கடந்த வெள்ளியன்று (செப்டம்பர் 1) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்தகொண்ட உதயநிதி ஸ்டாலின், இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்களிப்பு என்ற தலைப்பில் இருந்த கேலிச்சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் மாநாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த பெயரை வாழ்த்தி பேசினார். “சனாதனத்தை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமாக தலைப்பு வைத்துள்ளீர்கள். அதற்கு எனது வாழ்த்துகள்,” என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு தற்போது தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. அவர் பேசியதற்கு மறுநாளான சனிக்கிழமையன்று (செப்டம்பர் 2), பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மால்வியா உதயநிதி ஸ்டாலின் பேசிய காணொளியை பகிர்ந்து, சனாதன தர்மத்தை பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுப்பதாக குற்றம் சாட்டினார்.
#UdhanidhiStalin #SanatanDharma #Hindu
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
3 сен 2023