மாணிக்க வாசகர் பிறந்த தாய் மண்ணின் மடியில் அமர்ந்து அவரின் ஞானபுரிதலை இறை அனுபவத்தை சமகாலத்திற்கு ஏற்றவாரு நடுநிலையோடு எங்களுக்கு தந்திருக்கிறீர்கள் நிச்சயம் அவன் அருளன்றி இது சாத்தியமில்லை நம் முன்னோர்கள் நமக்காக தந்த ஞான புதயல்களை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கின்ற உங்களின் பணி மகத்தானது நீங்கள் வாழ்க பல்லாண்டு ❤
வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், வேறொருவருக்கு எட்டாத புட்பம், இறைக்காத தீர்த்தம், இனி முடிந்து கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் கருத்தின் உள்ளே முட்டாத பூசை அன்றோ குரு நாதன் மொழிந்தது--பட்டிணத்தார். இந்தப் பாடலின் அர்த்தம் என்னவென்றால் கடவுள் நமக்குள்ளே இருக்கிறார் என்பதுதான். அதைத்தான் பட்டினத்து அடிகளார் வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், இன்னொருவருக்கு கிடைக்காத பூ, நீர் இறைக்காத தீர்த்தம், கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் என்கிறார். அவரின் குரு நாதர் அவருக்கு உபதேசித்தது. * * * இங்கு ஒரு அரசியல்: பிஜேபியினர் பெரியாரை எதிர்ப்பதை விட்டு விட்டு, பட்டினத்து அடிகளையும், வடகரை சிவானந்த பரமஹம்சரையும் அல்லவா எதிர்க்க வேண்டும்? வடகரை சிவானந்த பரமஹம்சரின் சித்தவேதம் கோவிலே தேவை இல்லை என்கிறது. பிஜேபியினரின் எதிர்ப்பு இவர்களிடம் எடுபடுவதில்லையே ஏன்? பெரியார் திகவினர் இதையெல்லாம் கவனத்தில் வைத்து பதிலடி கொடுங்கள். அரசியல் களம் இன்னும் சூடு பிடிக்கும். எங்களுக்கும் பொழுது போகும். * * * திருத்தொண்டர் புராணத்தை பெரியபுராணமாக்கிய புண்ணிய ஆத்மாக்கள், மாணிக்கவாசகப் பெருமான் மனம் லயித்து, கடவுளைக் கண்ட ‘ஞானத்தாழிசை பாடல்களை” வசதியாக திருவாசகத்திலிருந்து நீக்கி விட்டது வரலாற்றுத் துரோகம். எத்தனை பேர் சதிசெய்தாலும், உண்மை உறங்குவதில்லை. மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகம் என்பது புலம்பல். பக்திப் புலம்பல். சிவபெருமானிடம் பக்தி கொண்டு, அவர் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி புலம்புவது திருவாசகம். திருவாசகத்துக்கு உருகார், ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பார்கள். அப்படியான ஒரு ஞானப்புலம்பல் பக்தி இலக்கியம் தான் திருவாசகம். பக்தி மேலீட்டில் கருணை வடிவினன், கல்லில் உறைந்திருக்கும் ஒப்புயர் அற்றவன் என கடவுளை உருவடிவில் கண்டு மனத்தை இமைப்பொழுதும் மறக்கா வண்ணம் பக்தியில் மூழ்கி, காலம் செல்லச் செல்ல பக்தியின் வடிவம் மாறுதல் பெற்று எண்ணமில்லா மனத்தைப் பெற்று, ஓசையில்லா உலகிற்குள் மனது நுழைந்து, ஆங்கே ஆனந்த தாண்டவமாடிடும் எல்லையில்லா பெரும்பொருளின் அசைவோடு இயைந்து மனம் ஒன்றி மூழ்கிவிடும். மாணிக்கவாசகப் பெருமானின் உள்ளமும் அவ்வண்ணமே ஒன்றியது போலும். இல்லையெனில் ஞானத்தாழிசை பாடல்களை அவரால் எங்கணம் எழுதக்கூடும்? பக்தியில் மனம் லயித்து, அதன் அடுத்த நிலையான ஞானத்தில் திளைத்த காரணத்தால் தான் அவர் ஞானத்தாழிசை