் தைரியமாக ஏற்றுக்கொள்வேன். வாழ்ந்தது போதும் என்ற பக்குவம் உள்ளது. ஆடை என்ற இந்த உடலைத் துறக்க வேண்டும்...இது பற்றி தங்கள் கருத்து என்ன ஐயா...
Your videos are very focused to the topic and take a middle ground ! Very nice. I am a Rationalist. I see world in my personal experience than any dogma. If I have to say i always take Zen or JK view of life and teaching. I like is very fits speech on "No Path" i do read his book but never been in his study group. as he says there is no dogma!
Mr Murali thanks for a beautiful explanation. This is my understanding of what JK explained about dropping everything from your consciousness. I think he says drop everything instantly at the very moment that is the only way to do it, become a new person instantly, otherwise as you try to drop it over a period of time new images keeping adding to your consciousness (storage as you mentioned) and you can never get out of it cycle. I don’t know how to drop your entire consciousness of what defines you instantly.
Thank you for the wonderful thought provoking job you are doing. I am surprised to see the low subscription rates. Hopefully you will enrich more minds in the future.
வணக்கம் சார் நல்ல பதிவு பழைய உணவு உண்டால் உடலுக்கு கேடு அது போல பழைய விஷயங்களும் விஷம் தான் மனதுக்கு. நொடிக்கு நொடி விஷயங்கள் பழசு தான். நன்றியாய் இருக்கணும் மற்ற படி பிடிக்காத பிடித்த பழசுகள் விஷம் மனம் என்பதே இல்லை.மனம் என்ற சொல்லுக்கு வடிவம்* இல்லையே. காலத்திற்கும் வடிவம் இல்லை. மனிதனின் கண்டு பிடிப்பு "சொல் .." சொல்லுகும் உணர்வுக்கும் முழுமையான தொடர்பு இல்லை.ஒரளவு தான் நன்றி என்ற சொல்லுக்கு % ஆ போட முடியும். உணர்வு இதயம் சார்ந்தது உணர்ச்சி மன்ம் 1+ உடல்2 சார்ந்தது மன்ம், காலம் இந்த சொற்கள் கற்பனையில் கூட வடிவம் பெற இயலாது. Waste சொல் மட்டுமே உள்ளது. மனம் பொய் மனதிற்கு நிகழ்கால த்தில் நிற்க முடியாது (தஞ்சாவுர தலையாட்டி பொம்மை போல) ஏனெனில் மனம் இல்லை. கால் இல்லாதவன் நிற்பது சாத்தியமில்லை "மனம் உடலின் ஊனம்" காலத்திற்கு கால்கள் இல்லை: வேகமாக ஓடுவது போல் தெரிவது பொய் மாய தோற்றம் நிகழ்கால த்தில் வாழ்வது கடினமாக இருந்தாலும் awareness வச் சு சகித்து விழுங்கி practice பண்ணி (ஆரம்பத்தில்) தமக்குள் கடின பாவனை இல்லாமல்லகுவாகி கவனித்து((கண்ணி ருந்தும் பாராமல் காத்திருந்தும் கே ளாமல் வாயிருந்தும் பேசாமல்..நாலடியார்) 3 குரங்குகள் கண் வாய் செவி பொத்தி இருக்குமே அது போல. Symbolic representation like running stream of life. Thats all. Observer கு தேவை சகிப்பை விடவும் ஏற்றுக்கொள்ளு தலே. Individiality போய் விடும் reality கொஞ்ச கொஞ்சமாக வரும். Jesus உயிர்த்தெழுதல் என்கிறார். சமாதானம் உண்மையான மறுபிறவி. உடல் முடிவதற்குள் மீண்டும் விழிப்பு உணர்வு நிலையில் பிறந்து விட்டால் நாம் உடலில் இருக்கும் போதே மனதை நசுக்கி விட்டால் மனம் traval செய்யாத நிலையை வாழும் போதே பெறலாம் புதிய ஜென்மம் போல் அன்பு மயம் அன்பு செலுத்த முடியாது அது இருப்பது வள்ளலார் சத் சங்கம் போல சங்கம் Group வேண்டும்.அப்போது கடைபிடிப்பது எளிது. Team போல form பண்ணி சாத்திய படுத்தலாம். on line. .meet சத் சங்கம் போல அப்போது தான் dry ஆ இல்லா மல் ஆழமான புரிதலுடன் ஒரூ அமைதி அலை எழுப்பி உறங்குபவர்களை அவர்கள் தாமே விழிபடைய செய்யலாம். அவரவர்கள் அவரவர்ளுக்கு மீட்பர். என்று. Past future நூ ஓடும். மனம் ஒரு குரங்கு மூச்சு குரங்கு தான் speedaa விடும் மனம் தாறு மாறாகும் போது மூச்சு வேகமாகும். ஏதோ எனக்கு தெறிந்ததை reply செய்துள்ளேன் தங்கள் பணி அள ப்பரிய அன்பின் வெளிப்பாடு என்பதை உணர முடிகிறது. நன்றி மிக்க நன்றி