எம் மதத்தவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துக்கள் நிறைந்திருப்பது தான் பௌத்தத்தின் தனித்தன்மை.புத்தர் பற்றிய இப்பதிவு மிகச்சிறந்த பதிவு. வழங்கியமைக்கு நன்றி. 👍👌🙏🙏🙏
அறியாமை என்ற இருளில் இருந்து நம்மை மீட்க வந்த மகான். ஆனாலும் நாம் இந்த உலக மாயை இருந்து விடுபட முயல்வதில்லை. புத்தத்தை தாங்கள் சாறு பிழிந்து கொடுத்துள்ளீர்கள். எல்லோரும் ஞானம் பெற வாழ்த்துக்கள்.
குற்றால அருவியில் குளித்து முடித்ததும் கிடைக்கும் இன்பம் போல் இருந்தது..மீண்டும் குளிக்க தூண்டுவது போல் ...மீண்டும் கேட்க தூண்டுகிறது...மனமார்ந்த நன்றி....
கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் சிறந்த வர்ணனை போன்றது உங்களின் கூற்று. வில்லிசைப் பாடகர் சுப்பு ஆறுமுகம் ஐயா கூட ஒருகால் இந்த விவரிப்பில் மயங்கக் கூடும். அன்புடன், V.GIRIPRASAD (70)
வாழ்க்கையின் அனுபவஞானம் அறிவு விழிப்புணர்வு இவைகளின் மூலம் கடவுளை காணலாம்....எவ்வளவு எளிமை ....அழகாக சொல்லிவிட்டார்....நான் புத்தரை நேசிக்கிறேன்......புத்தம் சரணம் கச்சாமி....சங்கம் சரணம் கச்சாமி....தர்மம் சரணம் கச்சாமி.....🙏
உங்கள் காணொலியைக் காண்பது மற்றும் விவரங்களை உங்கள் மூலம் அறிவது என்பது ஏன்னுடைய அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டன. உங்களுடைய பெரும் முயற்சிக்கும் மற்றும் நல்ல தமிழுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் அர்ப்பணிக்கன்றேன். நன்றி.
" அவருக்கிருந்த நல்ல விதமான ஆசை நமக்கும் இருக்க வேண்டும் என அவர் ஆசைப்படுகிறார் என நாம் புரிந்து கொள்ளலாம் " அருமை!! வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.
புத்தரின் ஆராய்ச்சியும் நான் யார்?ஆராய்ச்சியும் ஒன்ருதான் நான் யார்?ஆராய்ச்சியின் உச்ச நிலை வெளி(வெற்றிடம்)தான் நான் யார்?ஆராய்ச்சியில் தெய்வம் உட்பட எந்த விதமான மனபதிவும் இருக்காது தெய்வத்தையும் கடந்து அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி வெற்றிடத்தில் ஐக்கியமாவது ஆத்மாவின் பயணம் இது நாள் உனர்ந்த் உன்மை.
கெளதம் புத்தர் இந்தியாவில் பிறந்தற்காக பெருமை பட வேண்டும்.அவருடைய போதனைகளை பின்பற்றினால் இந்த உலகம் சொர்க்கமாக மாறி விடும். தங்களின் முயற்சிக்கு மிகவும் நன்றி.
பேராசாரியர் அவர்களுக்கு வாழ்த்துகளூம் நன்றி . வேதப் பிறழ்ச்சி (தவறு)இந்து மதத்தில் மட்டூம் அல்ல.உலகின் எல்லா மதங்களிலும் உள்ளது .வேதங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள கூடாது. பைபிள் கைகளை த்தரித்துப் போடு என்று சொன்னால் நாம் கைகளை வெட்டி விட முடியாது வேதங்களில் சொல்லப் பட்டு இரூப்பவைகளை அப் 30:24 படியே ஏற்றுக்கொ ள்ள மூடியாது.அறிவிய ஆன்மிகசமரச வாழ்வே சிறந்தது.
You have proven your hard work, ability & commitment about the task taken. It is our gift of your presence through the RU-vid. I can say that, you have done a good job to the present society. Thank you very much Sir.
தத்துவம் விசாரங்களையும் தத்துவ அறிஞர்களையும் நடுநிலை தன்மையுடன் தாங்கள் அளிக்கின்ற விளக்கங்கள் தங்கள் காணொளிக்கு மேலும் வலுசெர்கின்றன. தாங்கள் ஆற்றிவரும் தங்கள் சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள். சூ ஃபி ஞானிகள் பற்றி ஒரு காணொளியை அளிக்க வேண்டுகிறேன்.
ஐயா நிறைய உண்மை யான தகவல் களை உள் வாங்கி அதை அப்படியே பொழிவு செய்யாமல் உங்களுக்கான முறை கொடுத்து உள்ள பொழிவு மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது கோடி நன்றிகள் ஐயா 🙏🏾
பல வருடங்களாக கடைபிடிப்பது மட்டும் அல்லாமல் அதைப் பற்றி அதிகம் எழுதி முகநூல் மூலம் தெரிவிக்கிறேன். அதிகமாக சிந்திப்பதால் மனம் தெளிவாக இருக்கிறது. உங்கள் பதிவின் மூலம் மேலும் அதிகமாக தெரிந்துகொண்டேன். உங்கள் தத்துவ பதிவுகள் அனைத்தும் கேட்டு அறிகிறேன். மிக்க நன்றி🙏💕 பாராட்டுகள்.
