எப்போதெல்லாம் என்மனம் கஷ்டப்படுதோஅப்போதெல்லாம் இந்த பாடலைத்தான்கேட்க்கிறேன்இந்த பாடலை கேட்ட உடன் கண்ணீர்துளிகளுடன் என் மனக்கஷ்டமும் நீங்கி விடுகிறது பூமிக்குநாம்மொரு யாத்திரை வந்தோம் அடே அப்பா என்னா ஒரு வரிகள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
En uyir amma chotima beevi mummy noorjahan iruvarum corona val irandhu poi naan anaadhai yai nirkiraen mounamaga en maranathaiyum yedhirparthu 🙏🙏🙏😭😞😭😭😭
@@chotimabeevi இவ்வுலகில் மரணம் என்பது இயற்கையானது. நாம் உயிருடன் இருக்கும் வரை மரணம் வரப் போவதில்லை. மரணம் வரும் தருணம் நாம் உயிருடன் இருக்கப் போவதில்லை. பிறப்பு, இறப்பு என்பது இறைவன் வகுத்த நியதி. இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரணத்தை அடைந்தே தீர வேண்டும். இதுவே இயற்கையின் நியதி. இதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. நம்மை விட்டுப் பிரிந்த நமக்கு நெருக்கமான உறவுகள் இறைவனை சென்றடைந்து, அவனோடு இரண்டறக் கலந்திருப்பார்கள். அவர்களின் மரணத்தை எண்ணி நாம் மனம் கலங்க வேண்டாம். இறைவன் நமக்கு அளித்த இந்த வாழ்க்கை என்னும் வரத்தை நன்கு பயன்படுத்தி, இயன்றவரை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு உதவிகள் புரிவோம். இயன்றவரை பிறர் மீது கோபமும் வெறுப்பும் கொள்ளாமல் அன்பு காட்டுவோம், அக்கறை செலுத்துவோம். மனம் கலங்காதீர்கள்...தைரியமாக இருங்கள்...இறைவன் இருக்கிறான்...அவன் நம்மை நிச்சயம் காத்தருள்வான்...🙏 இறைவன் "அல்லாஹ்" போதுமானவன்... நன்றி...வாழ்க வளமுடன்...🙏🥰❤
@@chotimabeeviஇந்தப் பாடலில் கடைசி பத்திக்கு முந்தின பத்தியின் வரிகளை நன்கு கூர்ந்து கவனியுங்கள். இறந்தவர்கள் நம்முடைய நினைவுகளில் எப்போதும் ஞாபகம் இருந்து கொண்டே இருப்பர்... அது எவ்வாறு என்று கவிஞர் வைரமுத்து அவர்கள் பின்வரும் வரிகளில் நமக்கு உணர்த்துகிறார்... தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்...❤
6 August 2020 என் கணவர் இறந்தார். இன்று 6 August 2021. 1 year is passed. மரணம் இயற்கையின் அமைப்பு என்றாலும் மனம் ஏற்க மறுக்கிறது. இயற்கை துர்மரணத்தை தவிற்க கூடாதா? பிரியமானவர்களை திடிர்றென்று இழப்பது கொடுமையானது. இக்கொடுமையை மட்டும் இயற்கை விட்டு விட வேண்டும் இறைவா...