பாடினார் என்பதில் யாருக்கும் எள்ளளவு சந்தேகமும் வேண்டியதில்லை. படிக்கட்டு தேவைதான். அதற்காக படிக்கட்டிலேயே நின்று விட முடியாது அல்லவா? பக்தியின் அடுத்த கட்டம் கடவுளை தன்னுள் உணர்வது. அப்படியென்ன அப்பாடல்களில் மாணிக்கவாசகப் பெருமான் எழுதி இருக்கிறார் என்று பார்ப்போம்! இதோ கீழே, மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ஞானத்தாழிசை பாடல்கள். பாடல்-1 சுழியாகிய முனைகண்டபின் உற்றார் உறவற்றாய் சூதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய் வழியாகிய துறைகண்ட பின் அனுட்டானமும் அற்றாய் வழங்கும்பல நூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய் விழியாகிய மலர்கண்டபின் உயர் அர்ச்சனை அற்றாய் மெய்ந்நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய் அழியாப்பதி குடியேறினை அச்சம் பலவற்றாய் யாரொப்பவர் நிலையுற்றவர் அலைவற்றிரு மனமே! பாடல்-2 நெஞ்சிற் பொருளடி கண்டபின் நெஞ்சிற்பகை அற்றாய் நேசத்தொடு பார்மங்கையர் மேலும் நினைவற்றாய் மிஞ்சிச்சொலும் உரையாண்மையும் வீம்பும்இடும் பற்றாய் விரதங்களும் வேதங்களும் வீணாக மறந்தாய் அஞ்சும் உடல் அயலாய்க் கண்டபின் ஆசைத் தொடர்பற்றாய் ஆருந்தி திருக்கோயில் சிவம் அதுவும்தனில் உற்றாய் தஞ்சம் எனும் ஞானக்கடல் மூழ்குந்திறமாகித் தாள் சேர்ந்தனை குறைவேது இனி சலியாது இரு மனமே! பாடல்-3 நாசிநுனி நடுவே திருக்கூத்தாகிய நடனம் ஞானக்கண்ணால் அதனை நாடிச்செயல் கண்டு சீசீ என முரையற்று அனை சினமற்றனை உயிர்கள் செய்யுமந் நினைவற்றனை நேசத்துடன் கூடிக் கூசிக்குலவரவற்றனை கோளற்றனைப் பாவக் குடியற்றனை நலமுற்றனை குடியேறினை மேலாங் காசிப்புனல் தனில்மூழ்கினை கரையேறினை காட்சி கண்டாய் அரன் கொலுவாகிய சபை மேவினை மனமே!
திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) ஆத்மநாதர் கோவிலில் தாங்கள் குறிப்பிட்ட படி சிவலிங்கம் இல்லை. அம்மன் பாதம் மட்டும் தான். இது தவிர அங்கு கொடிக்கம்பம் கிடையாது, நந்தியும் கிடையாது.❤ தீபம் ஆவுடைக்கு மட்டும்தான். பக்தர்களுக்கு இல்லை. தேரில் மாணிக்கவாசகர் தான் வருவார். சிறந்த சிற்பங்கள் உள்ளன. மிக அருமையாக திருவாசகத்தை எடுத்துக் கூறினீர்கள். இன்று காலையில் திருவாதவூர் மாணிக்கவாசகர் நினைவிடம் சென்றிருந்தேன். தற்போது அங்கு திருவாசகம் முற்றோதல் மண்டபமும் தங்கும் விடுதியும் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பதிவிற்கு மிக நன்றி ஐயா. சில நாட்களாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன். வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளுக்கும், மனதில் எழும் பல கேள்விகளுக்கு பதிலாக இந்த பதிவு மட்டுமல்ல உங்களுடைய பல பதிவுகள் இருந்தது. உங்கள் தேடுதல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அய்யா...🙏 மாணிக்கவாசகர், யாம்...பெயரை மட்டுமே அறிந்திருக்கிறோம்,அவ்வளவே. இன்று தெரிந்தவரானேன். ஒரு சிறந்த தமிழ் ஆசிரியரின் பள்ளியில் பயிலும் மாணவனாக இருக்கிறேன். நன்றியுடன்... க.மனோகரன் சென்னை.