உங்களின் இந்த வீடியோவை கேட்டுக்கொண்டிருக்கும் போது அருகில் இருந்த குழந்தை புத்தர் சிலையின் கண்களில் வித்தியாசமான ஒரு பார்வையை என்னால் பார்க்க முடிந்தது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
அய்யா வணக்கம் மிகவும் அருமை புத்தபிரான் இருந்த காலம் என் மனம் சென்று அவருடன் இருந்து அவரின் உபதேசங்கள் பெறுவது என்ற நிலையில் ஆன்மா பயணிக்கிறது விரைவில் பயணம் வெற்றி பெறுமா அவரது சாதி சமயம் மதம் இனம் கடந்த ஞானத்தை மதத்தில் திணித்து அவர் புகலை மங்க செய்து விட்டார்கள் அவர்தான் மீண்டும் நமது அறியாமையை போக்க அருட் பிரகாச வள்ளல் பெருமானாக வந்து உபதேசம் தருவதாக மனம் நினைக்கிறது உபதேச பாதையை அறிவித்து ஞான மார்க்கத்தில் செல்ல உதவிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
பகவான் புத்தர் - தர்மானந்த கோஸம்பி; தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ; பக்.334; ரூ.270 ; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18. பகவான் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். தர்மானந்த கோஸம்பி எனும் பாலி மொழி அறிஞர் மராட்டி மொழியில் எழுதியதன் தமிழாக்கம். பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் அந்தக் காலத்து அரசியல் நிலை, சமயநிலை, ஆன்மவாதம், கர்ம யோகம், சாதிப் பிரிவினை போன்ற தலைப்புகளில் அக்காலத்திய சமூகச் சூழல் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தர் குறித்து இதுவரை கூறப்பட்டு வரும் பல செய்திகள் தவறானவை என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய முடிகிறது. குறிப்பாக, புத்தர் போதிசத்துவராக இருந்தபோது வீட்டை விட்டு வெளியேறிய அன்று எவரிடமும் கூறாமல் சன்னன் என்னும் சாரதியின் உதவியோடு கந்தகம் எனும் குதிரையில் ஏறி அநோமா எனும் நதிக்கரைக்குச் சென்று ஆபரணங்களை சன்னனிடம் தந்துவிட்டு வாளினால் கேசத்தை மழித்துக் கொண்டு பின் தனியே நடக்க, குதிரை அங்கேயே இறந்துவிட, சன்னன் அரண்மனை திரும்பியதாகச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் புத்த பகவான் தாம் வீட்டைவிட்டுக் கிளம்பிய நிகழ்ச்சியைக் குறிப்பிடும்போது, "அப்போது நான் இளைஞனாக இருந்தேன். என் தாய், தந்தை எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. அவர்கள் ஓயாமல் அழுது கொண்டிருந்தனர். நான் அதனைப் பொருட்படுத்தாமல் தலையை முண்டனம் செய்து கொண்டு துவராடையால் உடலை மூடியவனாய் வீட்டிலிருந்து வெளியேறினேன்' என்று குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல புத்தர், மகாவீரர் போன்றோர் புலால் உணவை உண்டதற்கான ஆதாôரங்களையும் விரிவாக விளக்கியுள்ளார். கா.ஸ்ரீ.ஸ்ரீயின் மொழிபெயர்ப்பு அற்புதம். இந்த நூலில் உள்ளதை பிரிதிலித்துள்ளீர்கள்(சில கருத்துக்களை தவிர) . பேராசிரியர் அவர்களுக்கு நன்றி!
பட்டை தீட்ட பட்டதும் மெருகேரி யதுமான, அறிவுப்பூர்வமான அருமையான விளக்கம்முள்ள, உண்மையானதும், மற்றும் உயிரோட்டமான பேச்சு. பேராசிரியர் திரு முரளி சார் அவர்கள் வாழ்க பல்லாண்டு.அனேக நன்றிகள் நன்றி. நன்றி.
நன்றி சார் வாழ்த்துக்கள் இந்த சொற்பொழிவு போல் உலகம் முழுவதும் மக்கள் கேட்க தொடங்கி விட்டால் சகோதரத்துவம் சமத்துவம் நிரம்பி வழியும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
😂❤ அறிபவன் இல்லாமல்! அறிவு இல்லை! ! யார் க்குநிர்வாணம்! ! ஆத்மா வில் இருந்து வந்தது தான் ஆகாயம்! வேதம் கூறுகிறது! ! ஆத்மா ஞானம் மாறாதது! உலக ம்முழுவதும் அழிந்து விடும்! ஆத்மா மட்டுமே உள்ளது அழிக்க முடியாது! வேதம் கூறுகிறது! ! புத்தர் ஞானம் உண்மை தான்! ஞானம் பெற்ற வர் யார்! புத்தர் ஆன்மா! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம்! ! ! தமிழ் ழை விட. ஆதாரம் இல்லை! வாழ்க பாரதம் தர்மம்! வாழ்க புத்தர் ஆன்மா ஞானம்! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க தமிழ் ஆதாரம்! ! ! வேதம்! புத்தர்! சமனம்! சங்கரர்! ! எல்லா ம்! ஒன்று தான்! செல் லபட்ட! விதம் விதமாய்! உள்ளது! ! ! முக்தி! விடுதலை! நிர்வாணம்! பிரும்மம்! ஆத்மா ஞானம்! ! எல்லா ம்! ஒன்று தான்! !