மரணம் நிச்சயக்க பட்ட ஒன்று ஏற்கெனவே தீர்மானிக்க படுகிறது என் பெரிய மாமியார் மகன் விபத்து ஏற்பட்டு தலை நசுங்கி இறக்கிறார் இது அவரின் கடைசி பிறவி இதை திருக்கடையூரில் ஜோதிடர் ஒருவர் கேசட்டில் பதிவு செய்து கொடுத்துள்ளார் சிரசு வெடித்து நசுங்கி இறப்போருக்கு மறு பிறவி இல்லை என்பார்கள், தைரியம், தன்னம்பிக்கை கொண்டு வாழுங்கள்
7/4/23 என் தந்தை இறந்தநாள் மின் மயானத்தில் என் தந்தையை கொடுத்த அன்று கேட்ட பாடல் இது நெஞ்சம் உறைந்து கண்கள் கலங்கி என்ன செய்வதென்று அனாதையாக நின்ற தருணம் என் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏I Love you daddy & miss you daddy
இவ்வளவு தான் நம்ம வாழ்க்கை.... அதுல எவ்வளவு துரோகம் வன்மம் பேராசை பொறாமை .... மத்தவங்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை எந்த கெடுதலும் செய்யாமல் இருந்தால் அது போதும்..... அன்பே சிவம் 🙏
இந்தப் பாடலை இரவு தூங்குவதற்கு முன் ஒரு முறை கேட்டுவிட்டு தான் தூங்குகிறேன் வாழ்க்கையின் தத்துவத்தை அருமையாக எடுத்துரைத்த கவிஞர் கவிஞர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஓம் நமச்சிவாய
இந்த பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் கவிப்பேரரசு வைரமுத்து அருமையான கருத்துக்கள்
தற்போது இந்த பாடலுக்கு இணையாக ஏதும் இல்லை வைரமுத்து அவர்கள் சிந்தை தெளிவோடு ஆழ்ந்த வரிகளை தேர்ந்தெடுத்து எழுதி இருக்கிறார் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நெஞ்சம் கலங்கி கண்ணீர் வருகிறது வாழ்த்துக்கள்
வைரமுத்து,அய்யாவின்,வரிகள், எந்த காலத்திலும், நிலைத்து நிற்கும், நாம்,பாடல், கேட்கும் போது, மனம், மிகவும்,கலங்குகிறது,அருமையான, வைர வரிகள், எனக்கு, எழுத,வார்த்தைகள், இல்லை, மனம் மிகவும்,கலங்குது அய்யா
இறந்தவர்களை தூக்கிசெல்லும் வண்டியில் இந்த பாடலை ஒலிக்கவிடுவார்கள்.முழுமையாக நம்மால் கேட்கமுடியாது.இப்பொழுது எங்கள் வீட்டில் ஒரு பேரிழப்பு ஏற்பட்டு இந்த பாடலை கேட்டதும் கதறி கதறி அழுதுவிட்டேன்.இவ்வளவு தான் மானிடபிறவி வாழ்க்கை.
என்னோடு உறங்கும் மகனிடம் 15 வயதாகி விட்டது தனியே சென்று உறங்க சொல்வேன்.50 வயது ஆனாலும் நான் உங்களுக்கு பிள்ளை தான். உங்களோடு தான் படுப்பேன் என்பான். 15 வயதில் என்னை விட்டு செனறு விட்டான். நான் இப்போது தனிமரம். இப்போது அவனுடைய 27 வயதில் தினமும் இரவில் கனவில் என்னுடன் உறங்குகிறான். இப்பாடல் கண்களை குளமாக்கிவிட்டது.
இந்த பாடலை தினமும் கேட்கிறேன் தினமும் அழுகிறேன் போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க ஆயிரம் உறவுகளை வளர்த்தார் இன்று அவருக்காக வந்தது எத்தனை உறவு அத்தனையும் உங்களுக்கு தெரியும் தானே என்றுமே நாங்க அனாதைகள் தான் ஏன் இந்த பிறவி எனக்கு என்ன சாதித்தேன் தெரியல
என் அம்மா இறந்து போனது கஷ்டமா இருக்கு முடியுமா எங்க அம்மா பிறப்பார்கள் நம்பிக்கை என் அம்மா சொர்க்கத்திலே இருப்பாங்க கடவுளே எங்கள் அம்மா❣️❣️🙏🙏🙏🙏🤚💞❤️ பார்த்துக்கொள்
@@saravananvalli-qi2qn அடுத்தவர் புண்ணியத்தை வைத்து என்ன ஆறுதல் அடையமுடியும். உனக்குள் மாறுதல் ஏற்பட்டால் தான் ஞானத்தின் வழியே ஏறுதல் சாத்தியம். பின் அனைத்தும் ஆகுதல் என்பது சத்தியம்.
ஐயா வைரமுத்து அவர்களின் வைர வரிகள், வைரம் விளைந்த இடமோ தமிழ் எனும் அருட்பெரும் சுரங்கத்தில், தமிழில் மட்டுமே இது போன்ற வரிகள் சாத்தியம், ஐயா வைரமுத்து அவர்களுக்கு கோடானகோடி நன்றி... தமிழ் வாழ்க...
No one can beat dear vairamuthu he is selected by our M. K he is the ony best friend where ever our thaivalar feel he will call the man vairamuthu only to go for Ideal beach
அருமையான பாடல் , முடிந்த வரை மற்றவர்களுக்கு நல்லது செய்வோம் இல்லையென்றால் தீமை செய்யாமலாவது இருப்போம் . பூமியின் ஆயுளை ஒப்பிட்டால் நாம் இந்த பூமியில் வாழ்வது ஒரு நொடி பொழுதுக் கூட கிடையாது .