ஐயா துயரம் ஒரு உருவாக்கப்பட்ட மாயை இன்பம் தான் வாழ்க்கை. அன்பே சிவம். நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு மட்டுமே உலகை சொர்க்கமாக மாற்றும். மற்ற அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட இணம் என்ற யூத கோட்பாட்டின் சூழ்ச்சியே ❤
மனிதருள் மாணிக்கமானவரைப் பற்றியும் அவரது பெரு வாசகமான திருவாசகத்தின் நுட்பத்தை பற்றியும் அணுகியதற்க்கு மனமார்ந்த நன்றிகள், முரளி சார் தொடர்க உங்கள் பணி, வணக்கம்
பாரதியின் பரசிவ வெள்ளம் பகுதியைப்போல் இந்த ஞானத்தாழிசையும் பரவலாக பேசப்படாத பொருளாக இருக்கிறது இதைப்பற்றிய விரிவாக ஆழமான மற்றுமொரு காணொளியை எதிர்பார்க்கிறேன்
ஐயா மிக அருமையான உரை இது சைவத்தில் தனித்துவமானவர் மாணிக்கவாசகர் இவர் காட்டிய நெறி சமய சன்மார்க்க நெறி என்று பயின்றுயிருக்கிறேன் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கில் ஞான நெறியை கடை பிடித்து நம்கெல்லாம் வழிகாட்டியாக பேரறிவர். வள்ளலாருக்கு வழிகாட்டியாக இருந்தவர் சமயசன்மார்க்கத்தையும் கடந்து சுத்த சன்மார்க்கத்தை வள்ளலார் நமக்குக் காட்டினார் ஆனாலும் திருவாசகத்தை தன் தலைமேல் வைத்துக்கொண்டாடினார் வள்ளலார். அப்பேற்பட்ட மாணிக்கவாசகரைப் பற்றி தாங்கள் உரையாடியது தமிழ் ஞானப்பரப்பின் உன்னத தருணம் என்றுணர்கிறேன் ஆனாலும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதையும் புரிந்து கொள்கிறேன் மாயை பற்றிய கோணம் சைவசிந்தாத்தில் வேறு அத்வைதத்தில் வேறு இரண்டும் தொடர்பு படுத்த முடியாதது. இதுபற்றிய புரிதலை முன்னெடுக்க வேண்டும் என்று பணிவுடன் விண்ணப்பிக்கிறேன் என்றென்றும் உண்மைத் தேடலிலுள்ள எளியேன்
இப்பதிவுக்கு ❤ நன்றி சார்.தமிழாசிரியர் சொல்லித்தந்த மாணிக்கவாசகரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஒரு மாணிக்க வாசகரை காட்டியமைக்கு மிக்க நன்றி சார்.இவரைப்பற்றி கட்டாயம் இன்னொரு பதிவைத் தாருங்கள் சார்.நம்நாட்டில் அறிவியல் ஞானம் ,தேடல்,தெளிவு இப்படி அனைத்தையுமே கடவுள் என்ற கட்டமைப்பில் திணிக்கப்பட்டது தான் நம் பலகீனமே.தத்துவ பேராசிரியரின் விளக்கம் ஆத்மார்த்தமாகவும், அறிவுப்பூர்வமாகவும்.....
சந்தோஷம் வாழ்க வாழ்வாங்கு பரஞ்சோதி மகான் அவர்களின் நேரடியான சீடர் பரஞ்சோதி ஞான தந்தைஞான ஒளிமகான் அவர்கள்பாரெல்லாம் பரஞ்சோதி என்றஆன்மீகஅ ரியநூலில் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உரை எழுதியுள்ளார்கள் என்பதை ஞானத்தந்தை ஞான ஒளி மகான் அவர்களின் சிஷ்யை என்ற முறையில் உங்களுக்கு தகவல் தெரிவித்துகொள்கிறேன்.. குருவேசரணம் சந்தோஷம் .