புத்த பிரானோடு பயணிக்கவைத்து விட்டீர்கள் பேராசிரியரே.மனதில் ஒருதெளிவு தெரிவது போன்ற நிறைவு....நன்றி ஐயா.ஆசையே துன்பத்திற்கு காரணம்.கண்களின் இச்சையே துன்பத்தின் ஆசை .புத்தரின் மௌன மொழி அனுபவங்களின் புரிதல்....ஞானமே கடவுள்......ஆஹா நான் பாக்கியசாலி.....நீங்கள் நிறைய பேச வைண்டும்...
சமீப காலமாக உங்க பேச்சுட்களை கேட்டு வருகிறேன்.. மனம் அமைதியாக மாறுகிறது. எல்லா தத்துவங்களையும் அறிந்து அழகாக கூறுகிறீர்கள் . அறிவார்ந்த நண்பர்களை உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் காண முடிகிறது.
Sir Buddha teaching is superb. Mind is everything. Always keep watch your mind. Karmaa that is Doing good and bad never leave you is like Shadow is following our body is clearly explained by Buddha. Thougu you say it is introduction of Buddha but it covers full life of Buddha. Heartful Thanks to you Sir. Naa.Madhi Pondy
பேராசிரியர் முரளி ஜயா அவர்களுக்கு மிக்க நன்றி தலையும் இல்லை வாலும் இல்லாத இவரது உழைப்பு இந்த உலக மக்களுக்கு அனைவரும் பலன்கள் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதில் உள்ள முரண்பாடுகள் ஜயா உங்களுக்கு நன்றாகவே தெரியும். நன்றி.
நன்றி ஐயா. நீங்கள் வழங்கியுள்ள தத்துவ உரையில் புத்தரின் வாழ்வும் அவர் வழங்கிய மெய்மையும் முத்தான முதன்மை பெற்றது. நீண்ட நாளாக உங்கள் உரை வராதா என்று ஏங்கியிருந்தேன்.என் ஏக்கம் தீர்ந்தது. நன்றி ஐயனே.
தத்துவ பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களது பேருரை மனதில் நெகிழ்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. வார்த்தைகள் இல்லை விவரிக்க. உறுதியாக மேம்படுத்துகிறது. வணக்கம்
புத்த மதம் என்றால் என்ன என்று மிகவும் சுருக்கமாக எளிமையாக புரியும் வண்ணத்தில் விளக்கி விட்டீர்கள். இந்த காணொளியை கேட்பவர்கள் புத்தர் என்றால் என்னவென்று அடிப்படையை தெளிவாக புரிந்து அர்த்தம் கொள்வர் நண்பர்களிடம் அனாஆயசமாக பேசுவது போன்ற அனுபவம் கிடைத்த மாதிரி உரையாடியதற்கு மிக்க நன்றி Super. Thank u sir
I admire your flow of thoughts .unless one has the depth in the subject matter it is not possible I just cannot imagine the efforts you would have put in. May you live with good health and happiness to enlighten people like us who effortlessly lie down and listen to your lectures.
தங்களின் பதிவுகள் ஐ இப்போ தான் கேட்கிறேன். மிக அருமை. புத்த மதத்துடன் எனக்கும் கொஞ்சம் உறவு வந்தது. நான் 2002 இல் காசி சென்ற போது காயவுக்கும் புத்த கயாவுக்கும் செல்ல நேர்ந்தது. சரணாத் சென்ற போது ஒரு மண்டபத்தில் ஒரு புத்த துறவி தனக்கு 10 அடி முன்னாள் ஒரு கயிறு கட்டி வைத்திருந்தார். யாரும் அதை தாண்டி யாரும் செல்லவில்லை. நான் கொஞ்சம் துணிந்து அவரிடம் சென்றேன். அவர் மண்டபத்தில் திண்ணையில் ஒரு சிறிய டேபிள் முன்னாள் சம்மன மிட்டு அமரந்திருந்தார். என் தலையை மடக்கி தலையின் பின்னால் எழுத்தாணி கொண்டு எதோ எழுதினர். பின்னர் தான் தெரிந்தது அவர் தாலாய் லாமா என்பது. அதன் பின் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். புத்த மதம் கொண்டதனால் சீனா ஜப்பான் தென் கொரியா ஸ்டீவ்ஸ் ஜாப்ஸ் போன்றவர்கள் உயர்ந்த கண்டுபிடிப்புகள் ஐ உலகம் கண்டது.