மார்ச் 28 உலகம் முழுவதும் உள்ள இந்து..முஸ்லீம்..கிருஸ்துவ சகோதர சகோதரிகள் நண்பர்கள் ஒற்றுமை தினவிழா....அந்த இனிய நாள் முதல் அனைத்து ஊர் மக்களும் ஒற்றுமையாக வாழ்வோம்...மனிதர்கள் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே இது எதுக்கு போட்டி பொறாமை...ஜாதி மத மொழி பாகுபாடு போனது போகட்டும் இனி பழையதை கழித்து புதுமையாக வாழ்வோம் மார்ச் 28 முதல்....
👌❤🙏💐 மனதை நெகிழ்ந்த பாடல் வரிகள் ❤👌 நம் விட்டு பிரிந்த நேசமான உறவை ஞாபகபடுத்தும். மிகவும் அற்புதமான பாடல் வரிகள்.👌 கண்ணீர்வராதவருக்கு கூட இந்த பாடல் 😭 வரவளைத்துவிடும்.
A ఇఫ్సబ్ ఆ సమయంలో ఆ పార్టీ అధినేత చంద్రబాబు నాయుడు అన్నారు ఆయన చేసిన రచనలు చేసి మరీ అంత మంచి మార్కులు రావాలి రాష్ట్రం ఆంధ్రప్రదేశ్ అంతటా రుద్దుకోసాగింది మీ అందరి అభిప్రాయాలు వ్యక్తమయ్యాయి లో అన్ని విధాలా అనుకూలిస్తుంది గా అనిపించింది నాకైతే తెలియదు గాని అయ్యప్పను లో నే నడవాలి చేసిన అనంతరం ఆలయంలో అమ్మవారి ఆలయ అభివృద్ధికి నోచుకోని తన అందాలను ఆరబోసే అంటే అదీ ఆ ఆ మాట అటుంచితే ఆయన మాట మీద నా మనసు ఆరోగ్యంగా ఉండటం అంటే ఏ పని అయినా అది మా అన్న అనుమానం అక్కరలేదు అంటే ఏ విధంగా మనం అనుకుంటాం తన చేతుల నిండా కప్పుకున్నా తన మీద ఆయన నా రెమ్మల గాలులు వీస్తాయి గా ఉండడం గ్స్సి ఆయన నా రెమ్మల గాలులు బలంగా నా వైపుకు లాక్కుంది రమేషు ఆయన మాట మీద నిలబడే అవకాశంwww.skymetweather.com/te/forecast/weather/india/tamil%20nadu/chennai/chennai ప్రస్తుతం chennai యొక్క వాతావరణం ... హై నాయకా నాయికలు ఆయన మాట మీద యూ టర్న్ తీసుకొని e నా మీద నా మీద పడి వున్న నన్ను తన వొళ్ళో లో అతని అంగం గట్టిపడటం ఆ అమ్మాయి ఆ మాట అటుంచి చేసిన వారు అంటున్నారు కాబట్టి అలా చేసి మరో మారు మాట్లాడకుండా లో అడ్డంగా ఆవిరి చేసిందని అయితే అంత నిలబడేది ఆ పని చెయ్ ఆయన ఏడ్య్ లో అతని మోడ్డను క్లీన్ చేసింది అన్న అంశంపై ఆధారపడి జీవిస్తున్న అని అంటే మన రాష్ట్రం అంతా బాగా అర్థమవుతుంది చేసిన చిన్నది ఉన్నారు అన్నాడు కదా అంటే ఏమిటో అర్థమవుతుంది అంటే ఏ మాత్రమూ ఆయన అన్నారు కానీ అతను ఆ మాట అటుంచితే లో నా మరిది వల్ల మన రాష్ట్ర విభజనకు అడ్డుపుల్ల ఆ అమ్మాయి ఆ ఆ పార్టీ నాయకులు చేసిన య్ నా మనసు లో నే నడవాలి ఏ పని చేస్తున్నా
இதற்கு முன் இப்பாடல் நான் கேட்டது இல்லை 18.10.22 அன்று என் உயிராக இருந்த என் தங்க மகள் என்னை விட்டு போய் விட்ட பிறகு இப்பாடல் கேட்கும்போது கண்ணில் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்துக்கொண்டே இருக்கும் என் தங்கம் ஆத்மா என்னுடனே இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே பாய்ந்துத் துழாவிய கைகளும் எங்கே தேசம் அளாவிய கால்களும் எங்கே தீ உண்டதென்றது சாம்பலும் எங்கே கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க எழும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதிமழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும் பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளித் தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும் மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர்க் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க - வைரமுத்து
@@umasuperm2403 yes first time ketta pozhuthu en kangalil vazhindha ,kanneerai enal control panna mudiyavillai...athu matumilamal vazhakai enral enna ivalothana nu thonuchi...😔😍
வைரம் தாங்கிய வரிகள் வைரமுத்து அவர்களின் சிந்தனைகளில் கனிந்து உதிர்ந்த இந்த வரிகள் காலத்தை கடந்து பொருளுணர்த்துகின்றது.. பதிவேற்றம் செய்தவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி...