வனிதா மகாலிங்கம் சந்தோஷம் வாழ்க வாழ்வாங்கு பாரெல்லாம் பரஞ்சோதி என்ற நூலில் ஞான தாழிசைக்கு ஞானத்தந்தை ஞான ஒளி மகான் அவர்களே உரை எழுதி உள்ளார்கள்.சந்தோஷம்.
ஐயா பணிவான வணக்கங்கள் மாணிக்கவாசகர் சுவாமிகளுடைய தவ அனுபவத்தை சிலேடை சூட்சுமமாக எழுதியுள்ளதை தாங்கள் வாசித்து அதற்கு விளக்கம் தருவது எங்கள் மிக மகிழ்ச்சி சந்தோஷம், வாழிய பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
I read and listen thiruvasagam everyday and went to Avudayar koil but never visited thiruvadavoor. Because of this video I could see his birth place. Thanks
Arutperum jyothi. One of the finest videos about spiritual knowledge and very important for spiritual aspirants. The news that Ramana maharishi and Vallalar followed and preached this to all aspirants is very interesting. Looking forward to your sequel on the same topic. May the almighty bless you in all your faithful endeavours and immortality.
And that was an excellent teachers view and analysis of the great works of mahan manikya vachakar. Besides appreciating the relevance to the present the underlying principles the possibilities of realizing realities at elevated levels thro individual efforts and the necessity of essential flair and relevant state and the assurance to experience the that state surpassing all mental constructs and practices is well brought out. As ever sri Murali 's talks are pretty impressive and leaves the reader for a deeper reflections. Congratulations mixed Thanks.
Without doubt one of the best explanations.I am grateful to you for the illumination. The mere reading of this important text prompts one to go deeper into spirituality.Very inspiring
மனமாற்றுப் போகும் பொழுது சுவாசம் பூஜ்ஜியம் ஆகும் சுவாசமே அற்று போகும் ஆனால் உயிரோடு தான் இருப்போம் இதயமும் நின்று போகும் ஆனாலும் உயிரோடுதான் இருப்போம். பயமற்று போகும் உண்மையை தெளிந்தார்க்கு பயம் பூஜ்ஜியம் ஆகும்
மிக அருமையான விளக்கம்.மனமே சிவம்.ஆத்மநாதர் கோவிலில் அருவம் தான் வழிபாடு.இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இறை தூதர் தான் மாணிக்கவாசகர்.அகங்காரத்தை அகற்றி.ஈசனை சிந்தையில் நிறுத்தி .பேரருளை பெற்று .பெரு வாழ்வு பெறுவோம்.ஓம் நமசிவாய வாழ்க.
மிக நல்ல பதிவு சார். 9ஆம் நூற்றாண்டு என்பது தான் சரியான காலம் என தோன்றுகிறது. அவரது பிறப்பு என்பது தற்போது அவசியம் போல தெரியவில்லை. நிச்சயம் அவர் வைதிக மரபை கொண்டவராக கொள்ள இயலாது. திருவாசகம் முழுவதும் சாத்திரப்பாடல்கள் தான். சைவ சித்தாந்த நூல்களில் மிக உண்ணதமான நூல். ஏதோ ஒரு கிளை நூலும் அல்ல. ரமணர் அவர்களுக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை, பதிவில் இது அவசியமும் இல்லை..
Thank you Professor Mr. Murali, once again for bring such wonderful information - again controlling the breathing to enlightenment for wisdown and see the God as in self-realization. It is excellent catch difference between sivasim and vinavisim--in self-realization I /we become God as Brahnan as per advidam whereas Vinavisam we could not become God as dual principles. Manickavasakar influenced lot of people for shaping Sivasiam. After earning from you about 52th book . I get remember the thiught that quoted i Upanisads " They whowirship ignorrance enter blind datkness, and they who deligh in knowledge enter darkness,as it were, yet deeper". In that deep darkness we may find the light. Yhe last conclusion section is really good. We all expect from you about your ponit of you as your self-realization as hou told. The supreme being shows multiple faces until we self-realiz our-self. Thanks once again for great effects and spending your valuable time.
