ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஐயா திரு. வரதராஜன் சார் அவர்களுக்கு வணக்கம். முன்பெல்லாம் உங்கள் பேச்சுக்களை கேட்கும் போது உங்களை மரியாதைக்குரிய இடத்தில் வைத்திருந்தோம். ஆனால், இந்த நிகழ்ச்சியில், நீங்கள் தலைவரின் உண்மையான ரசிகராக இருந்து பேசியுள்ள அற்புதமான பேச்சை கேட்கும் போது, உங்களை மரியாதைக்குரிய இடத்தில் மட்டும் வைக்காமல், எங்களின் பாசத்திற்குரிய அண்ணன் என்ற அன்பான இடத்தில் வைத்து உங்களுக்கு வணக்கத்தையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ஐயா.
நான் என் வாழும் நாளில் இரண்டு முறை,இருநூறு அடி தொலைவில் நின்று அவரை பார்த்திருக்கிறேன், அவரைப்போல் ஒரு தங்கமானவ- ரை இன்றுவரை நான் பார்த்தது இல்லை.06.04.2023.Thu.
அய்யா மிகவும் மகிழ்ச்சி மக்கள் தலைவர் எம் ஜி ஆர் பற்றி உண்மையான செயலை பற்றி உண்மையை பேசிக் கொண்டே இருப்பதால் மிகவும் சந்தோஷம் அடைகிறேன் என்றென்றும் பொன்மனசெம்மல் புரட்சி தலைவர் மக்கள் நாயகன் எம் ஜி ஆர் மறையாது அய்யா உண்மை தொண்டன் தலைவர் ரசிகன் நான்
மூன்றேழுத்தில் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் கடமை அது கடமை என உள்ளத்தில் கடமை உணர்வை விதைத்தவர்.தனக்குப்பின்னரும் அம்மாவை அடையாளம் காட்டியவர்.தமிழகத்தின் தனி சிறப்பு.மிகவும் அருமையான பகிர்வு . வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஐயா எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் கண்களும் காவடி சிந்த ஆகட்டும் பாடல் வரிகளில் , நாடெல்லாம் உன்னைக் கண்டு புகழ் பாடட்டும் , உன்னாலே மக்கள் என்னம் நிறைவேறட்டும் . கொள்கையிலே அன்பு ஒளி வீசட்டும் , கோளையும் உன்னாலே புலி ஆகட்டும் அந்தப் பாடல்கள் வரிகள் வரும்போது #புரட்சித்தலைவர் அவர்களின் பொன்முகம் வெள்ளித்திரையில் ஒளி வீசும் போது கண்கொள்ளாக் காட்சியா அத்திரைப்படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் படம் வெளியானதிலிருந்து தொடர்ந்து15 முறை பார்த்து பார்த்து பரவசம் அடைந்தது எனது பொது வாழ்வில் அவரது வழியில் அன்றும் இன்றும் என்றென்றும் தினமும் உடற்பயிற்சிகளை செய்து எளிய தொண்டனாக நடமாடும் தொண்டன் V . சந்திரன் , 19 C 2 , யூனியன் டேங்க் ரோடு முதல் வீதி பெரியநாயக்கன்பாளையம் , கோவை மாவட்டம் PIN NO 641020 முக்கிய குறிப்பு அய்யா , திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தில் அளப்பரிய போராட்டத்தில் முக்கிய காலகட்டங்களில் கடுங்காவல் சிறை தண்டனை பெற்று 1962 ல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர் மறைந்த எங்கள் தந்தையர் , மறைந்த எனது தாயார் சகோதரிகள் உட்பட அனைவரும் என்றென்றும் , #புரட்சித்தலைவர் அவர்களின் உண்மையான விசுவாசிகள் எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை
பெருமைக்குரியவருக்கு நன்றியுடன். தாங்கள் MGR அவர்களிடம் உங்களுக்கு இருந்த ஈடு பாடுகளைச் சொன்னீர்கள். உண்மை தான் மக்கள் திலகம் மக்களுக்காக வாழ்ந்தார். எனக்கு மின் வாரியத்தில் 1971 லில் வேலைக்கு சிபாரிசு செய்தார். அன்று திமுக வின் பொருளாளர். நான் நேரில் வாகிணி ஸ்டூடியோவில் ரிக்ஷாக்காரன் படப்பிடிப்பு தளம் 7 லில் நடந்து கொண்டு இருந்தது. அந்த காலத்தில் எல்லாம் முடிந்தது?