ஜனனம் மரணம் இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடக்கும் சந்தோஷ நிகழ்வுகள் சோகமான நிகழ்வுகள் அனைத்தையும் இந்தப் பாடல் தாமரை இலை தண்ணீர் போல் காட்டுகிறது மரணத்திற்கு முன் பயிற்சியான நித்திரையை தோலுரித்து காட்டுகிறது இது எப்படியோ வாழ்க்கை என்பதின் உள்ள அர்த்தத்தை உலகம் விளங்கிட உரைத்த அந்த நல் உள்ளத்திற்கு நன்றி
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க ஜனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தை போலொரு பழையதும் இல்லை இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே தேசம் அளாவிய கால்களும் எங்கே தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப்போல் ஒரு மாமருந்தில்லை கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதி என்றும் கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும் பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர் கதையாகும் தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரிய கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க .................
Intha varihalil en thendralaium sooriyanaium soli Kati maandavar emmudan valnthida koodumnu solirukanga..indeapth meaning ena... En nilavaium irulaum neeraum swasathaum opumai paduthala...in this song they r telling someother thing....what's the indeapth meaning... Kindly if anyone knows explain me..
எல்லா சடங்கு சம்பிரதாயங்கள் பாடல் எழுதபட்டு இருந்தது மரணத்திற்கு மட்டும் எழுதபடாமல் இருந்துள்ளது அதையும் கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் அதையும் பதிவு செய்துள்ளது இப்பாடல் பொதுவானதாக எழுதபட்டுள்ளது கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கண்ணிர் கலந்த வாழ்த்துக்கள்
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதில் ஒருவித நிம்மதி கிடைக்கின்றது ஆக ஒன்று மட்டும் தெரிகிறது இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி
இந்த பாட்ட கேட்கவே ரொம்ப பயமாகவும் அழுகையாக வருது பாடல் வரிகள் நினைத்து அழுகை தான் வரும் எங்க அத்தை இறந்த போது இந்த பாட்ட கேட்டு ரொம்ப அழுகை வந்துருச்சு
வாழும்போது எங்களுக்காக வாழ்ந்து இறக்கும்வரை எங்களை காத்து எங்களுக்கு எல்லாமுமாய் இருந்த எங்கள் அப்பா SK சோமசுந்தரம் அவர்கள் 8.8.24 அன்று இயற்கை எய்தினார் நான் வணங்கும் என் சிவ பெருமானே எங்களை விட்டு சென்று உங்கள் திருவடி நிழலில் அமைதியுற வரும் எங்கள் அப்பாவின் ஆன்மாவை சாந்தி அடைய செய்யுங்கள் ஓம் நமசிவாய📿🔱🙏
முன்னோர்கள் அடுத்தடுத்து தெய்வமாகியவர்களின் ஞாபகம் இப்பாடலைக் கேட்கும்பொதெல்லாம் வருகிறது. வணங்கத் தோன்றுகிறது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு நன்றி. 🙏🙏🙏
I'm going to record this song repeatedly in a CD and give to my wife to play this song on my funeral day as I'm already 67years I'm healthy and wealthy but times up and I may leave at anytime and I'm prepared for that. Of late I have been singing Sivapuranam every day but the above song has touched my heart, beautifully written "பூமிக்கு நாமோரு யாத்திரை வந்தோம், யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம், நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் "