26:48 மணி வாச்சகர் பிராமணன் குலத்தில் பிறந்தவர் என்பது தவறு. அவர் அக்கையர் அன்பின் பிடிப்பில் வளர்ந்தவர். அவர் அக்கையர் சோழ படை தளபதி களில் ஒருவரை மணக்க இருக்கையில் திருமண ஆகும் முன்பே தளபதி இறக்க அதன் காரணமாக கடைசி வரை தன் தம்பியை வளர்ப்பதிலேயே காலம் கடந்தவர் ஃவள்ளளார் மணிவாச்சகரை குருவாக உள்வாங்கி யவர். மரணமில்லா பெருவாழ்வு சமைத்திட்டவர்.உடம்பை துகள்களை (அணு வாக) கரைத்துக் காட்டிய விஞ்ஞானம் கடந்த மெய் ஞானி வேதித்தவர்ஃ🙏🙏🙏ஞானதாழிசை 12 பாடலை உடையது . அது சமையவாதிகளால் பக்தி காரணமாக மறைக்கப்பட்ட து. காரணம் முழுக்க முழுக்க ஓகம் சம்பந்தப்பட்ட தாள் வாசி ஓகம்ஃ👌👌👌
பிராமண குலம அல்ல எனபதே உணமை. 👏🙏 ஆதி சைவர குலத்தை சாரந்தவர As usual. These so called Brahmins falsifying history and act superior to all. Revolving around downtrodden Caste system!
ஐயா, மணிவாசகருடைய (ஞானத்தில் ஞான) இந்த ஞானத்தாழிசையைப்பேசும்போது அப்பர் ஸ்வாமிகளின் (ஞானத்தில் சரியை) அந்த ஒரு நாயகன் நாயகி பாவ திருவாரூர் பதிகப்பாடல் """" முன்னம் அவனுடைய நாமங்கேட்டாள்...."""" எவ்வளவு பொருத்தம் !!!! எவ்வளவு அருமை !!!!
மாணிக்கவாசகர் எழுப்பிய ஆலயம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோயிலாகும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் சி என் அண்ணாதுரை அவர்கள் ஆவுடையார் கோயிலில் உள்ள சிற்பங்களை மிகவும் வியந்து போற்றி இருக்கிறார்
தமிழ் மெய்யியலே உலகின் முதல் மெய்யியல். திருவாசகத்தின் most advanced version தான் திருவருட்பா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏 தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
Very good sir. Thank you for your effort. Towards the end you talk about the increasing population. My humble view point and as heard from masters, the only birth when one can experience karma is the "human birth", which also indicates that the only birth during which karma can be destroyed is also the human birth. Because only now we have this choice. Hence, being born as a human need bot necessarily mean that one has to suffer, but rather go through the experience with attention and acceptance while being conscious of our experience. While we continue to submit the pleasures and pains at the feet of the lord and keep doing our work. And keep seeking the truth, by grace of the divine this Sookshma sareeram will at some point in the journey realise that it is but a representtion of the karaNa sareeram and hence is nothing but the KaraNa itself. With my current knowledge / ignorance I can only accept my separation from the whole and pray for the truth to dawn. Until then continue my seeking being this limited self absorbed human. Thank you again for your effort. I used to wonder as to why manickkavasagsr had to write Thirukovayar after Thiruvasagam. I might be wrong. Thank you sir.
நன்றி பேராசிரியர் முரளி அவர்களே. இத்தனை த்த்துவ ஆசிரியர்கள் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சியல் ஈடுபடும் தாங்கள் ஒரு முதிர்ந்த ஆன்மீகவாதியாக இருக்குக் கூடும் என கருதினேன். தங்களின் ஆன்ம அனுபவத்தை உரிய நேரத்தில் வெளியிடப் போவதை எண்ணி பெரு மகிழ்ச்சி. “இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
ஜனங்க மறந்தாலும் உங்களை போன்றவர்கள் (ஜாதியை வைத்து பிழைக்கும் வியாபாரிகள்) மக்களை மறக்க விட மறுக்கிறீர்கள் நீங்களும் உங்கள் குடும்பத்தின் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய ஓம்
Please bring out a video all about Paranjothi Mahan ,his life and teachings your videos are of great interest to many who want to know and understand about the great spiritual masters thanks for your great service.
Dear brother, it's a very profound talk. I will listen to it again with the text of thiruvasagAm.. very deep. Please bring the talks as a book, so that we can refer it again. Rk