ஐயா உங்கள் பாதந் தொட்டு வணங்குகிறேன். என் தலைவரின் கருணை உள்ளத்தை நீங்கள் விவரிக்கும் போது கண்ணீர் விட்டேன். நீங்கள் நெடுநாள் நலமுடன் வாழ மக்கள் திலகம் ஆசீர்வதிப்பார்.
என் உள்ளத்தில் நீண்டநாட்களாக இருக்கும் ஏக்கம் இது.புரட்சித்தலைவரின் பண்புகளையும்,மனிதாபிமானத்தையும்,முதல்வராக அவருடைய பணிச்சிறப்பையும் அவரிடம் பணியாற்றிய அரசு அதிகாரிகள் சொல்லவேண்டும்என்பதும் அதை இன்றைய இளைய தலைமுறை கடைபிடிக்கவேண்டுமென்பதும். இன்று அந்த ஆவல் நிறைவேறியது. நன்றி திரு.வரதராசன் சாா். நன்றி CTT.
வரதராஜன் ஐயா அவர்கள் மக்கள் திலகம்'எம்ஜிஆர் அவர்களைப் பற்றி பேசிய அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன் நன்றி ஐயா.சைதை துரைசாமி ஐயா அவர்கள் மற்றும் ஐயா வரதராஜன் அவர்கள் இன்னும் மக்கள் திலகம்'எம்ஜிஆர் உடன் பயணித்தவர்கள் அனைவரும் கட்சியில் இணைந்து அதிமுக கட்சியில் தலைவரின் பெருமைகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பது தலைவரின் தொண்டனாக எனது விருப்பம்
ஐயா எங்கள் இதய துடிப்பு எங்கள் ஆண்டவர் கடவுள் எம்ஜிஆர் அவர்களை பற்றி பேசிய உங்களுக்கு கோடி நன்றிகளையும் வணக்கங்களையும் என் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் தாங்கள் ஆண்டு பல நீண்டு வாழ எல்லாம் வல்ல இறைபகவான் எம்ஜிஆர் அவர்களை பிராத்திக்கிறேன் ஐயா தாங்கள் சுகமாக நீண்ட காலம் வாழ வேண்டும் நன்றி வணக்கம் ஐயா
சார் MGR, அம்மா இவர்களை நீங்கள் பாசத்தோடு நினைவு கூர்வது என் போன்ற ADMK தொண்டர்கள் கண்ணீர் வர வைக்கிறது. MGR தொண்டர்கள் மற்ற கட்சி உறுப்பினர் போல் இல்லை. ரத்த பந்தம் போல் வாழ்கிறோம்.உங்களுக்கு நன்றி. நன்றி.
அருமை அருமை அருமை அருமையிலும் அருமை. கடந்த கால வரலாறு சுவடுகளை தூசி தட்டி இளைஞர்கள் பார்வைக்கு கொண்டு வந்த நண்பருக்கு என் தலை சாய்ந்து வணங்குகிறேன். உங்களை வாழ்த்து வதில் பெருமை அடைகிறேன் தர்மத்திற்கு வேறு பெயர் என்றால் அது எம் ஜி ஆர் ஒருவரே என்று சொல்ல வைத்த காலம். எம் ஜி ஆர் வாழ்ந்த காலம். இன்றைய இளைஞர்கள் டுபாக்கூர் அரசியலை நம்பி நாசமாக போவது கண்டு வேதனை அளிக்கிறது. . இந்த சூழ்நிலையில் ஒரு விழிப்புணர்வு தருவதாக இருக்கிறது உங்கள் பதிவு. நன்றி ஜெய்ஹிந்த்
அருமையான பேச்சு... ஒரு மிகப்பெரிய புனிதமான மனிதத்தன்மையுள்ள மனித நேயனின் மறுபக்கத்தை வெளியுலகிற்கு எதார்த்தமான முறையில் தாங்கள் பேசுவதும் எம் தங்க தலைவரின் புகழுக்கு மேலும் மகுடம் சூட்டும்....
நேதாஜி ஐயா! புரட்சித்தலைவர் அவர்களை இன்றும் நினைவுகூர்வது பாராட்டத்தக்கது! வாழ்த்துக்களுக்குரியது! நீங்கள் சொல்வதுபோல மக்கள் திலகம் போல தலைவர் அன்னதானம் செய்த தலைவர் போல யாரும் கிடையாது! நன்றி ஐயா!